குறுஞ்செய்தி பதிவகத்தில் பதிந்துகொள்வதைக் கட்டாயமாக்கும் பரிந்துரை

குறுஞ்செய்தி பதிவகத்தில் பதிந்துகொள்வதைக் கட்டாயமாக்கும் பரிந்துரை

2 mins read

குறுஞ்­செய்­தி­கள் வழி­யாக பொது­மக்­க­ளு­டன் உரை­யா­டும் அனைத்து அமைப்­பு­களும் குறுஞ்­செய்­தி­களை அனுப்­பும் தங்­கள் 'ஐடி' விவ­ரங்­களை மத்­திய பதி­வ­கம் ஒன்­றில் பதிந்­து­கொள்ள வேண்­டும்.

மோசடி­களை எதிர்­கொள்ள முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள பரிந்­துரை ஒன்று நடப்­புக்கு வந்­தால் இந்­தப் பதிவு முறை கட்­டா­ய­மா­கும்.

இவ்­வாண்டு மார்ச் மாதம் செயல்­ப­டத் தொடங்­கிய குறுஞ்­செய்தி அனுப்­பும் 'ஐடி' பதி­வ­கம், மோசடி குறுஞ்­செய்­தி­க­ளைத் தொடக்­கத்­தி­லேயே கண்­ட­றிந்து அவற்­றைத் தடை செய்ய முடி­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

தக­வல் தொடர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யத்­தின் துணை நிறு­வ­ன­மான சிங்­கப்­பூர் கட்­ட­மைப்­புத் தக­வல் நிலை­யம் இந்­தப் பதி­வ­கத்தை இயக்­கு­கிறது.

இந்­தப் பதி­வ­கம் தொடங்­கி­ய­தில் இருந்து 120க்கும் மேற்­பட்ட பொது, தனி­யார் துறை நிறு­வனங்கள் இதற்­குப் பதிவு செய்­து உள்­ளன.

இப்­ப­தி­வ­கம் தொடங்­கி­ய­து முதல், மோசடி குறுஞ்­செய்­தி­க­ளின் எண்­ணிக்கை மும்­ம­டங்கு குறைந்­துள்­ள­தாக ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது.

"மோச­டித் தடுப்பு ஆற்­றல்­களை வலு­வாக்க, குறுஞ்­செய்­தி­களை அனுப்­பும் 'ஐடி' விவ­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்­தும் அமைப்­பு­கள் இந்­தப் பதி­வ­கத்­தில் பதிந்­து­கொள்­வ­தைக் கட்­டா­ய­மாக்க நாங்­கள் எண்­ணு­கி­றோம்," என்று ஆணை­யம் கூறி­யது.

அதா­வது, பதி­வ­கத்­தில் பதிந்து­கொண்ட 'ஐடி' விவ­ரங்­க­ளைக் கொண்­டி­ருக்­கும் அமைப்­பு­கள் மட்டுமே குறுஞ்­செய்­தி­களை அனுப்ப அனு­ம­திக்­கப்­படும்.

மற்ற 'ஐடி' விவ­ரங்­க­ளைக் கொண்­டி­ருக்­கும் குறுஞ்­செய்­தி­களுக்கு தொடக்­கத்­தி­லேயே தடை விதிக்­கப்­படும்.

"குறுஞ்­செய்­தி ஒரு பாது­காப்­பான தொடர்­புத் தள­மாக விளங்க இந்த ஏற்­பாடு வகை செய்­கிறது," என்­றது ஆணை­யம்.

இந்­தப் பதி­வ­கத்­தில் பதிந்­து­கொள்ள வரும் அக்­டோ­பர் முதல் ஆண்­டி­றுதி வரை அமைப்­பு­க­ளுக்கு கால அவ­கா­சம் வழங்க ஆணை­யம் பரிந்­து­ரைத்­தது.

தொலைத்­தொ­டர்பு நிறு­வ­னங்­கள், மோச­டி­யாக இருக்­க­வல்ல குறுஞ்­செய்­தி­களை அடை­யா­ளம் கண்டு அவற்­றைத் தொடக்­கத்­தி­லேயே தடுக்க இயந்­திர வாசிப்­புத் தொழில்­நுட்­பத்­தைப் பொருத்­து­வதைக் கூடு­தல் பாது­காப்பு நட­வடிக்­கை­யாக ஆணை­யம் பரிந்­து­ரைத்­தது.

குறுஞ்­செய்­தி­க­ளுக்­குள் சந்­தே­கத்­திற்­கு­ரிய இணைப்­பு­க­ளைக் கண்­ட­றிந்து அவற்­றைத் தடுக்­கும் ஆற்­ற­லைக் கொண்­டி­ருப்­பது இத்­த­கைய தீர்­வு­களில் அடங்­கும்.

முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள இந்த நட­வ­டிக்­கை­கள், ஆலோ­சனை ஒன்றில் பட்­டி­ய­லி­டப்­பட்­டுள்ளன. இந்த ஆலோ­சனை செப்­டம்­பர் 9ஆம் தேதி முடி­வு­றும்.

இந்­தப் பதி­வ­கத்­தில் பதிந்­து­கொண்­டுள்ள அமைப்­பு­களில் மத்திய சேம­நி­திக் கழ­க­மும் ஒன்று. 'சிபி­எஃப் போர்ட்' எனும் 'ஐடி'யில் இ­ருந்து அனுப்­பப்­படும் அனைத்து குறுஞ்­செய்­தி­களும் உண்­மை­யானவை என்று கடந்த மாதம் கழகம் தெரி­வித்து இருந்­தது.

மத்­திய சேம­நிதி, வேலை­ந­லன் மற்­றும் மூத்­தோர் ஆத­ர­வுத் திட்டம் குறித்த விவ­கா­ரங்­க­ளுக்கு 'சிபி­எஃப் போர்ட்' எனும் 'ஐடி'யைப் பயன்­ப­டுத்தி மட்­டுமே கழ­கம் பொது­மக்­க­ளுக்கு குறுஞ்­செய்­தி­களை அனுப்­பு­கிறது. 'SG-Workfare', 'SG-SSS' ஆகிய 'ஐடி'களைப் பயன்­ப­டுத்­த­வதை அது நிறுத்­தி­விட்­டது.

இங்குள்ள சில வங்கிகளும் இந்தப் பதிவகத்தில் பதிந்துகொண்டு உள்ளன.

அர­சாங்க அமைப்­பு­கள் அனைத்தும் இந்­தப் பதி­வ­கத்­தில் கட்­டங்­கட்­ட­மாக சேரும் என்று தேசிய பாது­காப்பு ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ரான திரு டியோ சீ ஹியன் கடந்த ஜூலை மாதம் கூறி­யி­ருந்­தார்.

இதர தளங்­கள் ஆக்­க­பூர்­வம் குறைந்­த­வை­யாக மதிப்­பி­டப்­ப­டும்­போது மட்­டுமே இணைப்­பு­கள் பயன்­ப­டுத்­தப்­படும் என அவர் உறுதி­ய­ளித்­தார்.

இணைப்­பு­க­ளு­டன் குறுஞ்­செய்தி­களை அனுப்­பும்­போது .gov.sg என்­ப­து­டன் முடி­வு­றும் இணைப்­பு­களை மட்­டுமே அர­சாங்க அமைப்­பு­கள் அனுப்­பும்.