'போதைப்பொருள் ஒழிப்பு போர் மேலும் சவாலாகிறது'

'போதைப்பொருள் ஒழிப்பு போர் மேலும் சவாலாகிறது'

2 mins read

இந்த வட்­டா­ரத்­தில் உள்ள நாடு­கள் தங்­க­ளு­டைய போதைப்­பொ­ருள் தொடர்­பான சட்­டங்­க­ளைத் தளர்த்­தும் ஒவ்வொரு முறை­யும் போதைப்­பொ­ரு­ளுக்கு எதி­ரான சிங்­கப்­பூ­ரின் போராட்­டம் மேலும் சவால்­மிக்­க­தாகிறது என்று சட்ட, உள்­துறை அமைச்­சர் கா சண்­மு­கம் தெரி­வித்­தார்.

போதைப்­பொ­ருளை அறவே சகித்­துக்­கொள்ள முடி­யாத போக்கை சிங்­கப்­பூர் கடைப்­பி­டிக்­கிறது. நல்லவேளையாக, இந்த அணு­கு­மு­றைக்கு மக்­கள் அளிக்கும் ஆத­ரவு தொடர்ந்து அதி­க­மாக இருந்து வரு­கிறது என்று அவர் குறிப்­பிட்­டார்.

போதைப்­பொ­ருள் புழக்­கத்தை ஒடுக்க தவ­றி­வி­டும்­போது சமூ­கங்­கள் எதிர்­நோக்­கக்­கூ­டிய மிகக் கடு­மை­யான விளை­வு­களைப் பற்றி அர­சாங்­கம் தொடர்ந்து பொது­மக்­க­ளுக்கு விழிப்­பூட்டி வரும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

ஒன்­எ­ஃப்­எம் 91.3ன் 'தி பிக் ஷோ' என்ற நிகழ்ச்­சி­யில் அமைச்­சர் பேசி­னார்.

"இளை­யர்­கள் உட்­பட நம்­ மக்­களுக்கும் சமூ­கத்­துக்­கும் சரி­யான முடிவு­களை எடுக்க வேண்டி இருக்­கிறது என்­பதை எடுத்­துச் சொல்லி மக்களை இணங்க வைக்கவேண்­டிய தேவை இருக்­கிறது," என்றார் அமைச்­சர்.

கனடா, உரு­குவே போன்ற நாடு­களி­லும் அமெ­ரிக்­கா­வின் சில மாநி­லங்­க­ளி­லும் கஞ்சா சட்­ட­பூர்­வ­மான ஒன்­றாக ஆக்­கப்­பட்டு இருக்­கிறது.

கஞ்­சாவை மருத்­துவ நோக்­கத்­துக்­காகப் பயன்­ப­டுத்த சென்ற ஆண்டு மலே­சியா அனு­ம­தித்­தது. இதே­போன்ற ஓர் அணு­கு­மு­றையை எடுப்­பது பற்­றிய ஒரு திட்­டம் குறித்து இந்­தோ­னீ­சிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் விவா­திப்­பார்­கள் என்று சென்ற மாதம் அறி­விக்­கப்­பட்­டது.

தாய்­லாந்து கடந்த ஜூன் மாதம் போதைப்­பொ­ருள் பட்­டி­ய­லில் இருந்து கஞ்­சாவை விலக்­கி­விட்­டது.

இந்த வட்­டா­ரத்­தில் உள்ள நாடு­களின் மக்­களில் பல­ரும் போதைப்­பொ­ருள் புழக்­கத்­திற்கு ஆளா­கி­வருவதால் சட்­டங்­களை அமல்­ப­டுத்­து­வ­தில் அத்தகைய நாடு­கள் சிர­மத்தை எதிர்­நோக்­கு­கின்­றன.

ஆனால் சிங்­கப்­பூ­ரில் இப்­ப­டிப்­பட்ட ஒரு நிலை இல்லை என்று திரு சண்­முகம் குறிப்­பிட்­டார்.

போதைப் புழங்­கி­களை குற்­ற­வா­ளி­களாக நடத்­து­வ­தற்குப் பதி­லாக அந்­தப் பழக்­கத்தை அவர்­கள் விட்­டொ­ழிக்க உத­வும் வகை­யில் சிங்­கப்­பூ­ரின் சீர்­திருத்த முறை திருத்தி அமைக்­கப்­பட்டுள்ளது.

அதே நேரத்­தில், போதைப்­பொ­ருளை உற்­பத்தி செய்­கின்ற, கடத்­து­கின்ற நபர்களுக்கு எதி­ராக மிகக் கடு­மை­யான சட்­டங்­கள் தொடர்ந்து இங்கு நடப்­பில் இருந்து வரு­கின்­றன.

"இந்த வட்­டா­ரத்­தில் உள்ள இதர சில நாடு­க­ளைப் போல, உல­கத்­தில் வேறு சில நாடு­க­ளைப் போல சிங்­கப்­பூ­ரில் நிலைமை இருக்­காது என்­பதை போதைப்­பொ­ருள் பெரும்­புள்­ளி­கள் தெரிந்து வைத்து இருக்­கி­றார்­கள். ஆகை­யால், இங்கு வரு­வதை அவர்கள் தவிர்த்­துக் கொள்­கி­றார்­கள். நம்­மி­டம் அவர்­கள் பிடி­ ப­டும்­போது அவர்­கள் மரண தண்­டனையை எதிர்­நோக்­கு­கி­றார்­கள்.

"இத்­த­கைய நடை­முறை கார­ண­மாக சிங்­கப்­பூ­ருக்­குள் வரக்­கூ­டிய போதைப்­பொ­ரு­ளின் அளவு கணி­ச­மான அளவுக்கு குறைந்துள்­ளது," என்று திரு சண்­மு­கம் விளக்­கி­னார்.