உயிர்த்தெழும் வர்த்தகப் பயணத்துறை

உயிர்த்தெழும் வர்த்தகப் பயணத்துறை

2 mins read

சிங்­கப்­பூ­ரில் எஃப் 1 பந்­த­யம் மீண்­டும் நடை­பெற உள்­ளது. பந்­த­யம் நடை­பெ­றும் அதே கால­கட்­டத்­தில் 25 நிகழ்ச்­சி­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன. இதன் விளை­வாக கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யால் பெரி­தும் பாதிக்­கப்­பட்ட கூட்­டங்­கள், மாநா­டு­கள், கண்­காட்­சி­கள் தொழில்­துறை மீண்­டும் உயிர்த்­

தெ­ழு­கிறது. கொவிட்-19 கார­ண­மாகக் கடந்த இரண்டு ஆண்­டு­

க­ளாக சிங்­கப்­பூ­ரில் எஃப் 1 பந்­த­யம் நடை­பெ­ற­வில்லை. இவ்­வாண்டு செப்­டம்­பர் 30லிருந்து அக்­டோ­பர் 2 வரை சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் எஃப்1 பந்­த­யம் மீண்­டும் களை­கட்ட இருக்­கிறது. 2019ஆம் ஆண்­டில் திரண்ட கூட்­டத்­தைப் போலவே இவ்­வாண்­டி­லும் நல்ல வர­வேற்பு கிடைக்­கும் என்று பந்­தய ஏற்­பாட்­டா­ளர்­கள் எதிர்­பார்க்­கின்­ற­னர்.

2019ஆம் ஆண்­டில் எஃப் 1 பந்­த­யத்­தைக் காண மொத்­தம் 268,000 பார்­வை­யா­ளர்­கள் திரண்­ட­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது. 2008ஆம் ஆண்­டில் 300,000 பேரைப் பந்­த­யம் ஈர்த்­தது. எஃப் 1 பந்­த­யம் நடை­பெ­றும் கால­கட்­டத்­தில் நிகழ இருக்­கும் நிகழ்ச்­சி­களில் மில்­கன் கழ­க ஆசிய உச்­ச­நிலை மாநா­டும் ஒன்று. ஆண்­டு­தோ­றும் நடை­பெ­றும் இந்த மாநாட்­டில் முத­லீட்­டா­ளர்­கள்,

வர்த்­தக நிர்­வா­கி­கள் முத­லி­யோர்

கலந்­து­கொள்­வர். இந்த மாநாடு இம்­முறை அடுத்த மாதம் 28ஆம் தேதி­யி­லி­ருந்து 30 தேதி வரை நடை­பெ­று­கிறது.

இவ்­வட்­டார நாடு­க­ளைப் பாதிக்­கும் விவ­கா­ரங்­கள் பற்றி மாநாட்­டில் கலந்­து­ரை­யா­டப்­படும்.

சிங்­கப்­பூ­ரின் ஆகப் பெரிய வர்த்­தக நிகழ்­வு­களில் ஒன்­றான எஃப்எச்ஏ-உணவு மற்­றும் பான நிகழ்ச்சி அடுத்த மாதம் 2ஆம் தேதி­யி­லி­ருந்து 8ஆம் தேதி வரை நடை­பெ­று­கிறது. 2020ஆம் ஆண்­டில் கொவிட்-19 தலை­தூக்­கி­யதை அடுத்து, இவ்­வாண்­டு­தான் இந்த நிகழ்ச்­சி­யில் மீண்­டும் நேரில் கலந்து­கொள்ள முடி­யும். வரும் திங்­கட்­கி­ழ­மை­யி­லி­ருந்து 500க்கும் மேற்பட்­டோர் கலந்­து­கொள்­ளும் நிகழ்­வு­களில் முகக்­க­வ­சம் அணி­வது கட்­டா­ய­மாக்­கப்­ப­டாது. ஆனால் வரு­கை­யா­ளர்­கள் அனை­வ­ரும் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளாக இருக்க வேண்­டும்.