குரங்கம்மைத் தொற்று உள்ளதா என்பதை 50 நிமிடங்களில் கண்டறியக் கூடிய பிசிஆர் பரிசோதனைக் கருவியை உருவாக்கி இருப்பதாக இந்திய நிறுவனம் ஒன்று அறிவித்து உள்ளது.
ஆர்டி-பிசிஆர் கருவிகள் மூலமாகவும் பிஓசி என்னும் வடிவத்திலும் குரங்கம்மைத் தொற்றுக்கான பரிசோதனை செய்ததாக 'ஜீன்ஸ்2மி' என்னும் அந்த நிறு
வனம் தெரிவித்து உள்ளது. பிஓசி பரிசோதனை முறையை மருத்துவமனை, விமான நிலையம், பரிசோதனைக்கூடம், சுகாதார முகாம்கள் போன்றவற்றில் பயன்
படுத்தப்படலாம்.
இது தொடர்பாக அந்த நிறு
வனம் ஓர் அறிக்கையை வெளியிட்டது.
"ஒற்றைச் சோதனைக் குழாய் முறையில் தொற்று தொடர்பான பல்வேறு பரிசோதனைகளைச் செய்ய முடியும். மேலும், சின்னம்மையை உருவாக்கும் கிருமிகளில் இருந்து குரங்கம்மை கிருமிகளை வேறுபடுத்தி அறியும் திறனை ஆர்டி-பிசிஆர் கருவிகள் கொண்டுள்ளன," என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
குரங்கம்மைக்கு ஆர்டி-பிசிஆர் கருவி கண்டுபிடித்து உள்ள முதல் இந்திய நிறுவனம் இது. இருப்பினும், தற்போதைக்கு இக்கருவியை ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.
ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் மதிப்பீட்டுக்காகக் காத்திருப்பதாகக் குறிப்பிடும் 'ஜீன்ஸ்2மி' நிறு
வனம், கழகத்தின் அனுமதி கிடைத்ததும் சந்தையில் இக்
கருவியை அறிமுகம் செய்ய இருப்பதாகக் கூறியது.

