ஆண்டிறுதியில் மறுதொற்று அலை

ஆண்டிறுதியில் மறுதொற்று அலை

2 mins read

எதிர்கொள்ளத் தயாராக இருக்கும்படி அமைச்சர் ஓங் அறைகூவல்

இப்­போ­தைய கொவிட்-19 அலை தணிந்­துள்ள நிலை­யில், ஆண்டு இறு­தி­யில் புதிய தொற்று அலை உரு­வா­க­லாம் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­துள்­ளார்.

சிங்­கப்­பூ­ரில் கிட்­டத்­தட்ட பத்தில் ஏழு பேரை கொவிட்-19 தொற்றி­விட்ட நிலை­யில், அடுத்த பெரிய அலைக்கு மறு­தொற்று கார­ண­மாக இருக்­க­லாம் என எதிர்­பார்க்­கப்படு­கிறது.

கவலை தரக்­கூ­டிய புதிய கொவிட்-19 கிரு­மித் திரிபு, முன்­னர் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­ன­தன் மூலம் பெற்ற நோயெ­திர்ப்­பாற்­றலை மீறி, மீண்­டும் ஒரு­வரை பாதிக்­க­லாம் என்­ப­தால் அத்­தொற்று அலையை எதிர்­கொள்ள சிங்­கப்­பூர் தயா­ராக இருக்க வேண்­டும் என்று அமைச்­சர் ஓங் அறை­கூ­வல் விடுத்­துள்­ளார்.

கடந்த முறை 3 விழுக்­கா­டாக இருந்த மறு­தொற்று விகி­தம், சென்ற மாதம் 5.5 விழுக்­கா­டாக உயர்ந்­து­விட்­டது என்று கொவிட்-19 தொற்­றுக்­கெ­தி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் நேற்­றைய செய்­தி­யா­ளர் சந்­திப்­பின்­போது திரு ஓங் தெரி­வித்­தார்.

"கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­ப­டா­த­வர்­க­ளின் எண்­ணிக்கை மிகக் குறைவு என்­ப­தால், அடுத்த தொற்று அலை­யின்­போது பல­ரும் மறு­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டு­இருக்கலாம்," என்­றார் அமைச்­சர்.

அத்­து­டன், நாள்­கள் செல்­லச் செல்ல முந்­திய தொற்­றால் பெற்ற நோயெ­திர்ப்­பாற்­றலும் குறைந்து விடும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

அத­னால்­தான் மறு­தொற்று எண்­ணிக்­கையை சுகா­தார அமைச்சு அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரு­கிறது என்­றும் அது அடுத்த அலை எப்­போது நிக­ழ­லாம் என்­பது பற்றி ஓர் அனு­மா­னத்­தைத் தரும் என்­றும் அவர் சொன்­னார்.

ஏற்­கெ­னவே கொரோனா தொற்­றிய ஒரு­வரை எட்டு மாதங்­கள் கழித்து மீண்­டும் அக்­கி­ருமி தொற்­றும் சாத்­தி­யம் குறை­வா­கவே, அதா­வது கிட்­டத்­தட்ட 5 விழுக்­கா­டாக இருப்­பது நல்ல அறி­குறி என்­றார் அமைச்சர் ஓங்.

நில­ந­டுக்­கோட்­டிற்கு மேலே வடக்­கில் உள்ள அமெ­ரிக்கா, ஐரோப்­பிய நாடு­கள் போன்­றவை குளிர்­கா­லத்­தில் புதிய கொவிட்-19 திரி­பால் ஏற்­பட வாய்ப்­புள்ள தொற்று அலையை எதிர்­கொள்ள ஆயத்­த­மாகி வரு­வ­தா­க­வும் திரு ஓங் குறிப்­பிட்­டார்.

இந்­நி­லை­யில், சுகா­தா­ரப் பரா­மரிப்­புக் கொள்­தி­றனை நிர்­வ­கிப்­பது, புதிய அலையை எதிர்­கொள்­வதற்­கான ஆயத்­தங்­களில் முக்­கி­ய­மா­னது என்­றார் அவர்.

கொவிட்-19 தொற்­றால் மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு ஏற்­படும் பெரும் சுமை­யைக் குறைக்க உத­வி­யாக கொவிட்-19 சிகிச்சை நிலை­யங்­கள் அமைக்­கப்­ப­டு­கின்­றன.

அவ்­வ­கை­யில், இடைக்­கா­லப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­கள் (டிசி­எஃப்) என்ற புது­வகை நிலை­யங்­கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன.

இவை இரட்­டைப் பயன்­பாட்டு நிலை­யங்­க­ளாக விளங்­கும். அதா­வது, கொவிட்-19 தொற்­றால் மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­ப­டு­வது கூடி­னால், குறைந்த அபா­ய­முள்ள கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்­குச் சிகிச்சை தரும் இட­மாக டிசி­எஃப் செயல்­படும்.

அத்­து­டன், தாதிமை இல்­லங்­களுக்­காக மருத்­து­வ­ம­னை­யில் காத்­தி­ருக்­கும் மற்ற நோயா­ளி­களுக்­கான இடைக்­கா­லப் பரா­ம­ரிப்­பி­ட­மா­க­வும் இத­னைப் பயன்­ப­டுத்த இய­லும்.

செங்காங் சமூக மருத்துவ மனையில் 164 படுக்கைகளைக் கொண்ட டிசிஎஃப் ஏற்கெனவே அமைக்கப்பட்டுவிட்டது.

மூன்று சூழல்களுக்கு வாய்ப்பு

நேற்­றைய செய்­தி­யா­ளர் சந்­திப்­பின்­போது சிங்­கப்­பூர் எதிர்­கொள்ள வாய்ப்­புள்ள மூன்று சூழல்­களை அமைச்­சு­கள்­நிலை பணிக்­குழு பட்­டி­ய­லிட்­டது. சிங்­கப்­பூர் இன்­னொரு கொவிட்-19 அலை­யைத் தவிர்க்­கக்­கூ­டும்; அடுத்த தொற்று அலை இன்­னொரு ஓமிக்­ரான் அலை­யாக இருக்­க­லாம்; நோயெ­திர்ப்­பாற்­றலை மீறித் தொற்­றக்­கூ­டிய புது­வ­கைத் திரி­பால் இன்­னொரு அலை ஏற்­ப­ட­லாம் என்­பனவே அவை.