ரூ.100 கோடி கொடுத்தால் எம்.பி. பதவி: இந்தியாவில் மோசடிக் கும்பல் பிடிபட்டது

ரூ.100 கோடி கொடுத்தால் எம்.பி. பதவி: இந்தியாவில் மோசடிக் கும்பல் பிடிபட்டது

2 mins read

நூறு கோடி ரூபாய் கொடுத்­தால் நாடாளு­மன்ற மேலவை எம்.பி. பதவி, மாநில ஆளு­நர் பதவி பெற்­றுத் தரு­வ­தாக உறு­தி­ய­ளித்த மோச­டிக் கும்­பலை இந்­தி­யா­வின் மத்­தி­யப் புல­னாய்­வுப் பிரிவு (சிபிஐ) கைது­செய்­துள்­ள­தாக இந்­திய ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

பணம் கைமா­று­வ­தற்­குச் சற்று நேரத்­திற்­கு­முன் சிபிஐ அக்­கும்­ப­லைப் பிடித்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கடந்த சில வாரங்­க­ளா­கத் தொலை­பேசி உரை­யா­டல்­களை இடை­ம­றித்­துக் கேட்­ட­பின் சந்­தே­கப் பேர்­வ­ழி­களை சிபிஐ அடை­யா­ளம் கண்­டது என்று தக­வ­ல­றிந்த வட்­டா­ரங்­கள் தெரி­வித்­த­தாக என்­டி­டிவி செய்தி கூறி­யது.

இதன் தொடர்­பில் நால்­வர்­மீது சிபிஐ குற்­றம் சுமத்­தி­யுள்­ளது. மகா­ராஷ்­டிர மாநி­லத்­தைச் சேர்ந்த கர்­ம­லாக்­கார் பிரேம்­கு­மார் பாண்ட்­கர், கர்­நா­டக மாநி­லத்­தைச் சேர்ந்த ரவீந்­திர விட்­டல் நாயக், டெல்­லி­யைச் சேர்ந்த மகேந்­திர பால் அரோரா, அபி­ஷேக் பூரோ ஆகி­யோர் அவர்­களில் சிலர்.

நாடா­ளு­மன்ற மேலவை உறுப்­பி­னர், மாநில ஆளு­நர், அர­சாங்க நிறு­வ­னங்­கள், அமைச்­சு­கள், துறை­களில் தலை­மைப் பொறுப்பு எனப் பல பத­வி­க­ளை­யும் பெற்­றுத் தரு­வ­தாக பொய்­யான வாக்­கு­றுதி அளித்து, ஏமாற்றி, பெரிய அள­வில் மோச­டி­செய்­யத் திட்­ட­மிட்­டி­ருந்­த­தா­கச் சொல்­லப்­பட்­டது.

"கர்­ம­லாக்­கர் பிரேம்­கு­மார் பாண்ட்­க­ருக்கு உள்ள தொடர்­பு­க­ளைப் பயன்­ப­டுத்தி, அத்­த­கைய நிய­ம­னங்­களில் முக்­கி­யப் பங்­காற்­றும் அர­சாங்க உய­ர­தி­கா­ரி­களை அணுக அபி­ஷேக் பூரா திட்­டம் தீட்­டி­னான்," என்று பெயர் வெளி­யிட விரும்­பாத விசா­ரணை அதி­காரி ஒரு­வர் சொன்­ன­தாக என்­டி­டிவி செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

இதன் தொடர்­பி­லான சிபி­ஐ­யின் முதல் தக­வல் அறிக்­கையை (எஃப்ஐ­ஆர்) தான் கண்­ட­தா­க­வும் அதில் ரூ.100 கோடி­வரை கொடுத்­தால் எம்.பி. பதவி பெற்­றுத் தரு­வதாக பொய்­யான வாக்­கு­றுதி அளித்து எப்­படி அக்­கும்­பல் ஏமாற்­றி­யது என்ற விவ­ரம் அதில் இடம்­பெற்­றுள்­ள­தா­க­வும் என்­டி­டிவி தெரி­வித்­தது.

சிபிஐ உய­ர­தி­கா­ரி­போல் நடித்த பாண்ட்­கர், மோச­டி­யில் சிக்­கு­வ­தற்கு ஆள் பிடித்­துத் தந்­தால் அதி­கப் பணம் தரு­வ­தாக முகம்­மது ஐஜாஸ் கான் உள்­ளிட்ட மற்ற சந்­தே­கப் பேர்­வழி­க­ளி­டம் சொன்­ன­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

"அப்­படி எவ­ரே­னும் சிக்­கி­னால், அவ­ரைக் கவர்ந்து, தங்­க­ளது வலை­யில் வீழ்த்­தும்­வி­த­மாக, அர­சாங்க உய­ர­தி­கா­ரி­கள் மற்­றும் அர­சி­யல்­வா­தி­க­ளின் பெயர்­களை உரை­யா­ட­லின்­போது பயன்­ப­டுத்­து­வார்­கள்," என்று சிபி­ஐ­யின் முதல் தக­வல் அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது.

அத்­து­டன், சிபிஐ உய­ர­தி­கா­ரி­போல் நடித்த பாண்ட்­கர், தனக்­குத் தெரிந்­த­வர்­க­ளுக்­குச் சாத­க­மாக நடந்­து­கொள்­ளு­மாறு அல்­லது வழக்கு விசா­ர­ணை­களில் குறுக்­கி­டும் வகை­யில் காவல் நிலைய அதி­கா­ரி­களை மிரட்­டி­வந்ததாகவும் அந்த அறிக்கை குறிப்­பிட்­டது.