'ஆதிக்கம் செலுத்த முயலும் அந்நிய சக்திகளிடம் சிக்கிவிடக்கூடாது'

'ஆதிக்கம் செலுத்த முயலும் அந்நிய சக்திகளிடம் சிக்கிவிடக்கூடாது'

1 mins read

அந்­திய சக்­தி­கள் உள்­நோக்­கத்­து­டன் சிங்­கப்­பூர் மீது ஆதிக்­கம் செலுத்த முயல்­கின்றன. அத்­த­கைய முயற்­சி­க­ளுக்குப் பலி­யா­கி­வி­டா­மல் சிங்­கப்­பூ­ரர்­கள் தங்­க­ளைப் பாது­காத்­துக்கொள்ள வேண்­டும் என்று வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கிருஷ்ணன் வலி­யு­றுத்­திக் கூறி­னார்.

மற்­ற­வர்­க­ளால் தவ­றான வழி காட்­டப்­படு­வதைத் தவிர்த்­துக் கொள்­ளும் வகையில், நம்­பத்­த­குந்த தக­வல்­களை மட்­டும் மக்­கள் நாட­வேண்­டும் என்று சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு அவர் கோரிக்கை விடுத்­தார்.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தா­ளுக்கு அளித்த காணொ­ளிப் பேட்டியில் டாக்­டர் விவி­யன் இவற்றைத் தெரி­வித்­தார்.

"இப்­போது 'சுனாமி' போல் சமூக ஊட­கங்­கள் எங்­கும் நிறைந்துள்ளன. தனிப்­பட்ட குறுஞ்­செய்திகளும் வரு­கின்­றன. பல­த­ரப்பட்ட தக­வல்­கள் சிங்­கப்­பூ­ரர்­க­ளைச் சென்­ற­டை­கின்­றன. அத்­த­கைய செய்­தி­களில் கணி­ச­மா­னவை சிங்­கப்­பூ­ருக்கு வெளியே உரு­வாகி இங்கு வரு­பவை.

"அந்­தச் செய்­தி­க­ளைப் பரப்­பு­வோ­ரின் எண்­ணம், சிங்­கப்­பூ­ரின் நீண்­ட­கால நலன்­களைக் கருத்­தில் கொள்­ளாத ஒன்­றாக இருக்­க­லாம். அதே­வே­ளை­யில், அத்­த­கைய செய்­தி­க­ளைப் பரப்­பு­வோர் உள்­நோக்­கத்­துடன் செயல்­படும் வாய்ப்­பும் இருக்­கிறது.

"ஆகை­யால், தங்­க­ளுக்கு வரும் செய்தி­கள் நம்­பத்­த­குந்­த­வை­தானா என்­பதை சிங்­கப்­பூ­ரர்­கள் முத­லில் சரி­பார்க்க வேண்­டிய தேவை இருக்­கிறது. சிங்­கப்­பூ­ரர்­கள் மிக­வும் விழிப்­பாக இருந்து அத்­த­கைய அந்­நிய சக்தி ­க­ளின் பிடி­யில் சிக்காமல் பாது­காப்­பாக இருந்துகொள்ள வேண்­டும்," என்­றார் டாக்­டர் விவி­யன்.