சம்பள வெட்டு: ஆகஸ்ட் 1 முதல் முதலாளிகள் மனிதவள அமைச்சிடம் தெரிவிக்க தேவையில்லை

சம்பள வெட்டு: ஆகஸ்ட் 1 முதல் முதலாளிகள் மனிதவள அமைச்சிடம் தெரிவிக்க தேவையில்லை

1 mins read

பத்து அல்­லது அதற்கு மேற்­பட்ட ஊழி­யர்­க­ளைக் கொண்­டுள்ள முத­லா­ளி­கள், செல­வுக் குறைப்பு என்­ப­தன் பேரில் எடுக்­கும் சம்­பள வெட்டு குறித்து ஆகஸ்ட் 1ஆம் தேதி­யி­லி­ருந்து மனி­த­வள அமைச்­சி­டம் தெரி­யப்­ப­டுத்த வேண்­டி­ய­தில்லை.

இவ்­வாண்­டின் முதல் மூன்று மாதங்­களில் சம்­பள வெட்டு தொடர்­பில் மாதந்­தோ­றும் அமைச்­சி­டம் சரா­ச­ரி­யாக எட்டு முறை முத­லா­ளி­கள் தெரி­வித்து இருந்­த­னர். ஒப்­பு­நோக்க, 2020 ஏப்­ர­லில் கொவிட்-19 நோய்ப் பர­வல் முறி­ய­டிப்­புத் திட்­டம் தொடங்­கி­ய­போது, இந்த எண்ணிக்கை 1,713 ஆக உச்­சத்­தைத் தொட்டது.

கொவிட்-19 பெருந்­தொற்று, ஊழி­யர்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­தும் பாதிப்­பைக் கண்­ட­றி­ய­வும் முத­லா­ளி­க­ளுக்கு உரிய நேரத்­தில் உதவி வழங்­க­வும் 2020 மார்ச் மாதம் இந்த விதியை அமைச்சு அமல்­படுத்தி இருந்­தது.

இது ஒரு தற்­கா­லிக நட­வ­டிக்கை என்­றது அமைச்சு.