இனிவரும் தேர்தல்களில் வெளிநாடுகளிலிருந்து வாக்களிக்கும் சிங்கப்பூரர்களுக்கு வசதியளிக்க அஞ்சல் கட்டணம் செலுத்தப்பட்ட வாக்குச்சீட்டு உறைகள் அனுப்பி வைக்கப்படும் என்று சிங்கப்பூரின் தேர்தல் துறை தெரிவித்துள்ளது.
மேலும், வாக்காளர்கள் திருப்பி அனுப்பும் அந்த உறைகள் தேர்தல் துறையை அடைந்துவிட்டதை உறுதிசெய்யும் ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
வெளிநாடுகளிலிருந்து வாக்களிப்பவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் உறை ஒவ்வொன்றிலும் தனித்துவமான கியூஆர் குறியீடு இருக்கும் என்றும் அதில் வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்காது என்றும் தேர்தல் துறை நேற்று தெரிவித்தது.
அடையாளத்தை உறுதிசெய்ய வும் வாக்குச்சீட்டையும் அதற்கான உறையையும் பதிவிறக்கம் செய்ய வாக்காளர்கள் தங்களது சிங் பாஸைப் பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் துறை கூறியது.
தனித்துவமான 'கியூஆர்' குறி யீடு பாதுகாப்பு அம்சத்துடன் வாக்காளர் களின் கையொப்பத்தை உறுதிசெய்யும் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படும்.
வெளிநாடுகளிலிருந்து வாக்களிக்க பதிவு செய்தபோது அளித்த கையொப்பத்துடன் புதிய கையொப்பத்தை அந்தத் தொழில் நுட்பம் ஒப்பிட்டு உறுதிசெய்யும் என்றது தேர்தல் துறை.
செல்லுபடியாகக்கூடிய 'கியூஆர்' குறியீடுகளைக் கொண்ட வாக்குச்சீட்டு உறைகளை மட்டுமே தேர்தல் துறை ஏற்றுக்கொள்ளும். ஒரு வாக்காளருக்கு ஒரு வாக்குச்சீட்டு என்பதை இது உறுதிசெய்யும்.
அதேவேளை சேதமடைந்த, திறக்கப்பட்ட கடித உறைகள், ஒரே மாதிரியான கியூஆர் குறியீட்டைக் கொண்ட பல கடித உறைகள், ஒரே மாதிரி இல்லாத கையொப்பங்கள், ஒன்றுக்கும் அதிகமான வாக்குச்சீட்டுகளைக் கொண்ட உறைகள் ஆகியன நிரா கரிக்கப்படும்.
வெளிநாடுகளிலிருந்து வாக்களிப்பவர்களுக்கும் தாதிமை இல்லங்களிலிருந்து வாக்களிப்பவர்
களுக்குமான புதிய வாக்களிப்பு ஏற்பாடுகள் பற்றி கிடைத்த கருத்துகள் குறித்தும் தேர்தல் துறை தகவல் அளித்தது.
13 அரசியல் கட்சிகள், 39 தாதிமை இல்லங்கள் ஆகியவற்றிடம் கருத்து சேகரிக்கப்பட்டது.
வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்களும் உள்ளூர் மக்களும் தங்கள் கருத்துகளை முன்வைத்ததாகத் தேர்தல் துறை கூறியது.
வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்களிடம் இணையம் மூலம் நடத்தப்பட்ட ஆய்வின்மூலம் 3,221 கருத்துகள் கிடைத்தாக அது தெரிவித்தது. ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 82 விழுக்காட்டினர் அஞ்சல் வாக்களிப்பு தொடர்பான புதிய அணுகு
முறையை வரவேற்றதாக தேர்தல் துறை தெரிவித்தது.
2023 செப்டம்பருக்குள் நடத்தப்பட வேண்டிய அதிபர் தேர்
தலுக்கு இப்புதிய முறையை அறி முகம் செய்ய இருப்பதாக தேர்தல் துறை கடந்த மே மாதம் கூறியது.
வெளிநாடுகளில் வசித்தாலும் வாக்களிக்கும் உரிமையை இழக்காமல் அதேநேரம் எளிதாக வாக் களிக்கவும் புதிய வசதி வழி
வகுப்பதாக அவர்கள் கூறினர்.
இருப்பினும், தங்கள் வாக்குச் சீட்டுகளின் பாதுகாப்பு குறித்து அவர்கள் அக்கறை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
வாக்குச்சீட்டுகள் காணாமல் போகக்கூடும் என்பதும் தேர்தல் துறையை அவை தாமதமாகச் சென்றடையக்கூடும் என்பதும் அவர்களின் அக்கறைக்குரிய கருத்துகளாக இருந்தன.
சிங்கப்பூர் தேர்தல் துறை: வெளிநாடுகளில் வாக்களித்து அனுப்பும் சீட்டுகளுக்கு ஒப்புகை

