அதிபர் கல்விமான் விருது பெற்றார் சோலை வள்ளி

3 mins read
965aa655-f916-4226-9872-6c0899801e92
அதிபர் கல்விமான் விருது பெற்ற (இடமிருந்து) லாவ் கா கியோங் ஆண்ட்ரூ, கோவிந்தன் சோலை வள்ளி, யூஜின் சுவா வெய்ஹேங், இங் சி ஜியே எலிசபெத். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மோன­லிசா

யுகேஷ் கண்­ணன்

நாட்­டின் பாது­காப்­பில் நாட்­ட­மும் பொதுச் சேவை­யில் ஈடு­பா­டும் கொண்­டுள்ள ராணு­வப் பயிற்சி அதி­காரி கோவிந்­தன் சோலை வள்ளி, 19, இவ்வாண்­டு சிங்­கப்­பூ­ரின் உய­ரிய விருதுகளில் ஒன்றான அதி­பர் கல்விமா­ன் விருதைப் பெற்றுள்ளார்.

பல ஆண்­டு­க­ளுக்குப் பிறகு இந்­தி­யர் ஒரு­வர் இவ்­வி­ரு­தைப் பெற்­றுள்­ளது இதுவே முதன்­முறை. சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யின் உப­கா­ரச் சம்­ப­ளத்­தை­யும் அண்­மை­யில் பெற்­றார் சோலை வள்ளி.

இரட்டை உப­கா­ரச் சம்­ப­ளத்­தைப் பெற்­றி­ருக்கும் இவர், நெதர்­லாந்­தி­லுள்ள லைடன் பல்கலைக்­க­ழ­கத்­தில் அர­சி­யல் அறி­வி­யல் பட்டக்­கல்­வி­யில் அனைத்­து­லக உறவுகள், அமைப்­பு­கள் தொடர்பான கல்வியை மூன்­றாண்­டு­க­ளுக்­குப் பயில்­வார்.

இஸ்­தா­னா­வில் நேற்று மாலை நடை­பெற்ற விருது வழங்கும் விழா­வில் இவருடன் திரு யூஜின் சுவா வெய்­ஹேங், திரு லாவ் கா கியோங் ஆண்ட்ரூ, குமாரி இங் சி ஜியே எலி­ச­பெத் ஆகியோ­ரும் அதிபர் கல்­வி­மான் விருதைப் பெற்­று உள்ளனர்.

இந்த உப­கா­ரச் சம்­ப­ளம் தமக்கு மிகுந்த ஊக்­கம் அளிப்­பதா­க­வும் வருங்­கா­லத்­தில் சிறந்த போர் வீர­ரா­க­வும் தலை­வ­ரா­க­வும் உரு­வெடுப்­ப­தற்­கான வாய்ப்­பாக இதை தாம் ­கரு­து­வ­தா­க­வும் கூறிய சோலை வள்ளி, நாட்­டுக்கு சேவை­யாற்­று­வ­தற்­காக சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யில் இணைந்­துள்­ள­தா­க­வும் கூறி­னார்.

தொடக்­கக் கல்­லூரி காலத்­தில் தற்­காப்பு அமைச்சு நடத்­திய மெய்­நி­கர் அனு­பவ நிகழ்ச்­சி­களில் பங்­கேற்­ற­தன் மூலம் சமூ­கத்­திற்கு தம்­மால் இயன்­றதை திருப்­பித் தர வேண்­டும் என்ற எண்­ணம் மேலோங்­கி­ய­தாக இவர் கூறுகிறார்.

நாட்­டைப் பாது­காப்­ப­தில் சிங்­கப்­பூர் ஆயு­தப் படை முக்­கிய பங்­காற்­று­வதை உணர்ந்து நாட்டுக்குச் சேவை­யாற்ற வேண்­டு­மென்ற நோக்கு­டன் அதில் இணைந்து தற்­ச­ம­யம் ராணு­வப் பயிற்சி அதி­கா­ரி­யாக இருக்­கும் இவர், தமது மேற்­ப­டிப்பை முடித்த பிறகு, பல ஆண்­டு­க­ளுக்கு சிங்­கப்­பூர் ஆயுதப் படை­யில் பணி­பு­ரிய விரும்­பு­கி­றார்.

கடந்த ஜன­வரி மாதம் சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யின் ஒன்­பது வார அடிப்­படை ராணு­வப் பயிற்­சி­யில் ஈடு­பட்­ட­போது பல ஆயு­தப் படை உயர் அதி­கா­ரி­க­ளைச் சந்­தித்­த­தும் அவர்­கள் பகிர்ந்­து­கொண்ட பணி அனு­ப­வங்­களும் தமக்­குள் ஒரு தாக்­கத்தை ஏற்­படுத்­தி­ய­தா­க­வும் சோலை வள்ளி கூறி­னார்.

பயிற்சி காலத்­தில் சக வீரர்­களு­டன் மேற்­கொண்ட கடி­ன­மான பயிற்­சி­களும் குழு­வில் ஒரு­வரை ஒரு­வர் ஊக்­கு­வித்­த­தும் இலக்கை நோக்கி திட்­ட­மி­டப்­பட்ட செயல்­பாடு­களும் தம்மை இந்தப்­பணிக்கு உட­ல­ள­வி­லும் மன­த­ள­வி­லும் தயார்ப்­படுத்­தி­யது என்­றும் இவர் சொன்­னார்.

ஆங்­கிலோ சீன தொடக்­கக் கல்­லூரி முன்­னாள் மாண­வி­யான சோலை வள்ளி, "என்­னு­டைய அம்மா சிண்டா தொண்­டு­ழிய நிலை­யத்­தில் தொண்­டூ­ழி­யம் செய்­வ­தைக் கண்டு உயர்­நி­லைப்­பள்ளி காலத்­தி­லேயே நானும் தொடக்­க­நிலை மாண­வர்­க­ளுக்கு 'கோடிங்' எனும் நிர­லி­டு­த­லைக் கற்­றுக்­கொ­டுக்­கும் குழு­வில் இணைந்து தொண்­டூ­ழியம் புரிய ஆரம்­பித்­தேன். அதன் மூலம் மாண­வர்­களை நேர­டி­யா­கச் சந்­தித்து அவர்­களுக்குக் கற்­பித்­தது மிகுந்த மன­நி­றைவை அளித்­தது," என்று பகிர்ந்­தார்.

தொடக்­கக் கல்­லூ­ரி­யில் 2020 மற்­றும் 2021ஆம் ஆண்­டு­களில் சிறந்த கலைப் பிரிவு மாண­வி­யாக திகழ்ந்த சோலை வள்ளி, இரண்­டாம் ஆண்­டில் பள்ளி முதல்­வ­ரின் சிறந்த மாண­வர் பட்­டி­ய­லுக்­குத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டார்.

மேலும் இவர் சிங்­கப்­பூர் ஆயுதப் படை­யின் இளம் தலை­வர் விருது, சிறந்த கல்­வித் தேர்ச்­சிக்­கான 'எடு­சேவ்' விருது, நல்ல தலை­மைத்­துவ விருது போன்ற பல விரு­து­களைக் குவித்­துள்­ளார். மென்­பந்து விளை­யாட்­டா­ள­ரான இவர் தமது தொடக்­கக் கல்­லூரி அணி­யின் தலை­வி­யாக இருந்து பல பரி­சு­களை­யும் பெற்­றுள்­ளார்.

பொதுச் சேவை­யில் அதிக ஆர்­வம் கொண்டுள்ள இவர், இந்­திய சமூ­கத்­தில் மூத்­தோ­ருக்­கும் இளம் தலை­மு­றை­யி­ன­ருக்­கும் பல வழி­களில் தொண்­டூ­ழி­யம் செய்­தும் வரு­கி­றார். மேலும் இவர் தடுப்­பூசித் தூத­ரா­க­வும் இளம் போதைப் புழங்கித் தடுப்­பா­ள­ரா­க­வும் இருந்து உள்­ளார்.