உள்ளூர் வேலைச் சந்தையின் மீட்சி தொடர்கிறது

உள்ளூர் வேலைச் சந்தையின் மீட்சி தொடர்கிறது

2 mins read

சிங்­கப்­பூ­ரில் வேலைச் சந்­தை­யின் மீட்சி இவ்­வாண்­டின் இரண்­டாம் காலாண்­டில் தொடர்ந்­தது. ஆனால் பண­வீக்­கம், உக்­ரேன்-ரஷ்யா போர், பெரும்

பொருளி­ய­ல் கொண்­டுள்ள நாடு­களில் மீண்­டும் தலை­தூக்­கும் கொவிட்-19 பாதிப்பு போன்ற உல­க­ளா­விய சவால்­கள் இருப்­ப­தால் ஊழி­யர்­க­ளுக்­கான தேவை பாதிப்­ப­டை­யக்­கூ­டும் என்று

அஞ்­சப்­ப­டு­கிறது.

கொவிட்-19 நெருக்­க­டி

­நி­லைக்கு முன்பு இருந்த சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­கள் ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்கை கடந்த ஆண்டு டிசம்­பர் மா­தம் முதல் ஏறத்­தாழ நான்கு விழுக்­காடு அதி­க­ரித்­துள்­ளது. வேலை­யின்மை நில­வ­ரம் மேம்­பட்டு வரு­வ­தால் இந்த அதி­க­ரிப்பு மெது

­வ­டை­யும் என்று மனி­த­வள அமைச்சு முன்­னு­ரைத்­துள்­ளது.

"வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து மிக விரை­வாக அதி­க­ரிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. கொவிட்-19 நெருக்­க­டி­நி­லைக்கு முன்பு இருந்த நிலையை அது நெருங்­கு­கிறது," என்று அமைச்சு நேற்று கூறி­யது.

2019ஆம் ஆண்­டைக் காட்­டி­லும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து 10 விழுக்­காடு குறை­வாக இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இரண்­டாம் காலாண்­டில் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளைச் சேர்க்­கா­மல் மொத்த வேலை நிய­ம­னம் 1.9 விழுக்­காடு (64,000) அதி­

க­ரித்­தது. முதல் காலாண்­டில் வேலை நிய­மன அதிக­ரிப்­புக்கு சேவைத் துறை அதி­கம்

பங்­க­ளித்­தது. அத்­து­றை­யில் 27,300 பேர் வேலை­யில் அமர்த்­தப்­பட்­ட­னர்.

அதற்கு அடுத்­த­தாக கட்­டு­மா­னத் துறை­யில் 25,200 பேரும் உற்­பத்­தித் துறை­யில் 12,200 பேரும் வேலை­யில் அமர்த்­தப்­பட்­ட­னர். இதற்கிடையே, இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் ஆட்குறைப்பு முன் இல்லாத அளவில் கிட்டத்தட்ட 1,000க்குக் குறைந்தது.

முதல் காலாண்டில் 1,320 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர்.

சேவைத் துறையில் ஆக அதிகமாக கிட்டத்தட்ட 700 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர்.

அடுத்த சில மாதங்­களில் வேலை நிய­ம­னங்­கள் தொடர்ந்து வலு­வான நிலை­யில் இருக்­கும் என்று மனி­த­வள அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

ஆனால் ஊழி­யர்­க­ளின்

சம்­ப­ளத்தை உயர்த்த எண்­ணம் கொண்­டுள்ள நிறு­வ­னங்­

க­ளின் எண்­ணிக்கை குறைந்

­தி­ருப்­ப­தாக அது கூறி­யது.

2019ஆம் ஆண்­டு­டன் ஒப்­

பி­டு­கை­யில் வேலையில் இருப்­ப­வர்­க­ளின் விகி­தம் 99 விழுக்­கா­டா­கப் பதி­வா­கி­யி­ருப்­பதை மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் சுட்­டி­னார். சிங்­கப்­பூ­ரில் வேலைச் சந்­தை­ மீண்டு வந்­தி­ருப்­பதை இது தெள்­ளத் தெளி­வா­கக் காட்­டு­வ­தாக அவர் கூறி­னார்.

"சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­களில் ஊழி­யர்­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்­துள்­ளது. அவை கூடு­தல் ஊழி­யர்­களை வேலை­யில் அமர்த்த இருக்­கின்­றன. ஆனால் சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­கள் செய்ய விரும்­பாத வேலை­களில் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்கை ஏற்­றம் காணும்," என்று டாக்­டர் டான் தெரி­வித்­தார்.

கட்­டு­மா­னம், உற்­பத்தி போன்ற துறை­களில் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் எண்ணிக்கை விரை வாக உயரும் என்றார் அவர்.