அமெரிக்க-சீன அதிபர்கள் நேரடியாக சந்திக்க ஏற்பாடு

அமெரிக்க-சீன அதிபர்கள் நேரடியாக சந்திக்க ஏற்பாடு

2 mins read

எதி­ரெ­திர் துரு­வங்­க­ளாக விளங்­கும் அமெ­ரிக்கா, சீனா ஆகி­ய நாடுகளின் தலை­வர்­கள் நேருக்கு நேர் சந்­திக்­கக்­கூ­டிய நிகழ்வு வரும் நவம்­ப­ரில் நடக்­கும் என்று பெரி­தும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அதற்­கான ஆலோ­ச­னை­களில் இரு நாட்­டின் அதி­கா­ரி­களும் ஈடு­பட்டு வரு­கி­றார்­கள்.

தென்­கி­ழக்­கா­சி­யா­வில் நவம்­பர் மாதம் நடை­பெ­றக்­கூ­டிய இரண்டு வட்­டார உச்­ச­நி­லைக் கூட்­டங்­களில் அதி­பர் ஜோ பைட­னும் சீன அதி­பர் ஸி ஜின்­பிங்­கும் சந்­தித்­துப் பேசக்­கூ­டும் என்று ஒரு தக­வல் கூறு­கிறது.

இது குறித்து திரு பைட­னின் இந்தோ-பசி­பிக் விவ­கா­ரங்­க­ளுக்­கான தலைமை ஆலோ­ச­கர் திரு கர்ட் கேம்­பெல் வாஷிங்­ட­னில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

"இரு தலை­வர்­களும் அண்­மை­யில் தொலை­பேசி வாயி­லா­கப் பேசி­னார்­கள். நேருக்கு நேர் சந்­திப்­ப­தற்­கான சாத்­தி­யம் குறித்து இரு­வ­ரும் பேசி­னார்­கள். இது உறு­தி­யான தக­வல்.

"அவர்களின் நேர­டிச் சந்­திப்­பைத் தொடர்ந்து இரு நாட்­டின் குழு­வி­ன­ரும் முக்­கிய அம்­சங்­கள் குறித்­துப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முயல்­வார்­கள்," என்று அவர் கூறி­னார்.

ஜூலை மாதம் இரு அதி­பர்­களும் பேசிக்­கொண்­ட­தைக் குறிப்­பிட்டு அவர் இந்­தத் தக­வல்­

க­ளைக் கூறி­னார்.

இருப்­பி­னும் இரு­வ­ரும் சந்­திக்க இருப்­பது குறித்து அவர் விரி­வாக எத­னை­யும் தெரி­விக்­க­வில்லை.

"இரு­வ­ரும் சந்­திக்­கும் இடம், நேரம் குறித்த விவ­ரங்­கள் எது­வும் தற்­போது எங்­க­ளி­டம் இல்லை," என்­றார் திரு கேம்­பெல்.

திரு ஸி நவம்­பர் மாதம் தென்­கி­ழக்­கா­சி­யா­வுக்­குப் பய­ண­மா­வ­தற்­கான ஏற்­பா­டு­களை சீன நாட்டு அதி­கா­ரி­கள் செய்­து­வ­ரு­வ­தா­க­வும் திரு பைடனை அப்­போது திரு ஸி சந்­திக்­கக்­கூ­டும் என்­றும் 'த வால் ஸ்தி­ரீட் ஜர்­னல்' சஞ்­சிகை நேற்று முன்­தி­னம் தெரி­வித்து இருந்­தது.

பாலி தீவில் நவம்­பர் 15, 16 தேதி­களில் நடை­பெற உள்ள ஜி20 உச்­ச­­நி­லைக் கூட்­டத்­தில் திரு ஸி கலந்­து­கொள்வார் என அந்த சஞ்­சிகை கூறி இருந்­தது.

அத­னைத் தொடர்ந்து பேங்­காக்­கில் இரு நாள்­கள் நடை­பெற உள்ள ஏபெக் எனப்­படும் ஆசிய-பசி­பிக் பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு மாநாட்­டி­லும் அவர் பங்­கேற்கக் கூடும் என்­றும் அது தெரி­வித்­தது.

திரு ஸியின் பயண ஏற்­பா­டு­

க­ளைக் கவ­னித்­து­வ­ரும் அதி­

கா­ரி­களை மேற்­கோள் காட்டி அது அந்­தச் செய்­தியை வெளி­யிட்டு இருந்­தது.

திரு ஸியின் பய­ணம் அவர் மூன்­றாம் முறை­யாக அதி­பர் பத­விக்­குத் தேர்ந்து எடுக்­கப்­பட்ட பின்­னர் நிகழ உள்­ளது.

தாம் மீண்­டும் சீனாவின் அதி பராகத் தேர்ந்து எடுக்­கப்­ப­டக்­கூ­டும் என்ற நம்­பிக்­கை­யில் அவர் உள்­ளார்.

மேலும், கொள்­ளை­நோய் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்ட பின்­னர் அவர் சீனா­வுக்கு வெளியே மேற்­கொள்ள இருக்­கும் முதல் பய­ண­மாக இது அமை­யும். திரு ஸி ஆகக் கடை­சி­யாக 2020 ஜன­வ­ரி­யில் மியன்­மார் சென்­றி­ருந்­தார்.

தைவா­னுக்கு அமெ­ரிக்க அதி­காரி ஒரு­வர் 25 ஆண்­டு­க­ளுக்­குப் பின்­னர் சென்­ற­தைத் தொடர்ந்து சீனா­வின் கடும் எச்­ச­ரிக்கை வெளி­யான நிலை­யில் அமெ­ரிக்க-சீன அதி­பர்­க­ளின் நேரடி சந்­திப்பு நிகழ இருப்­ப­தும் குறிப்­பி­டத்­தக்­கது.

தைவான் தொடர்பான பதற்றத்துக்கு இடையே பைடன்-ஸி சந்திப்பு நிகழும் சாத்தியம்