கூகல் 3வது கணினித் தகவல் மையம் அதிகாரபூர்வ தொடக்கம்; 'வர்த்தக, தொழில்நுட்ப மையமாக சிங்கப்பூர் மேலும் மேம்படும்'

கூகல் 3வது கணினித் தகவல் மையம் அதிகாரபூர்வ தொடக்கம்; 'வர்த்தக, தொழில்நுட்ப மையமாக சிங்கப்பூர் மேலும் மேம்படும்'

2 mins read
029b6377-5da7-4c7b-a3bc-10034ac6f5e8
கூகல் ஆசிய பசிபிக் தலைமை யகத்தில் நேற்று நடந்த கணினித் தகவல் மைய தொடக்க நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கை வரவேற்ற கூகல் ஊழியர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கூகல் நிறு­வ­னம் சிங்­கப்­பூ­ரில் அதன் மூன்­றா­வது கணினித் தகவல் மையத்தை அமைத்து முடித்து இருக்­கிறது. இத­னை­யும் சேர்த்து கூகல் நிறு­வ­னம் சிங்­கப்­பூ­ரில் அத்­த­கைய நிலை­யங்­களில் மொத்­தம் US$850 மில்­லி­யன் (S$1.19 பில்­லி­யன்) முத­லீடு செய்து இருக்­கிறது.

கூகல் நிறு­வ­னத்­தின் 3வது கணினித் தக­வல் மையம் அதி­கா­ர­பூர்­வ­மாகத் தொடங்­கப்­பட்டு இருப்­பதை அடுத்து இந்த வட்­டா­ரத்­தில் 2.5 பில்­லி­யன் மக்­களுக்குக் கூகல் சேவை­கள் நம்­பத்­த­குந்த முறை­யில் கிடைக்க வழி ஏற்­பட்டு உள்­ளது.

கூகல் 15 ஆண்­டு­கா­ல­மாக சிங்­கப்­பூ­ரில் செயல்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூர் மீதான தனது கடப்­பாட்டை கூகல் மேலும் உறு­திப்­படுத்தி வரு­கிறது.

நிதி, சுற்­றுச்­சூ­ழல், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஆகிய துறை­களில் இயந்­திர மனி­தன் தொழில்­நுட்­பப் பயன்­பாட்டை மேலும் விரிவு­படுத்­து­வ­தற்­கான ஒரு பங்­கா­ளித்­துவ உடன்­பாட்­டின் மூலம் இணை­யப் பாது­காப்பு பற்றி 50,000 பெற்­றோர், பிள்ளைகளுக்­குப் பயிற்சி அளிக்­கக்­கூடிய ஒரு செயல்­திட்­டம் உள்­ளிட்ட பல செயல்­திட்­டங்­க­ளைப் புதி­தாக கூகல் தொடங்கியுள்ளது.

துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் நேற்­றைய நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­டார்.

"தென்­கி­ழக்கு ஆசி­யா­வின் மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல் அதி­வே­க­மாக வளர்ந்து வரு­கிறது.

"அதன்­மூ­லம் கிடைக்­கக்­கூ­டிய வாய்ப்­பு­களை நன்கு பயன்­ப­டுத்­திக்கொள்­ளக்­கூ­டிய நிலை­யில் சிங்­கப்­பூர் இருக்­கிறது.

"வர்த்­த­கத்­திற்­கும் திற­னா­ளி­கள் பரி­மாற்­றத்­திற்­கும் மையம் என்ற சிங்­கப்­பூ­ரின் நிலை மேம்­படும்.

"சிங்­கப்­பூர் பல நாடு­க­ளு­டன் மின்­னி­லக்க உடன்­பா­டு­க­ளைச் செய்து கொண்டு இருக்­கிறது.

"அவை எல்­லாம் இந்த இலக்கு நிறை­வேற உத­வும்," என்­றார் திரு வோங்.

கூகல் போன்ற பெரிய தொழில்­நுட்ப நிறு­வ­னங்­க­ளு­டன் சேர்ந்து செயல்­ப­டு­வ­தால் சிங்­கப்­பூ­ரின் தொழில்­நுட்ப வளம் பலப்­படும். குறிப்­பாக தேர்ச்­சி­கள், புத்­தாக்­கம், சுற்­றுச்­சூ­ழல் ஆகிய துறை­களில் அந்த வளம் வலு­வ­டை­யும் என்று துணைப் பிர­த­மர் தெரி­வித்­தார்.

இத­னி­டையே, இந்த வட்­டா­ரத்­திற்­கும் உல­கிற்­கும் சிங்­கப்­பூர் தொழில்­நுட்ப தலை­மைத்­துவ நாடாகத் திகழ்­வதாகவும் இதில் கூகல் நிறு­வ­னம் நம்­பிக்கை கொண்­டி­ருப்பதாகவும் கூகல் ஆசிய பசி­பிக்­கின் தலை­வர் ஸ்கூட் பியூ­மண்ட் கூறினார். இந்த நம்­பிக்­கை மூன்­ற­ாவது இணை­யத் தக­வல் மையம் மூலம் வெளிப்படுவதாக அவர் கூறினார்.