இந்தியத் தலைநகர் புதுடெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு, மது பானக் கொள்கை திருத்த மோசடியில் ஈடுபட்டு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் தனியாருக்குச் சாதகமாக செயல்பட்டு இருப்பதாக புகார்கள் தாக்கலாகி உள்ளன.
இது பற்றி விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், நேற்று திடீரென்று ஆறு மாநிலங்களில் 21 இடங்களில் புகுந்து சோதனை நடத்தினர். புதுடெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, அவரது அமைச்சின் அதிகாரிகள் வீடுகளிலும் அதிகாரிகள் நுழைந்த னர். சோதனைகளில் கைப்பற்றப் பட்டவை பற்றிய விவரங்கள் தெரிய வில்லை.
இதனிடையே, சிபிஐ சோதனை களை மனிஷ் சிசோடியாவும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கடுமையாகக் கண்டித்தனர்.
சிபிஐ சோதனைகளில் எதுவும் கிடைக்கப்போவதில்லை என்று மனிஷ் சிசோடியா டுவிட்டரில் கூறினார். அதேபோல் திடீர் சோதனைகளை முதல்வர் கெஜ்ரிவாலும் குறைகூறினார்.
"இந்தியாவின் தலைநகர் புதுடெல்லி ஆட்சியைப் பாராட்டி நியூயார்க் டைம்ஸ் தனது அனைத்துலக பதிப்பில் முதல் பக்கத்தில் திரு மனிஷ் சிசோடியாவின் படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.
"அது வெளியாகி இருக்கும் அதே நாளில் எங்கள் பெயரைக் கெடுப்பதற்காக சிபிஐ சோதனைகளை நடத்துகிறது. நடத்தட்டும். நாங்கள் அதை வரவேற்கிறோம். முழு ஒத்துழைப்பு கொடுப்போம்," என்று முதல்வர் தெரிவித்தார்.
சிபிஐ சோதனைகளை எதிர்த்து நேற்று துணை முதல்வர் வீட்டிற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடந்ததாக வும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் நால்வர் உள்ளிட்ட சுமார் 80 பேரைக் காவல்துறை கைது செய்த தாகவும் உச்ச நீதிமன்றம் அமைந்து உள்ள இடத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.

