எவர்கிரீன் உயர்நிலைப் பள்ளிக்கு அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தமது ஃபேஸ்புக் இணையப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஒரு பதின்ம வயது சிறுவன் காவல் துறையின் விசாரணையில் உதவி வருகிறான்.
பள்ளி ஊழியர்கள், வெடிகுண்டு மிரட்டல் குறித்து சிங்கப்பூர் காவல் துறைக்கு இன்று (21 ஜூலை) காலை 7.40 மணிக்குத் தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்ததும் காவல் துறை துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டதாகவும் அமைச்சர் பள்ளி வளாகத்தில் சோதனை நடத்தப்பட்டது என்றும் காவல் துறையினர் சோதனைகளை முடித்த பின்னர் பள்ளிக்கு அனுப்பப்பட்ட மிரட்டல் போலியானது என்று நிர்ணயித்தது என்றும் அமைச்சர் சான் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.