இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது அந்நாட்டு காவல் துறையினர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுத்துள்ளனர். பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவரான இம்ரான்கான், இஸ்லாமாபாத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது அவரது உதவியாளர் ஷாபாஸ் கில் கைது செய்யப்பட்டது குறித்தும் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்தும் கண்டனம் தெரிவித்தார் இம்ரான். இது தொடர்பாக காவல்துறை உயர்
அதிகாரிகள் மற்றும் பெண் நீதிபதி மீது வழக்குப் பதிவு செய்யப் போவதாகவும் இம்ரான் கூறினார்.
இதையடுதது பொதுக் கூட்டத்தில் நீதிபதி மற்றும் காவல்துறை அதிகாரிகளை மிரட்டியதாக இம்ரான் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பாகிஸ்தானின் ஊடக ஒழுங்குமுறை ஆணையம் இம்ரான்கானின் பொதுக் கூட்டப் பேச்சை உள்ளூர் ஊடகங்கள் ஒளிபரபப்பத் தடை விதித்துள்ளது. இம்ரான் கானின் பேச்சை
விமர்சித்துள்ள பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா, ராணுவம் உள்பட பிற அமைப்புகளை குறி வைக்கும் போக்கின் தொடர்ச்சியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இம்ரான் கானின் வீட்டிற்கு செல்லும் சாலையில் காவல் துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரை கைது செய்ய ஷபாஸ் ஷெரீப் அரசு திட்டமிட்டுள்ளதாக, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் துணைத் தலைவர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

