பொதுத்துறை தரவுக் கசிவு சம்பவங்கள் 65% கூடின

பொதுத்துறை தரவுக் கசிவு சம்பவங்கள் 65% கூடின

2 mins read

பொதுத்­துறை அதி­கா­ரி­கள் மார்ச் 31ஆம் தேதி­யு­டன் முடி­வ­டைந்த ஆண்­டில் சிங்­கப்­பூர் அர­சாங்­கம் தொடர்­பில் மொத்­தம் 178 தர­வுக் கசி­வுச் சம்­ப­வங்­கள் இருந்­த­தா­கப் புகார் அளித்­தி­ருந்­த­னர். அதற்கு முந்­தைய ஆண்­டின் 108 சம்­ப­வங்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் இது 65% அதி­க­ரிப்­பா­கும்.

இருப்­பி­னும், தர­வுக் கசிவு சம்­ப­வங்­கள் அனைத்­தும் 'நடுத்­தர' அல்­லது 'குறைந்த' அளவு கடுமை யானவை என மதிப்­பி­டப்­பட்­டுள்­ள­தாக அர­சாங்­கத்­தின் தனி­ந­பர் தர­வுப் பாது­காப்பு முயற்­சி­கள் தொடர்­பில் வெளி­யி­டப்­பட்ட மூன்­றா­வது வரு­டாந்­திர அறிக்கை தெரி­வித்­துள்­ளது. அறி­வார்ந்த தேச, மின்­னி­லக்க அர­சாங்க அலு­வ­ல­கம் (எஸ்­என்­டி­ஜிஓ) இந்த அறிக்­கையை வெளி­யிட்­டது.

சிக்­க­லான அல்­லது விரும்­பத்­த­காத விளை­வு­க­ளால் ஓர் அர­சாங்க அமைப்பு பாதிக்­கப்­ப­டும்­போ­தும் தனி­ந­பர்­க­ளுக்­கும் வர்த்­த­கங்­க­ளுக்­கும் மித­மான அசௌ­கரி­யம் நேரும்­போ­தும் அதனை 'நடுத்­தர' கடுமை அளவு என்று எஸ்­என்­டி­ஜிஓ விளக்­கி­யுள்­ளது.

கடந்த ஆண்டு மார்ச் தொடங்கி இவ்­வாண்டு மார்ச் வரை கடு­மை­யான தர­வுக் கசிவு சம்­ப­வங்­கள் ஏதும் பதி­வா­க­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது.

தேசிய பாது­காப்­பையோ பொது­மக்­க­ளின் நம்­பிக்­கை­யையோ குலைக்­கும் வகை­யில் அமை­யும் சம்­ப­வங்­கள் கடு­மை­யா­னவை எனக் கூறப்­ப­டு­கிறது. தனி­ந­ப­ருக்கு மர­ணம், கடு­மை­யான உடல்­ரீ­தி­யான, நிதி தொடர்­பான அல்­லது மன­ரீ­தி­யான பாதிப்­பு­கள் நேர்­வ­தும் கடு­மை­யா­னவை என வகைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. இது­வரை 2018ஆம் ஆண்­டில் நடந்த இரு சம்­ப­வங்­கள்­தான் கடு­மை­யான தர­வுக் கசிவு தொடர்­பா­னவை என்­றும் கூறப்­பட்­டது.

சுகா­தார அமைச்­சின் 'எச்­ஐவி' தர­வுத் தளத்­தில் இருந்த 14,200 நோயா­ளி­க­ளின் ரக­சி­யத் தர­வு­களும் அர­சாங்க நீதி­மன்­றத்­தின் இணை­யத் தளத்­தில் இருந்த 223 வழக்­கு­கள் பற்­றிய கோப்­பு­களும் அனு­ம­தி­யின்றி வெளி­யி­டப்­பட்­டதே அவ்­வி­ரண்டு கடு­மை­யான தர­வுக் கசிவு சம்­ப­வங்­க­ளா­கும்.

இந்­நி­லை­யில் பதி­வான 178 தர­வுக் கசிவு சம்­ப­வங்­களில், அர­சாங்­கத் தர­வுப் பாது­காப்பு தொடர்பு நிலை­யத்­தின் இணை­ய­வா­சல் வழி­யாக பொது­மக்­கள் புகார் அளித்­தவை 14.

தர­வுப் பரி­மாற்­ற­மும் தர­வுப் பயன்­பா­டும் தொடர்ந்து அதி­க­ரிக்­கும் நிலை­யில், சிங்­கப்­பூ­ரி­லும் வெளி­நா­டு­க­ளி­லும் தனி­யார் துறை எதிர்­நோக்­கும் தர­வுக் கசிவு சம்­ப­வங்­கள் போன்று பொதுத்­து­றை­யி­லும் தர­வுக் கசிவு அதி­க­ரித்­தி­ருப்­பதை பிர­தி­ப­லிப்­ப­தாக உள்­ளது என்று எஸ்­என்­டி­ஜிஓ குறிப்­பிட்­டது.

தனி­யார் அமைப்­பு­க­ளுக்கு எதி­ராக, கடந்த ஆண்­டில் மட்­டும் தனி­ந­பர் தரவு மீறல் தொடர்­பில் உள்­ளூர்­வா­சி­க­ளி­ட­மி­ருந்து 6,700 புகார்­கள் கிடைத்­த­தாக எஸ்­என்­டி­ஜிஓ தெரி­வித்­தது. இந்த எண்­ணிக்கை 2019ஆம் ஆண்­டில் 4,500ஆக­வும் 2020ஆம் ஆண்­டில் 6,100ஆக­வும் இருந்­தது.

இதற்­கி­டையே, தனது பாது­காப்­புச் செயல்­மு­றை­யில் 24 பெரும் மேம்­பா­டு­களை அமல்­ப­டுத்­து­வ­தில் பொதுத்­துறை இறங்­கி­யுள்­ளது. குடி­மக்­க­ளின் தனி­ந­பர் தரவு மேலும் அதிக பாது­காப்­பைப் பெற $1 பி. முத­லீட்­டுத் திட்­டத்­தின் ஓர் அங்­கம் இது. இதன்­படி பய­னர் கணக்­கு­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டாத நிலை­யில் செய­லி­ழத்­தல், ரக­சி­யத் தக­வல்­க­ளைப் பிர­தி­யெ­டுப்­பது போன்ற அபா­ய­க­ர­மான பய­னர் செயல்­க­ளைக் கண்­ட­றி­வ­து­டன் அவற்­றைத் தடுப்­பது ஆகி­யவை மேம்­பாடு கண்­டு­வ­ரும் அம்­சங்­க­ளா­கும்.