உக்ரேனின் ஒடேசா துறைமுகத்தைக் குறிவைத்து நேற்று முன்
தினம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலுக்கு ரஷ்யாதான் காரணம் என்றும் ரஷ்யா காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொள்கிறது என்றும் உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி சாடியுள்ளார்.
தானியங்களைப் பெருமளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் உக்ரேனும் ஒன்று. உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா படையெடுத்து பல மாதங்கள் ஆகிவிட்டன. போர் இன்னமும் முடிவுக்கு வராத நிலையில், கோதுமைக்காக உக்ரேன் மற்றும் ரஷ்யாவை அதிகம் நம்பியிருக்கும் ஆப்பிரிக்க நாடுகளில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்நாடுகளில்
உணவுப்பொருள்களின் விலை அதிகரித்துள்ளது.
இதற்குத் தீர்வு காணும் வகையில் தானிய ஏற்றுமதியைத் தொடர உக்ரேன் முடிவெடுத்தது. ஒடேசா துறைமுகத்திலிருந்து பிற நாடு
களுக்குத் தானியங்கள் அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தானியங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் உக்ரேனிய துறை
முகங்களில் இருக்கும்போது அவ்விடங்களைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்போவதில்லை என்று நேற்று முன்தினம் ரஷ்யா உறுதி அளித்தது. ஆனால் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு சில மணி நேரங்களிலேயே ஒடேசா துறை
முகத்தை நோக்கி நான்கு ஏவு
கணைகள் பாய்ச்சப்பட்டதாக
உக்ரேனிய ராணுவம் கூறியது.
அவற்றில் இரண்டு இலக்கை அடைந்தன. மற்ற இரண்டு ஏவு
கணைகளையும் உக்ரேனியத் தற்காப்புப் படை சுட்டு வீழ்த்தியதாக அறியப்படுகிறது.
ஏவுகணைகள் துறைமுகத்தில் விழுந்து வெடித்தபோதிலும் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை என்று உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதல்களுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. உலகளாவிய உணவு நெருக்கடியை ரஷ்யா மோசமாக்குவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் குற்றம் சாட்டியுள்ளார்.
"மூர்க்கத்தனமாக நடந்துகொள்வதை ரஷ்யா நிறுத்திக்கொள்ள வேண்டும். ஒப்பந்தத்துக்கு உட்பட்டு அது நடந்துகொள்ள வேண்டும்," என்று அவர் தெரிவித்தார்.
ஒடேசா துறைமுகத் தாக்குதல் குறித்து ரஷ்யா இன்னமும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. ஆனால் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக ஒப்பந்தத்துக்கு ஏற்பாடு செய்திருந்த துருக்கி கூறியது.
தாக்குதல் காரணமாக மூண்ட தீயை அணைக்கும் உக்ரேன் படையினர். படம்: ஏஎஃப்பி

