சென்னை, தஞ்சையில் அதிரடி சோதனை; சிலைகள் மீட்பு

சென்னை, தஞ்சையில் அதிரடி சோதனை; சிலைகள் மீட்பு

2 mins read
dfe6b3f0-a87e-4389-8391-7aa6acd5bdb0
தஞ்சாவூரில் மீட்கப்பட்ட பழங்கால, அரிய சாமி சிலைகள். படம்: தமிழக ஊடகம் -

தமி­ழ­கத்­தில் பழங்­கால ஐம்பொன் சிலை­களை சிலை கடத்­தல் தடுப்­புப் பிரிவு அதி­கா­ரி­கள் மீட்டு வரு­கி­றார்­கள். கடந்த மூன்று மாதங்­களில் மட்­டும் 29 சிலை­களை அவர்­கள் கைப்­பற்றி இருந்தனர்.

அதன் தொடர்ச்­சி­யாக, கடந்த வியாழக் கிழமை தஞ்­சா­வூ­ரில் 14 ஐம்­பொன் சிலை­களை அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­த­னர். இவற்­றின் மதி­ப்பு பல கோடி ரூபாய் இருக்­கும் என்று மதிப்­பி­டப்­ப­டு­கிறது.

தஞ்­சா­வூர் சிவாஜி நக­ரில் கண­பதி என்­ப­வர் 'ஆர்ட் வில்­லேஜ்' என்­னும் நிறு­வ­னம் மூலம் நூற்­றாண்டு பழமை வாய்ந்த ஐம்­பொன் சிலை­களை விற்க முயன்­ற­தாக சிலை கடத்­தல் தடுப்­புப் பிரி­வுக்கு ரக­சிய தக­வல் சென்­றது.

அத­னைத் தொடர்ந்து 10 தனிப்­ப­டை­கள் அமைக்­கப்­பட்­டன. அவ­ரி­டம் கடத்­தல் சிலை­கள் ஏரா­ள­மாக இருப்­ப­தை­யும் வெளி­நா­டு­க­ளுக்கு அனுப்ப அவற்றை அவர் பதுக்கி வைத்­தி­ருப்­ப­தை­யும் அதி­கா­ரி­கள் உறுதிசெய்­த­னர்.

அத­னைத் தொடர்ந்து தனிப்­படை அதி­கா­ரி­கள் 'ஆர்ட் வில்­லேஜ்' நிறு­வ­னத்தை சுற்­றி­வ­ளைத்து சோதனை நடத்­தி­னர். பதுக்கி வைக்­கப்­பட்டு இருந்த பழ­மை­யான 14 உலோ­கச் சிலை­கள் அப்­போது கண்­டு­பி­டிக்­கப்­பட்டு பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

பெரு­மாள், ரிஷபத் தேவர், ரிஷ­ப­த் தேவ அம்­மன், சிவ­காமி அம்­மன், அப்­பர், சுந்­த­ரர், மாணிக்கவாசகர், சிறிய நந்தி உள்­ளிட்ட 14 சாமி உலோக சிலை­கள் மீட்கப்பட்டன. இவை எந்­தக் கோயில்­

க­ளி­லி­ருந்து திரு­டப்­பட்­டவை என்­பது குறித்த ஆய்வு நடை­பெ­று­வ­தா­க­ அதிகாரி­கள் தெரி­வித்­த­னர்.

கண­ப­தி­யி­டம் சிலைக்­கான எந்த ஓர் ஆவ­ண­மும் இல்லை என்­ப­தால் அவ­ரி­டம் அதி­கா­ரி­கள் துரு­வித் துருவி விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

அவ­ரது நிறு­வ­னத்­துக்கு அவ்­வப்­போது வெளி­நாட்­டி­னர் வந்து செல்­வது விசா­ர­ணை­யில் தெரிய வந்­தது.

ஆசி­யா­வின் 3வது பெரிய சிலை சிக்­கி­யது

இதற்­கி­டையே, சென்னை அருகே சோழர் கால நட­ரா­ஜர் சிலை ஒன்­றும் மீட்­கப்­பட்­டுள்­ளது. சென்னை புற­ந­க­ரில் மணலி அருகே சாத்­தங்­காடு என்­னும் இடத்­தில் பழைய இரும்­பு­களை விற்­கும் கடை ஒன்­றில் கைப்­பற்­றப்­பட்ட இந்­தச் சிலை ஆசி­யா­வி­லேயே மூன்­றா­வது பெரிய ஐம்­பொன் சிலை என்று அதி­கா­ரி­கள் கூறி­னர்.

மேலும் இந்­தச் சிலை 1,200 ஆண்­டு­கள் பழ­மை­வாய்ந்­தது என்­றும் அவர்­கள் தெரி­வித்­த­னர். இது எந்­தக் கோவி­லில் இருந்து திரு­டப்­பட்­டது என்­பது விசா­ரிக்­கப்­பட்டு வரு­கிறது.

சிலையின் தொன்மையையும் ஐம்பொன் தன்மையையும் அறிய டெல்லி மற்றும் கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் உதவி நாடப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.