தங்களுக்கு எதிராக ரஷ்யா தொடர்ந்து குண்டு மழை பொழிந்தபோதிலும் உக்ரேனின் சுதந்திர தினத்தை அந்நாட்டு மக்கள் நேற்று முன்தினம் அனுசரித்தனர்.
இந்நிலையில், உக்ரேனில் உள்ள ரயில் நிலையத்தைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய தாக்குதலில் குறைந்தது 25 பேர் மாண்டதாக உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறினார்.
கிழக்கு உக்ரேனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் டொனெட்ஸ்க்கிலிருந்து 145 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் சிறிய நகரான செப்லினில் இருந்த ரயிலை ரஷ்யாவுக்குச் சொந்தமான இரண்டு ராக்கெட்டுகள் தகர்த்தியகாக அதிபர் ஸெலென்ஸ்கி கூறினார்.
ரயிலின் நான்கு பெட்டிகள் தீப்பிடித்துக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
முதலில் 22 பேர் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிறகு இடிபாடுகளுக்கு அடியிலிருந்து மேலும் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டதாக அறியப்படுகிறது.
தலைநகர் கியவுக்கு வடக்குப் பகுதியில் உள்ள விஸ்கொரோட்டும் கடும் தாக்குதலுக்கு உள்ளானது. அவ்விடத்தைக் குறிவைத்து ரஷ்யப் படைகள் ராக்கெட் தாக்குதல்களை நடத்தியபோதிலும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று உக்ரேனிய ராணுவம் தெரிவித்தது.
உக்ரேனின் சுதந்திர தினத்தன்று ரஷ்ய வேண்டுமென்றே தூண்டிவிடும் வகையில் தாக்குதல்களை நடத்தும் என்று அதிபர் ஸெலென்ஸ்கி ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். அதுமட்டு மல்லாது, உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்து நேற்று முன்தினத்தோடு ஆறு மாதங்கள் ஆகின்றன.

