வேலையிடப் பாதுகாப்பில் உயர் தரநிலையை சிங்கப்பூர் எட்டவேண்டும்: மனிதவள அமைச்சர்

வேலையிடப் பாதுகாப்பில் உயர் தரநிலையை சிங்கப்பூர் எட்டவேண்டும்: மனிதவள அமைச்சர்

2 mins read

வேலை­யி­டப் பாது­காப்­பில் உயர் தர­நி­லையை சிங்­கப்­பூர் மீண்­டும் எட்ட உதவ, முதா­ளி­களும் ஊழி­யர்­களும் தங்­கள் பங்கை ஆற்ற வேண்­டும் என்று மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் வலி­யுறுத்தி­யுள்­ளார்.

இவ்­வாண்­டின் வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தார விருது நிகழ்ச்­சி­யில் நேற்று கலந்­து­கொண்டு 1,500 பேர் முன்­னி­லை­யில் உரை­யாற்­றிய அவர், "வேலை­யி­டப் பாது­காப்­பில் நாம் மீண்­டும் உயர் தர­நி­லையை எட்ட வேண்­டும் என்­பதே உங்­க­ளி­டம் நான் முன்­வைக்­கும் வேண்­டு­கோள். அப்­போ­து­தான் நம் ஊழி­யர்­கள் பாது­காப்­பா­க­வும் ஆரோக்­கி­ய­மா­க­வும் இல்­லம் திரும்ப முடி­யும்," என்­றார்.

இவ்­வாண்­டின் முதல் ஏழு மாதங்­களில் உள்­ளூர், வெளி­நாட்டு ஊழி­யர்­கள் என மொத்­தம் 31 பேர் வேலை­யிட விபத்­து­களில் உயி­ர் இ­ழந்­த­னர்.

2016க்குப் பிறகு இதே கால­கட்­டத்­தில் இத்­தனை பேர் உயி­ரி­ழந்து இருப்­பது இதுவே முதன்­முறை. 2020 முழு­வ­துக்­கும் பதி­வாகி இருந்த 30 வேலை­யிட மர­ணங்­க­ளை­யும் இது விஞ்­சி­விட்­டது. கடந்த ஆண்டு 37 வேலை­யிட மர­ணங்­கள் ஏற்­பட்­டன.

"இவ்­வாண்­டின் முதல் ஏழு மாதங்­கள் நம் அனை­வ­ருக்­கும் மிக­வும் கடி­ன­மாக இருந்­துள்­ளன. ஆனால், இதில் மிகுந்த வருத்­தத்­திற்­கு­ரிய விஷ­யம் என்­ன­வென்­றால், வேலை­யிட மர­ணங்­களில் பல­வும் எளி­தில் தவிர்க்­கப்­பட்டு இருக்­க­லாம் என முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரியவந்­துள்­ளது," என்று டாக்­டர் டான் கூறி­னார்.

அண்­மை­யில் வேலை­யிட விபத்­து­கள் அதி­க­ரித்து இருப்­பது குறித்து வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தார மன்­றத்­தின் தலை­வர் ஜான் இங் வேதனை தெரி­வித்­தார். என்­றா­லும், வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தார விரு­து­க­ளுக்­கான தகுதிக்­கூறு மேலும் கடு­மை­யாக்­கப்­பட்­டாலும், மன்­றத்­திற்­குக் கிடைத்த விண்­ணப்­பங்­கள் தமக்கு ஊக்­க­ம­ளிப்­ப­தாக அவர் சொன்­னார்.

கடந்த ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில், இம்­முறை மன்­றத்­துக்­குக் கிடைத்த விண்­ணப்­பங்­கள் இரு­மடங்கு அதி­கம். குறிப்­பாக நிதி, காப்­பு­றுதி, விருந்­தோம்­பல் துறை­களில் இருந்­தும் மன்­றத்­துக்கு விண்­ணப்­பங்­கள் வந்­து­சேர்ந்­தன.

இதற்­கி­டையே, கொவிட்-19 பெருந்­தொற்­றுச் சூழல் தொடங்­கி­ய­தில் இருந்து வேலை­யி­டங்­களில் ஊழி­யர்­க­ளி­டையே மன­ந­லப் பிரச்­சி­னை­கள் அதி­க­ரித்து இருப்­பது குறித்து தக­வல் வெளி­யா­கி­யுள்­ள­தாக தேசிய தொழிற்­சங்க காங்­கி­ரஸ் உத­வித் தலை­மைச் செய­லா­ளர் மெல்­வின் யோங் நேற்று கூறி­னார்.

இது­கு­றித்து ஃபேஸ்புக் பதிவு ஒன்றை வெளி­யிட்ட அவர், "உடல்­நலத்­துக்கு அளிக்­கப்­பட்டு வரும் அதே அளவு முன்­னு­ரிமை, மன­ந­ல­னுக்கு அளிக்­கப்­பட வேண்­டும். வேலை­யி­டங்­களில் ஊழி­யர்­க­ளின் மன­ந­லனை மேம்­ப­டுத்த ஒன்­று­பட்ட முயற்சி எடுக்­கப்­ப­டு­வ­தன் மூலம் வேலை­யிட விபத்­து­க­ளை­யும் காயங்­க­ளை­யும் நம்­மால் குறைக்க முடி­யும்," என்­றார்.

இவ்வாண்டின் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார விருது நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்ட 235 நிறுவனங்கள், தனிநபர்களில் கெப்பல் லேண்ட் நிறுவனமும் ஒன்று.