உணவுப் பஞ்சத்தால் 45 நாடுகளில் 50 மில்லியன் பேர்வரை வாடுகின்றனர்

உணவுப் பஞ்சத்தால் 45 நாடுகளில் 50 மில்லியன் பேர்வரை வாடுகின்றனர்

2 mins read
956a65ea-e5c1-4ee1-9322-04071e8f7df4
ஏமன் நாட்டின் வடமேற்கு மாநிலமான ஹஜ்ஜாவின் அப்ஸ் மாவட்டத்தில், கடுமையான ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் அவதியுறும் ஹசான் ரஸீம் எனும் இந்த 10 வயதுச் சிறுவன். படம்: ஏஎஃப்பி -

உலக உண­வுத் திட்­டத்­தைப் பொறுத்­த­வரை, 45 நாடு­களில் 50 மில்­லி­யன் பேர்வரை உண­வுப் பஞ்­சத்­தால் வாடு­கின்­ற­னர். மனி­தா­பி­மான ஆத­ர­வின்றி, கடும் உண­வுப் பற்­றாக்­கு­றை­யால் அவர்­கள் கடு­மை­யாக பாதிக்­கப்­படும் நிலை ஏற்­பட்­டு உள்­ளது.

"ஆஃப்கா­னிஸ்­தான், எத்­தி­யோப்­பியா, சோமா­லியா, தென் சூடான், ஏமன் ஆகிய ஐந்து நாடு­களில் பஞ்­சத்­தால் 880,000க்கும் அதி­க­மா­னோர் உயிர்வாழப் போரா­டு­கின்­ற­னர். ஐந்து ஆண்­டு­க­ளுக்கு முன்­பு இ­ருந்த நிலை­யை­விட இது 10 மடங்­கும் அதி­க­மா­கும்," என்று உலக உண­வுத் திட்ட வட்­டா­ரத் தொடர்பு அதி­காரி அலெக்­ஸான்ட்ரோ அபோ­னி­ஸியோ, கென்­யா­வில் இருந்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்­சுக்கு அளித்த பேட்­டி­யில் கூறி­னார்.

ஜிபோட்டெ, எத்­தி­யோப்­பியா, கென்யா, சோமா­லியா ஆகிய கிழக்கு ஆப்­பி­ரிக்க நாடு­களில் ஏற்­பட்­டுள்ள கடும் வறட்சி கார­ண­மாக இது­வரை ஏழு மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான கால்­நடை­கள் மடிந்­தன.

மனி­தா­பி­மான நிவா­ரண உதவி உட­ன­டி­யாக கிடைக்­க­வில்லை என்­றால், வறட்­சி­யால் உண­வுப் பற்­றாக்­குறை கார­ண­மாக 20 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மா­னோர் பாதிக்­கப்­ப­டக்­கூ­டும் என்று திரு அபோ­னி­ஸியோ குறிப்­பிட்­டார்.

"உயிர் பிழைக்க குடும்­பங்­கள் கடு­மை­யா­கப் போராடி வரு­கின்­ற­னர். வறட்சி கார­ண­மாக கிழக்கு ஆப்­பி­ரிக்க நாடு­களில் இருந்து 1.1 மில்­லி­யன் பேர் இடம்­பெ­யர்ந்­துள்­ள­னர். அந்த வட்­டா­ரத்­தில் ஏழு மில்­லி­யன் சிறார்­கள் ஊட்­டச்­சத்­துப் பற்­றாக்­கு­றை­யால் அவதி­யு­று­கின்­ற­னர். சோமா­லி­யா­வில் மட்­டும் ஐந்து வய­துக்­குக்­கீழ் உடைய சிறார்­களில் 1.5 மில்­லி­யன் பேருக்கு ஆண்­டி­று­திக்­குள் ஊட்டச்­சத்­துப் பற்­றாக்­குறை ஏற்­படும் நிலை உரு­வா­கி­யுள்­ளது. இது, நாட்­டில் உள்ள அனைத்து சிறார்­களில் 45 விழுக்­கா­டா­கும்," என்று திரு அபோ­னி­ஸியோ விவ­ரித்­தார்.

நிதி வழங்­கீட்­டில் பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ள­தால் எவ­ருக்கு உத­வு­வது, எவர் பட்­டி­னி­யாக இருப்­பது என்­பதை முடி­வெ­டுக்­கும் நிலைக்கு உலக உண­வுத் திட்­டம் தள்­ளப்­பட்டு உள்­ளது.

எடுத்­துக்­காட்­டாக, சோமா­லி­யா­வில் ஊட்­டச்­சத்­துப் பற்­றாக்­கு­றை­யைத் தவிர்ப்­ப­தற்­குப் பதி­லாக அதைத் தீர்ப்­ப­தில் உலக உண­வுத் திட்­டம் கவ­னம் செலுத்த வேண்­டி­யுள்­ளது.

இந்­நி­லை­யில், சோமா­லி­யா­வில் பசி, பட்­டினி கார­ண­மாக உயி­ரி­ழப்­போர் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தாக மனி­தா­பி­மான உதவி அமைப்­பு­கள் எச்­ச­ரித்­துள்­ளன. என்றா­லும், அந்­நாட்­டில் உண­வுப் பஞ்­சம் ஏற்­பட்­டுள்­ளதை ஐக்­கிய நாட்டு நிறு­வ­னம் இன்­னும் அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­விக்­க­வில்லை.

சோமா­லி­யா­வில் பட்­டினி கார­ண­மாக உயி­ரி­ழந்­தோர் குறித்து அதி­கா­ர­பூர்வ எண்­ணிக்கை தற்­போது வெளி­யி­டப்­ப­ட­வில்லை. எனி­னும், நில­வ­ரம் மோச­ம­டை­வ­தற்கு துயர் துடைப்பு ஊழி­யர்­கள் தங்­க­ளைத் தயார்ப்­படுத்தி வரு­கின்­ற­னர்.

அந்­நாட்­டில் பொது­வாக மழைக்­கா­லம் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை நீடிக்­கும். ஆனால், தொடர்ந்து நான்கு பரு­வங்­க­ளாக அங்கு போதிய மழை பெய்­ய­வில்லை.