தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானது; 19 பேர் மருத்துவமனையில்

2 mins read
fa86df1e-59c0-46d0-8de1-0bc7faf780cc
விபத்துக்குள்ளான பேருந்து பக்கவாட்டில் சாய்ந்து கிடந்தது. இந்தப் பேருந்து, ஸ்ரீ மாஜூ எனும் மலேசிய நிறுவனத்துக்குச் சொந்தமானது. படம்: போம்பா கோலாலம்பூர்/ஃபேஸ்புக் -

மலே­சி­யா­வின் பேராக் மாநி­லம், ஈப்­போ­வில் இருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்­து­கொண்டு இருந்த ஈர­டுக்­குப் பேருந்து ஒன்று, மலே­சி­யத் தலை­நகர் கோலா­லம்­பூ­ரில் விபத்­துக்கு உள்­ளா­னது.

இதில் காய­முற்ற 19 பய­ணி­கள் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர். கடந்த புதன்­கிழமை நள்­ளி­ரவு 12.05 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்­தது. அந்­தப் பேருந்­தில் பய­ணம் செய்த 24 பேரில் ஒரு­வ­ரான ஆறு வய­துச் சிறுமி மட்­டுமே சிங்­கப்­பூ­ரர் ஆவார். அவ­ருக்­குக் காயம் எது­வும் ஏற்­ப­ட­வில்லை என்று ஷின் மின் சீன நாளி­தழ் தெரி­வித்­தது.

மற்ற பய­ணி­கள் மலே­சி­யர்­கள் எனக் கூறப்­ப­டு­கிறது.

கோலா­லம்­பூ­ரில் உள்ள ஜாலான் டமான்­சரா எனும் பகு­தி­யில் இந்தப் பேருந்­தின் ஓட்­டு­நர் கட்­டுப்­பாட்டை இழந்­த­தால் இது விபத்­துக்­குள்­ளா­ன­தாக நம்­பப்­ப­டு­கிறது.

இந்த விபத்து குறித்து பின்­னிரவு 12.40 மணிக்கு தனக்­குத் தக­வல் கிடைத்ததாக மலேசிய குடி­மைத் தற்­காப்­புப் படை அதன் ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தது. காய­ம் அடைந்த பய­ணி­கள் கோலா­லம்­பூர் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர்.

இந்­தப் பேருந்து அதன் பக்­க­வாட்­டில் சாய்ந்து கிடப்­பதை மலேசிய ஊட­கங்­களில் வெளி­யான காணொளி ஒன்று காட்­டி­யது. பேருந்­தின் முன்­கண்­ணாடி சிதைந்து காணப்­பட்­டது. பேருந்தில் சிக்­கிக்­கொண்­ட­வர்­களை மீட்க தீய­ணைப்­பா­ளர்­கள் அந்தக் கண்ணா­டியை உடைத்­த­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்­தப் பேருந்து, ஸ்ரீ மாஜூ எனும் மலே­சிய நிறு­வ­னத்­துக்­குச் சொந்­த­மா­னது. சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடையே பேருந்துச் சேவை­களை இது வழங்கு­கிறது.

கடந்த வார­மும் மலே­சி­யா­வில் இதே­போன்ற விபத்து ஒன்று நிகழ்ந்­தது. ஜூலை 13ஆம் தேதி அதி­காலை, சுற்­று­லாப் பேருந்து ஒன்று லாரி­யு­டன் மோதி­யது. மலே­சி­யா­வின் ஜென்டிங் ஹைலண்ட்ஸ் அருகே உள்ள விரை­வுச்­சா­லை­யில் இந்த விபத்து நிகழ்ந்­தது.

'டிரான்ஸ்­டார் டிரா­வல்' எனும் சிங்­கப்­பூர் நிறு­வ­னத்­துக்­குச் சொந்­த­மான அந்­தப் பேருந்து, சிங்­கப்­பூ­ரில் இருந்து ஜென்டிங் ஹைலண்ட்­சுக்கு சென்­று­கொண்டு இருந்­தது. அதில் பய­ணம் செய்த 20 பேரில் பெரும்­பா­லா­னோர் சிங்­கப்­பூ­ரர்­கள்.

இந்த விபத்­தில் காய­முற்ற இருவர், கோலா­லம்­பூ­ருக்­குப் புற­நகர்ப் பகு­தி­யில் உள்ள செலா­யாங் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.