இலங்கையில் தொடரும் அவசரநிலை சட்டம்

இலங்கையில் தொடரும் அவசரநிலை சட்டம்

2 mins read
7d014885-1138-4ffd-93ec-891bce0c4bf7
கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக தெருக்களில் ஆர்ப்பாட்டக் காரர்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் இறங்கினர். படம்: ஏஎஃப்பி -

இலங்கை அதி­பர் ரணில் விக்­ர­ம­சிங்க உத்­த­ர­வின்­கீழ் அவ­ச­ர­நிலை சட்­டத்தை இலங்கை தொடர்ந்து நடை­மு­றைப்­ப­டுத்தி வரும். இது தொடர்­பில் இலங்கை நாடாளு­மன்­றத்­தில் வாக்­க­ளிப்பு நடந்­ததை அடுத்து அவ­ச­ர­நிலை சட்­டம் ஒரு மாத காலத்­திற்கு நீடிக்­கும்.

இதன்­படி ராணு­வப் படை­யி­ன­ரும் காவல்­து­றை­யி­ன­ரும் மக்­க­ளி­டம் விசா­ரணை நடத்­த­வும் அவர்­க­ளைத் தடுத்து வைக்­க­வும் கைது செய்­ய­வும் முழு அதி­கா­ரத்­தைப் பெறு­கின்­ற­னர். முன்­னாள் இலங்கை அதி­ப­ரான கோத்­த­பாய ராஜ­பக்­சேக்கு எதி­ரா­கத் தெருக்­களில் ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்கு ஏற்­பாடு செய்த மூவ­ரைக் காவல்­து­றை­யி­னர் கைது செய்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

வன்­மு­றை­யற்ற பொது ஆர்ப்­பாட்­டங்­களில் மக்­கள் கலந்­து­கொள்­வதை இலங்கை அர­சாங்­கம் ஆத­ரித்­தா­லும் ஜன­நா­ய­கத்­திற்கு மிரட்­டல் அளிக்­கும் 'எந்த ஒரு பயங்­க­ர­வா­தச் செய­லை­யும்' பொறுத்­துக்­கொள்­ளாது என்று சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டம் புதி­தா­கப் பதவி ஏற்ற இலங்கை பிர­த­மர் தினேஷ் குண­வர்­தன தெரி­வித்­தார். திரு ராஜ­பக்சே மீண்­டும் நாடு திரும்ப உள்­ளார் என்ற தக­வ­லுக்கு இடையே ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை ஒடுக்­க­வும் அவ­ச­ர­கால சட்­டத்தை அமல்­ப­டுத்­த­வும் இலங்கை அரசு முனைந்­துள்­ளது.

தற்­போது சிங்­கப்­பூ­ரில் இருக்­கும் திரு ராஜ­பக்சே, மீண்­டும் இலங்கை திரும்­பு­வார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக சட்­ட­மன்­றப் பேச்­சா­ளர் பந்­துலா குண­வர்த்­தனே கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, ஆர்ப்­பாட்ட இயக்­கத்­தின் தலை­வர்­கள் தாங்­கள் பின்­வாங்­கப் போவ­தில்லை என்று உறு­தி­ய­ளித்து­ உள்ளனர். திரு விக்­ர­ம­சிங்க பதவி வில­கக் கோரு­வ­தைத் தாங்­கள் தொட­ரப் போவ­தா­க­வும் கூறி­னர்.

இந்­நி­லை­யில், அடுத்த மாதம் 9ஆம் தேதி­யன்று புதி­தாக ஆர்ப்­பாட்­டத்­தில் இறங்­கு­மாறு சமூக ஊட­கங்­களில் பல்­வேறு அழைப்­பு­கள் வலம் வந்த வண்­ணம் உள்­ளன. அவ­ச­ர­நிலை சட்­டம், தன் பாது­காப்­பைக் கரு­தியே திரு விக்­ர­ம­சிங்க பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக விமர்­சனங்­கள் எழுந்­துள்­ளன.