இந்திய வெளிநாட்டு ஊழியர்களை அவதூறாக பேசியவருக்குச் சிறை, அபராதம்

இந்திய வெளிநாட்டு ஊழியர்களை அவதூறாக பேசியவருக்குச் சிறை, அபராதம்

2 mins read

இரு வெளி­நாட்டு ஊழி­யர்­களை அவ­தூறாகப் பேசி­ய­து­டன் அவ்­வாறு பேசு­வது தனது 'அர­சி­ய­ல­மைப்பு உரிமை' என்­றும் கூறிய லீ போ கியன், 56, என்­ப­வ­ருக்கு ஒரு வாரச் சிறைத் தண்­ட­னை­யும் $1,000 அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

திரு ரத்­ன­சிங்­கம் ஜதீ­சன், திரு கிருஷ்­ணன் கார்த்­தி­கே­யன் ஆகிய இரு­வ­ரும் கடந்த ஆண்டு ஜூலை 12ஆம் தேதி­யன்று தோ பாயோ லோரோங் 5ல் இணைப்­புப் பாதை ஒன்று கட்­டப்­ப­டு­வ­தன் தொடர்­பில் அளவு எடுத்­துக்­கொண்­டி­ருந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

அப்­போது மழை பெய்­யத் தொடங்­கவே இரு­வ­ரும் ஓரி­டத்­தில் ஒதுங்­கி­னர். அங்கு அருகே லீ இருந்­த­தா­க­வும் இரு­வ­ரை­யும் நோக்கி அவர் அவ­தூ­றுச் சொற்­க­ளைச் சொல்­லத் தொடங்­கி­ய­தா­க­வும் கூறப்­பட்­டது.

அத்­து­டன் இரு­வ­ரை­யும் லீ அணு­கிய சம­யத்­தில் தன் மூக்கு, வாய் பகு­தி­களை முகக்­க­வ­சம் கொண்டு மூடா­மல் இருந்­த­தா­க­வும் அறி­யப்­ப­டு­கிறது.

லீ திட்­டி­யதை திரு ரத்­ன­சிங்­கம் தமது கைப்­பே­சி­யில் காணொ­ளி­யா­கப் பதிவு செய்­தி­ருந்­தார்.

லீ ஒரு கட்­டத்­தில், "நீங்­கள் எங்­கள் நாட்­டுக்­குள் நுழைந்­தது தவறு.. இந்த அர­சாங்­க­மும் சட்­ட­வி­ரோ­த­மா­னது. உங்­களை வெளி­யேற்­று­வோம்," என்று கூறி­உள்­ளார்.

'சிங்­கப்­பூ­ருக்கு உங்­களை பிடிக்­காது', 'எங்­கா­வது தூர­மா­கப் போய்­வி­டுங்­கள்' என இரு நபர்­க­ளை­யும் நோக்­கித் தான் கூறி­ய­தாக லீ நேற்று நீதி­மன்­றத்­தில் ஒப்­புக்­கொண்­டார். சிங்­கப்­பூர் அர­சாங்­கம் இரு­வ­ரை­யும் நாட்­டை­விட்டு வெளி­யேற்­றும் என்­றும் தான் கூறி­ய­தாக அவர் தெரி­வித்­தார்.

அந்­தச் சம்­ப­வத்­திற்கு முன்­னால் இரு வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கும் லீக்­கும் எந்­தத் தொடர்­பும் இல்லை என்று நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

மேலும் திரு ரத்­ன­சிங்­கம், திரு கிருஷ்­ணன் இரு­வ­ரும் லீயை நோக்­கித் தகாத வார்த்­தை­கள் ஏதும் கூற­வும் இல்லை என்று குறிப்பிடப்பட்டது.

லீயின் வசைப் பேச்­சால் தங்­க­ளுக்­குக் கவ­லை­யும் மன அழுத்­த­மும் ஏற்­பட்­ட­து­டன் அவ­மா­ன­மாக இருந்­த­தா­க­வும் திரு கிருஷ்­ணன், திரு ரத்­ன­சிங்­கம் ஆகிய இரு­வ­ரும் அர­சுத்­த­ரப்பு வழக்­க­றி­ஞ­ரி­டம் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

வெளி­நாட்­ட­வ­ரால் சிங்­கப்­பூ­ரில் நெரி­சலும் குற்­றச்­செ­யல்­களும் அதி­க­ரித்­தி­ருப்­ப­தா­கக் கூறி, இத­னால் இது­போன்ற அவ­தூறு சொற்­க­ளைப் பயன்­ப­டுத்­தத் தனக்கு உரிமை உண்டு என்று லீ கூறி­யி­ருந்­தார்.

இருப்­பி­னும், பாதிக்­கப்­பட்ட இரு­வ­ரும் குற்­றச் செயல்­கள் புரிந்­துள்­ள­தற்கு ஆதா­ரம் எதை­யும் லீயால் காட்ட முடி­ய­வில்லை.