வோங்: நாட்டின் பொது அம்சங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்

வோங்: நாட்டின் பொது அம்சங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்

2 mins read

சிங்­கப்­பூர் அதன் பொது அம்­சங்­

க­ளைப் பாது­காக்க வேண்­டும் என்­றும் நாட்­டின் செழுமை அனைத்து சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் பல­னைத் தர வேண்­டும் என்­றும் துணைப்

பிர­த­மர் லாரன்ஸ் வோங் நேற்று வலி­யு­றுத்­தி­னார்.

அவ்­வாறு ஏற்­ப­டா­வி­டில் சில நாடு­களில் நில­வு­வ­தைப் போல மக்­க­ளி­டையே பிளவு ஏற்­ப­டக்­

கூ­டும் என்று அவர் எச்­ச­ரிக்கை விடுத்­தார்.

"அத்­த­கைய நிலை சிங்­கப்­பூ­ரில் ஏற்­ப­டக்­கூ­டாது. சக நாட்­ட­வர் மீதான நம்­பிக்­கையை இழக்­கத் தொடங்­கி­னால் நமது நாடு நிலை­கு­லைந்­து­வி­டும்," என்­றார் திரு வோங். நேற்று தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மத்திய கல்லூரியில் ­நடைபெற்ற ஒன்பீப்பள்.எஸ்ஜி வருடாந்திர ஹார்மனி வொர்க்ஸ்! மாநாட்டில் ஏறத்­தாழ 200 இளை­யர்­க­ளி­டம் திரு வோங் இது­கு­றித்து உரை­யாற்­றி­னார். நாட்டு மக்­கள் வெவ்­வேறு பிரி­வு­

க­ளா­கப் பிரிந்து மாற்று கருத்­து­கள் கொண்­டோ­ரைப் புரிந்­து­கொள்ள முடி­யாத நிலை ஏற்­பட்­டால் அதன் விளை­வாக ஏற்­ப­டக்­கூ­டிய

ஆபத்­து­களை திரு வோங் மேற்­கோள்­காட்­டி­னார்.

"நாம் கவ­ன­மாக இல்­லா­வி­டில் ஒரே மாதி­ரி­யான கருத்­து­கள் கொண்­டோ­ரு­டன் மட்­டுமே பழ­கும் வழக்கம் ஏற்­பட்­டு­வி­டும். அப்­போது மாறு­பட்ட கருத்­து­க­ளைக் கொண்­டோ­ரைப் புரிந்­து­கொள்­வது சிர­ம­மா­கி­வி­டும்," என்­றார் அவர்.

வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்புப் பேட்டைகள், உணவு அங்காடி நிலையங்கள், பள்ளிகள், தேசிய சேவை போன்ற சிங்கப்பூரின் பொது அம்சங்கள் நாட்டு மக்களை ஒன்றிணைப்பதாக அவர் தெரி வித்தார்.

ஆனால் தற்­போது பலர் ஒரே மாதி­ரி­யான கருத்­து­க­ளைக் கொண்­டோ­ரு­டன் மட்­டுமே சமூக ஊட­கம் வாயி­லாக தொடர்­பு­கொள்­வ­தால் பல­த­ரப்­பட்ட கருத்­து­க­ளைக் கொண்­ட­வர்­கள்

ஒன்­றி­ணை­வ­தில் சிர­மம் ஏற்­பட்­டுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார்.

அண்­மைய ஆய்­வின்­படி, மூன்­றில் ஓர் அமெ­ரிக்­க­ருக்கு மட்­டுமே சக நாட்­ட­வர் மீது நம்­பிக்கை இருப்­ப­தாக தெரி­ய­வந்­துள்­ளது என்­றார் திரு வோங். இதுவே 20 ஆண்­டு­க­ளுக்கு முன்பு மூன்­றில் இரு அமெ­ரிக்­கர்­கள் தங்­கள் சக நாட்­ட­வர்­களை நம்­பி­னர்.

இப்­படி ஒரு நிலை சிங்­கப்­பூரில் ஏற்­ப­டவே கூடாது என்று மாநாட்­டில் கலந்­து­கொண்ட இளை­யர்­

க­ளி­டம் திரு வோங் கூறி­னார்.

"பின்­னணி எது­வாக இருந்­தா­லும் நாம் அனை­வ­ரும் சிங்­கப்­பூ­ரர்­கள்," என்­றார் அவர்.