29ஆம் தேதி முதல் உட்புறங்களில் முகக்கவசம் அணிய தேவையில்லை

29ஆம் தேதி முதல் உட்புறங்களில் முகக்கவசம் அணிய தேவையில்லை

3 mins read
e976a1db-4cac-486d-9aea-ae4c8ac6ce63
ரயில், பேருந்துகளில் பயணம் செய்யும்போதும் எம்ஆர்டி, எல்ஆர்டி, பேருந்துச் சந்திப்பு நிலையங்களில் இருக்கும்போதும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பொதுப் போக்குவரத்திலும் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களிலும் கட்டாய முகக்கவச நடைமுறை தொடரும்

வரும் திங்­கட்­கி­ழமை 29ஆம் தேதி­யில் இருந்து, பெரும்­பா­லான உட்­பு­றங்­களில் கட்­டா­ய­மாக முகக்­கவசம் அணி­யத் தேவை­யில்லை.

மருத்­து­வ­ம­னை­கள், மருந்­த­கங்­கள், தாதிமை இல்­லங்­கள், அவ­சர மருத்­துவ வாக­னங்­கள் போன்ற சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­களில் கட்­டாய முகக்­க­வச நடை­முறை தொட­ரும்.

அதே­போல எம்­ஆர்டி, எல்­ஆர்டி, பொதுப் பேருந்­து­கள் ஆகி­ய­வற்­றில் பய­ணம் செய்­யும்­போ­தும் எம்­ஆர்டி, எல்ஆர்டி, பேருந்­துச் சந்­திப்பு நிலை­யங்­களில் இருக்­கும்­போ­தும் முகக்­க­வ­சம் அணிந்­து இ­ருக்க வேண்­டி­யது அவ­சி­யம்.

விமான நிலை­யங்­க­ளி­லும் பள்ளிப் பேருந்­து­கள், தனி­யார்ப் பேருந்து சேவை­கள், டாக்­சி­கள் போன்ற தனி­யார்ப் போக்­கு­வ­ரத்­தில் பய­ணம் செய்­யும்­போ­தும் முகக்­க­வ­சம் அணி­வது கட்­டா­ய­ம் இல்லை.

பள்­ளி­களில் மாண­வர்­கள் முகக்­க­வ­சம் அணிந்­தி­ருக்­கத் தேவை­யில்லை.

கொவிட்-19 தொற்­றுக்­கெ­தி­ரான அமைச்­சு­கள்­நிலை நேற்று செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­த­போது இந்­தத் தளர்­வு­களை அறி­வித்­தது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை தமது தேசிய தினப் பேரணி உரை­யின்­போது பிர­த­மர் லீ சியன் லூங் முகக்­க­வச விதித் தளர்­வு­கள் பற்றிக் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

உண­வங்­காடி நிலை­யங்­கள், காப்­பிக்­க­டை­கள், உண­வ­கங்­கள், பேரங்­கா­டி­கள், வணி­கச் சந்­தை­கள், உணவு பதப்­ப­டுத்­தும் நிறு­வனங்­கள், இறைச்­சிக்­கூ­டங்­கள் ஆகி­ய­வற்­றில் பணி­பு­ரி­வோர் முகக்­க­வ­சம் அணிய வேண்­டும். கடந்த 2020 ஏப்­ர­ல் மாதம் முதல் உண­வைக் கையா­ளும் வேலை­செய்­யும் அனை­வ­ரும் முகக்­க­வ­சம் அல்­லது உமிழ்­நீர்த் தடுப்­பான் அணிந்­தி­ருக்க வேண்­டி­ய­தைச் சிங்­கப்­பூர் உணவு அமைப்பு கட்­டா­ய­மாக்கி இருப்­பது நினை­வு­கூரத்­தக்­கது.

மக்­கள்­தொ­கை­யில் பெரும்­பாலோர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தா­லும் ஏற்­கெ­னவே அதி­க­மா­னோரை கொரோனா தொற்­றி­விட்­ட­தா­லும் கட்­டுப்­பா­டு­கள் மேலும் தளர்த்­தப்­ப­டு­வ­தாக சுகா­தார அமைச்சு கூறி­யது.

மக்­கள்­தொ­கை­யில் கிட்­டத்­தட்ட 70 விழுக்­காட்­டி­னரை கொரோனா தொற்­றி­விட்­டது என்­றும் ஏறக்­குறைய 80 விழுக்­காட்­டி­னர் கூடு­தல் (பூஸ்­டர்) தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டு­விட்­ட­னர் என்­றும் சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­தார்.

புதி­தாக கொரோனா தொற்­றுக்கு ஆளா­வோர் எண்­ணிக்­கை­யும் சீரா­கக் குறைந்து வரு­கிறது.

அத்­து­டன், கிரு­மித்­தொற்­றுக்­காக நாள்­தோ­றும் மருத்­து­வ­ம­னை­களை நாடு­வோர் எண்­ணிக்கை கடந்த ஜூலை­யில் 800க்கும் அதி­க­மாக இருந்த நிலை­யில், இப்­போது 400க்கும்­கீழ் குறைந்­துள்­ளது.

இருந்­தா­லும், கூட்­ட­மான இடங்­களில் இருக்­கும்­போது அல்­லது எளி­தில் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட வாய்ப்­புள்­ளோ­ரு­டன் கலந்­து­ற­வா­டும்­போது முகக்­க­வ­சம் அணி­யு­மாறு அமைச்சுகள்நிலை பணிக்­குழு அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

குறிப்­பாக, முதி­ய­வர்­களும் நோயெ­திர்ப்­பாற்­றல் குறை­வாக இருப்­போ­ரும் கூட்­ட­மான இடங்­களில் இருக்­கும்­போது எவ்­வகை சுவா­சத்­தொற்­றுக்­கும் ஆளா­வ­தைத் தடுக்க முகக்­க­வ­சம் அணி­யும்­படி வல்­லு­நர்­கள் அறி­வு­றுத்­து­வ­தாக சுகா­தார அமைச்சு கூறி­யது.

இப்­போது கொவிட்-19 பர­வல் கட்­டுக்­குள் இருந்­தா­லும் அடுத்த கொவிட்-19 திரிபு கடு­மை­யா­ன­தா­க­வும் ஆபத்­து­மிக்­க­தா­க­வும் இருக்­க­லாம் என்­ப­தால் எந்­த­வொரு திடீர் மாற்­றத்­தை­யும் எதிர்­கொள்ள சிங்­கப்­பூ­ரர்­கள் மனத்­த­ள­வில் தயா­ராக இருக்க வேண்­டும் என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

கொவிட்-19 தொற்­றைப் பொறுத்­த­மட்­டில் தடுப்­பூ­சியே முதன்­மை­யான தற்­காப்பு ஆயு­த­மா­கத் திகழ்­கிறது என்று அமைச்­சு­கள்­நிலை பணிக்­குழு குறிப்­பிட்­டது.

"கடு­மை­யான கொவிட்-19 தொற்­றி­லி­ருந்து நம்­மைப் பாது­காத்­துக்­கொள்ள தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வதே சிறந்த வழி. அத­னால், நாளி­து­வ­ரைக்­கும் ஏற்ற வகை­யில் நமது தடுப்­பூ­சி­களை வைத்­தி­ருக்­கும் நிலைக்கு மாற நமது தடுப்­பூ­சிக் கொள்­கையை மறு­ஆய்வு செய்து வரு­கி­றோம்," என்று நிதி­ அமைச்­ச­ரு­மான திரு வோங் கூறி­னார்.

அத­னால், தடுப்­பூசி அடிப்­ப­டை­யி­லான பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­களில் மாற்­ற­மே­தும் இல்லை என்றும் அவர் தெரி­வித்தார்.