வெளிநாடுகளிலிருந்து இந்தியா செல்வோர் அங்கு செலுத்திய பொருள் சேவை வரியை (ஜிஎஸ்டி) அவர்களிடம் திருப்பித் தரும் திட்டத்தை இந்தியா சோதித்துப் பார்க்க உள்ளது.
வெளிநாட்டுச் சுற்றுப்பயணி ஒருவர், இந்தியாவில் வாங்கிய ஒரு பொருளை அந்நாட்டைவிட்டு வெளியே எடுத்துச் செல்லும்பட்சத்தில், அதற்கான ஜிஎஸ்டியைத் திரும்பப் பெற இயலும். அதற்கு அந்தச் சுற்றுப்பயணி அதிகபட்சம் ஆறு மாதங்களுக்குமேல் இந்தியாவில் இருந்திருக்கக்கூடாது.
வெளிநாட்டுச் சுற்றுப்பயணி
களுக்கு ஜிஎஸ்டி அல்லது மதிப்புக் கூட்டு வரியைத் திருப்பித் தருவது பல நாடுகளிலும் நடைமுறையில் இருக்கிறது.
குறிப்பிட்ட விலைக்குமேல் உள்ள பொருள்களுக்கான ஜிஎஸ்டியைத் திரும்பக் கோரலாம். விமான நிலையத்தில் உரிய சான்று களைக் காட்டி அத்தொகையை ரொக்கமாகப் பெறலாம் அல்லது பயணியின் வங்கிக்கணக்கில் அத்தொகை வரவு வைக்கப்படலாம்.
இருப்பினும், இந்தியாவில் இந்த ஏற்பாட்டைச் செய்ய பல நடை
முறைச் சிக்கல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
"இதற்கு ஜிஎஸ்டி கட்டமைப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். இதற்கு நீண்டகாலம் ஆகலாம். அதேநேரம் தவறாகப் பயன்படுத்த முடியாத வகையில் ஜிஎஸ்டி திருப்பிக் கொடுக்கும் நடைமுறை இருக்க வேண்டியது அவசியம்," என்று வரி வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
'பிரைஸ் வாட்டர்ஹவுஸ் அண்ட் கோ' ஆலோசனை நிறுவனத்தின் பங்காளியான திரு பிரத்திக் ஜெ யின் கூறுகையில், "இந்தியாவில் வாங்கினாலும் இங்கு பயன்படுத்தாத பொருளுக்குத்தான் ஜிஎஸ்டி திருப்பித் தரப்படும்.
"இவ்வாறு செய்வது கை
வினைப்பொருள்கள், துணிமணிகள் போன்றவற்றின் விற்பனைக்கும் சுற்றுலாத் துறைக்கும் ஊக்க மளிக்கும். இதற்கான உரிய விதி
களையும் செயல்முறையையும் அரசாங்கம் வகுக்க வேண்டும்," என்றார் அவர்.

