நீதிமன்றத்தில் முன்னிலையாக கோத்தபாயவுக்கு உத்தரவு

நீதிமன்றத்தில் முன்னிலையாக கோத்தபாயவுக்கு உத்தரவு

2 mins read

இலங்­கை­யின் முன்­னாள் அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்சே நாளை மறு­நாள் அந்­நாட்­டின் உச்ச

நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யாக வேண்­டும் என்று உத்­த­ர­வி­டப்­

பட்­டுள்­ளது.

இலங்­கை­யின் பொரு­ளி­யல் நெருக்­க­டி­நி­லைக்கு கோத்­த­பாய உட்­பட அந்­நாட்டு அர­சி­யல்­வா­தி­களும் அரசு அதி­கா­ரி­களும்

கார­ணம் என்று நீதி­மன்­றத்­தில் மனு தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இது­தொ­டர்­பான வழக்கு விசா­ர­ணைக்­காக கோத்­த­பாய நீதி­

மன்­றத்­தில் முன்­னி­லை­யாக வேண்­டும் என கடந்த புதன்­கி­ழ­மை­யன்று அவ­ருக்­கு அழைப்­பாணை அனுப்­பப்­பட்­ட­தாக பெயர் குறிப்­பிட விரும்­பாத இலங்கை நீதி­மன்ற அதி­காரி சேனல் நியூஸ் ஏஷி­யா­வி­டம் தெரி­வித்­தார்.

இந்­நி­லை­யில், நீதி­மன்­றத்­திற்கு கோத்­த­பாய நேர­டி­யா­கச் செல்­வ­தற்­கான கட்­டா­யம் இருக்­காது என்று வழக்­க­றி­ஞர்­கள் கூறு­கின்­ற­னர். கோத்­த­பா­ய­வின் சார்பாக அவ­ரது வழக்­க­றி­ஞர்­கள்

நீதிமன்­றத்­துக்­குச் சென்று

அவ­ரைப் பிர­தி­நி­திக்­க­லாம் என்று

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தி­

யா­ளர்­க­ளி­டம் பேசிய மூத்த

வழக்­க­றி­ஞர்­கள் தெரி­வித்­த­னர்.

இலங்­கை­யில் கடு­மை­யான பொரு­ளி­யல் நெருக்­க­டி­நிலை ஏற்­பட்டு உணவு, மருந்து, எரி­பொருள் போன்ற அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­கள் இல்­லா­மல் அந்­நாட்டு மக்­கள் சிர­மப்­படுகின்றனர்.

இலங்கை மக்­க­ளின் மனதை வாட்டி வதைக்கும் துன்­பம் பெருஞ்­சீற்­ற­மாக வெடித்­ததை அடுத்து, நாடெங்­கும் ஆர்ப்­பாட்­டங்­கள் நடை­பெற்­றன.

அதி­பர் பத­வி­யி­லி­ருந்து கோத்­த­பாய விலக வேண்­டும் என்று போர்க் கொடி உயர்த்­திய ஆர்ப்­பாட்­டக்

­கா­ரர்­க­ளின் கொந்­த­ளிப்பு

இம்­மா­தம் உச்­சத்தை எட்­டி­யது.

சினங்­கொண்டு அதி­பர் மாளி­கைக்­குப் படை­யெ­டுத்த ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் பாது­காப்­புப் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த அதி­கா­ரி­களை ஓரங்­கட்டி அதற்­குள் நுழைந்­த­னர்.

அதற்கு முன்பே இலங்கை ராணு­வத்­தின் உத­வி­யு­டன் கோத்­த­பா­ய­வும் அவ­ரது குடும்­பத்­தா­ரும் அங்­கி­ருந்து தப்­பி­னர்.

இலங்­கை­யி­லி­ருந்து மாலத்

தீவுக்­குத் தப்­பிய கோத்­த­பாய,

அங்­கி­ருந்து சவூதி ஏர்­லைன்ஸ் விமா­னம் மூலம் சிங்­கப்­பூர் வந்தடைந்­தார். அவ­ருக்கு குறுகிய கால குடிநுழைவு அனுமதியை சிங்­கப்­பூர் வழங்­கி­யது.

தற்­போது சிங்­கப்­பூ­ரில் இருக்­கும் கோத்­த­பா­ய­வின் விசா 14 நாள்­க­ளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அவர் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை சிங்கப்பூரில் இருக்கலாம் என நம்பப்படுகிறது. கோத்தபாய கூடிய விரைவில் இலங்கைக்குத் திரும்பக்கூடும் என்று இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரி விக்கின்றன.