இலங்கை அதிபர் இன்று தேர்வு; களத்தில் மூவர்

இலங்கை அதிபர் இன்று தேர்வு; களத்தில் மூவர்

1 mins read
af14b212-2dd6-4f55-adaf-99e6c28adb0f
அதிபர் பதவிக்குப் போட்டியிடும் (இடமிருந்து) டலஸ் அழகப்பெரும, ரணில் விக்ரமசிங்கே, அனுர குமார திசாநாயக்க. படங்கள்: ஏஎஃப்பி, இணையம் -
multi-img1 of 3

இலங்கையின் புதிய அதி­ப­ர் யார் என்பது இன்று தெரிந்துவிடும்.

தற்­கா­லிக அதி­பர் ரணில் விக்­ர­ம­சிங்கே, 73, டலஸ் அழ­கப்­பெரும, 63, அனுர குமார திசா­நா­யக்க, 53, ஆகிய மூவ­ரின் பெயர்­கள் அதி­பர் பத­விக்கு முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளன.

முன்­ன­தாக, திரு அழ­கப்­பெ­ரு­ம­விற்கு ஆத­ர­வ­ளிக்­கும் நோக்­கில், அதி­பர் பத­விக்­கான போட்­டி­யி­ல் இ­ருந்து எதிர்க்­கட்­சித் தலை­வர் சஜித் பிரே­ம­தாச வில­கிக்­கொண்­டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 255 பேரும் இன்று நடைபெற இருக்கும் ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்று, புதிய அதிபரைத் தேர்வு செய்வர்.

கடும் பொரு­ளி­யல் நெருக்­க­டி­யால் நொடித்­துப்­போன இலங்­கை­யில் மக்­கள் போராட்­டம் வெடித்­தது. இத­னை­ய­டுத்து, அதி­பர் பதவி­யிலிருந்து வில­கிய கோத்­த­பாய ராஜ­பக்சே நாட்­டை­விட்­டும் தப்­பி­ ஓ­டி­விட்­டார்.

பிர­த­மர் ரணி­லை­யும் பதவி விலகச் சொல்லி போராட்­டக்­கா­ரர்­கள் வலி­யு­றுத்தி வந்­த­னர். அதை­யேற்று, முத­லில் பதவி வில­கு­வேன் என்று அவ­ரும் அறி­வித்­தார். ஆனா­லும் பதவி வில­காத அவர், தற்­காலிக அதி­ப­ரா­க­வும் பத­வி­யேற்­றுக்­கொண்­டார்.

இத­னி­டையே, இலங்கை பொது­ஜன முன்­ன­ணி­யின் பெரும்­பா­லான எம்.பி.க்கள், திரு அழ­கப்­பெ­ரு­ம­விற்கு ஆத­ர­வ­ளிக்க தயா­ராக இருப்­ப­தாக அக்­கட்­சி­யின் தலை­வர் ஜி.எல்.பீரிஸ் தெரி­வித்­துள்­ளார். அத்­து­டன், ஜக்­கிய மக்­கள் சக்­திக் கட்­சி­யின் தலை­வர் சஜித் பிரே­ம­தா­ச­வைப் பிர­த­ம­ராக நிய­மிக்­க­வும் தாங்­கள் தயா­ராக இருப்­ப­தாக அவர் கூறி­யி­ருக்­கி­றார்.