தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ்நாடு அகதிகள் முகாமில் கேரள அதிகாரிகள் சோதனை

2 mins read
30f217ab-2710-4b81-8919-67b76004f880
திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் முகாமில் நேற்று தேசிய புலனாய்வு முகவை அதிகாரிகள் சோதனை நடத்தினர். படம்: தமிழக ஊடகம் -

தமிழ்­நாட்­டின் திருச்சி நக­ரில் இருக்கும் அக­தி­கள் சிறப்பு முகாமில், கொச்சியைச் சேர்ந்த தேசிய புலன்­வி­சா­ரணை முகவை அதி­கா­ரி­கள் திடீ­ரென்று நேற்று சோதனை தொடங்­கி­னர்.

அந்த முகா­மில் பல்­கே­ரியா, இலங்கை, தென்கொரியா, ரஷ்­யா, பிரிட்­டன், பங்­ளா­தேஷ், கென்யா, சூடான் உள்­ளிட்ட நாடு­களைச் சேர்ந்த 143 பேர் தங்கி இருக்­கிறார்­கள். அவர்­கள் பல புகார்­களை ஒட்டி விசா­ரிக்­கப்­பட்டு வரு­கி­றார்­கள். தமிழ்­நாடு சிறப்பு காவல்­துறை பிரிவு அந்த முகா­மிற்­குப் பாது­காப்பு வழங்­குகிறது.

பல்­கே­ரி­யா­வைச் சேர்ந்த அகதி ஒரு­வர் அந்த முகா­மில் இருந்து சென்ற ஆண்டு தப்பி ஓடி­விட்­டார். 2019ல் நைஜீரி­யர் ஒரு­வர் தப்­பிச் சென்­று­விட்­டார்.

திரு­வ­னந்­த­பு­ரம் அருகே 2021 மார்ச் மாதம் 300 கிலோ ஹெராயின், 5 ஏகே-47 துப்­பாக்­கி­கள், 1,000 வெடி மருந்­து­கள் கைப்­பற்­றப்­பட்டன. அதற்கு முன்­ன­தாக இலங்கையைச் சேர்ந்த சுரேஷ் ராஜன் என்­ப­வர் கைதானார்.

அவ­ருக்­கும் பாகிஸ்­தானைச் சேர்ந்த போதைப்­பொ­ருள் கடத்­தி­யான சலீம் என்­ப­வ­ருக்­கும் தொடர்­புண்டு என்­பது தெரி­ய­வந்­தது.

சலீம், துபாய், பாகிஸ்­தான், ஈரான் நாடு­க­ளுக்கு அடிக்­கடி பயணம் மேற்­கொள்­வார். சுரேஷ் ராஜன் பெய­ரில் கோடா­னு­கோடி பணப் பரி­வர்த்­தனை ஆகி இருப்­ப­தும் தெரி­ய­வந்­துள்­ளது.

"இலங்­கைக்கு போதைப்­பொரு ளும் ஆயு­தங்­களும் கடத்­தப்­ப­டு­கின்­றன. இதில் ராஜ­னுக்கு முக்­கி­ய­மான பங்­குண்டு. அவ­ருக்கு ஏற்­கெ­னவே விடு­த­லைப் புலி அமைப்­பில் இருந்த பலர் உதவி வரு­கி­றார்­கள்.

"இதன் தொடர்­பில் அந்­தக் கட்­ட­மைப்­பில் மேலும் யார் யாருக்குத் தொடர்பு இருக்­கிறது என்­பதைக் கண்­ட­றி­யும் நோக்­கத்­தில் சோதனை நடத்­தப்­ப­டு­கிறது.

"முகா­மில் இருக்­கும் ஏறக்­குறைய 20 பேர் புலன்­வி­சா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள். அவர்­களில் சில­ருக்கு சலீமு­டன் நேரடி தொடர்பு இருப்­ப­தா­கத் தெரி­ய­வந்­துள்­ளது," என நேற்­றைய சோதனை நட­வடிக்கை­யு­டன் தொடர்­பு­டைய தகவல் வட்­டா­ரம் கூறியதாக இந்­திய ஊட­கங்­கள் தெரி­வித்துள்­ளன.