தாதியருக்கு 1.7-2.1 மாத அடிப்படை ஊதியம் சிறப்பு தொகையாகக் கிடைக்கும்

தாதியருக்கு 1.7-2.1 மாத அடிப்படை ஊதியம் சிறப்பு தொகையாகக் கிடைக்கும்

2 mins read

பொதுச் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் குழு­மங்­களில் பணி­யாற்­றும் 25,000க்கும் மேற்­பட்ட தாதி­யர்­க­ளுக்கு அவர்­க­ளின் 1.7 முதல் 2.1 மாதம் வரை­யி­லான அடிப்படைச் சம்­ப­ளம், சிறப்புத் தொகை­யாக வழங்­கப் படும் என்று சுகா­தார அமைச்சு நேற்று அறி­வித்­தது.

தேசிய சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் குழுமம், தேசிய பல்­க­லைக்­க­ழக சுகா­தா­ரக் குழுமம், சிங்­ஹெல்த் ஆகிய பொதுச் சுகாதாரப் பரா­ம­ரிப்­புக் குழு­மங்­களில் பணி­யாற்­றும் தாதி­யர்­க­ளுக்கு அந்­தத் தொகை கிடைக்­கும். தாதி­யரை வேலை­யில் தக்­க­வைத்­துக்கொள்­வ­தற்கு உத­வும் இந்த பணப்­பட்­டு­வா­டா­வுக்கு அவர்­கள் தகுதி பெறு­கி­றார்­கள்.

இந்­தத் தொகை, அர­சாங்க நிதி­யு­தவி பெறும் சமூக பரா­ம­ரிப்பு அமைப்­பு­களில் பணி­யாற்­றும் மேலும் 2,600 தாதி­யர்­களுக்­கும் நீட்­டிக்­கப்­படும் என்று அமைச்சு தெரி­வித்து உள்­ளது.

"ஆகஸ்ட் 1ஆம் தேதி (இன்று) தாதி­யர் தினத்தை நாம் கொண்­டா­டு­கி­றோம். தாதி­யர்­கள் நம்­மு­டைய முழு சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஏற்­பாட்­டுக்கு ஓய்­வின்றித் தொடர்ந்து பாடு­ப­டு­கி­றார்­கள்.

"அதை அங்­கீ­க­ரித்து அவர்­க­ளுக்கு உரிய மரி­யா­தையை நாம் தரு­கி­றோம் என்­பதை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு இது தக்க தரு­ணம்," என்று அமைச்சு தெரி­வித்து உள்­ளது.

'தாதி­யர் சிறப்புப் பண­ம­ளிப்பு' என்று குறிப்­பி­டப்­படும் அந்­தச் சிறப்புத் தொகை இந்த ஆண்டு டிசம்­பர் 1ஆம் தேதி நில­வரப்­படி தாதி­யர் பெறு­கின்ற அடிப்­படை சம்­ப­ளத்­தைக் கொண்டு கணக்­கி­டப்­படும்.

தங்­கள் நிறு­வ­னத்­தில் தொடர்ந்து வேலை செய்து வரும் தாதி­ய­ருக்கு இந்தத் தொகை­யில் 0.5 மாத ஊதி­யம், வழக்­க­மான தாதி சிறப்புப் பண­மளிப்­பாக வரும் டிசம்­ப­ரில் அவர்­க­ளுக்­குக் கிடைக்­கும்.

பிறகு 2023 மார்ச்­சி­லும் 2023 செப்­டம்­ப­ரி­லும் எஞ்­சிய தொகை இரண்டு பகு­தி­க­ளாகக் கொடுக்­கப்­படும்.

இதனிடையே, எதிர்­கால தேவையை நிறை­வேற்­றும் வகை­யில், உள்­ளூர் தாதியர் வளத்தைப் பலப்­ப­டுத்த தான் கடப்­பாடு கொண்­டிருப்­ப­தாக அறிக்கை ஒன்­றில் அமைச்சு தெரி­வித்­தது.

தாதிமை தொழிலைக் கவர்ச்­சி­க­ரமா­ன­தாக ஆக்­கு­வது, உள்­ளூர் தாதி­ய­ருக்­குப் பயிற்சி அளிக்­கும் ஏற்­பா­டு­களை அதி­கப்­ப­டுத்­து­வது ஆகி­ய­வற்­றின் மூலம் அமைச்சு இதனைச் செய்­யும்.

தாதி­யரைக் கவர்ந்து அவர்­களைப் பணி­யில் தக்­க­வைத்­துக்­கொள்­வ­தற்­கும் சந்­தை­யில் போட்­டித்­திறன்­மிக்க நிலையில் திகழ்­வ­தற்­கும் தொடர்ந்து முயற்­சி­கள் இடம்­பெ­று­கின்­றன என்­பதை உறு­திப்­படுத்­தும் வகை­யில், பொதுச் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை­யில் வேலை பார்க்­கும் தாதி­யர்­க­ளின் அடிப்­படைச் சம்­பளம் 5%க்கும் 14%க்கும் இடை­யில் உயர்த்­தப்­பட்­டது என்­றது அமைச்சு.

அந்த உயர்­வில் முதல் கட்­டம் 2021 ஜூலை­யி­லும் இரண்­டா­வது கட்­டம் 2022 ஜூலை­யி­லும் இடம்­பெற்­றது.

தாதி­யர் சிறப்புப் பண­ம­ளிப்பு ஏற்­பாடு பற்­றிய விவ­ரங்­கள் பற்றி தங்­க­ளு­டைய தாதி­யர்­க­ளுக்குப் பொதுச் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் குழு­மங்­கள் விளக்கிக் கூறும் என்­றும் அமைச்சு தெரி­வித்­தது.

அதே­போல, ஒருங்­கி­ணைந்த பரா­மரிப்பு முகவை அமைப்பு, அர­சாங்க நிதி­யு­தவி பெறும் சமூ­கப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­களுடன் தொடர்புகொண்டு அந்­தச் சிறப்பு நிதி பற்­றிய விவ­ரங்­க­ளைத் தெரி­யப்­படுத்­தும்.