இந்திய அமெரிக்க மாதர்களைத் தாக்கிய அமெரிக்க மாது கைது

இந்திய அமெரிக்க மாதர்களைத் தாக்கிய அமெரிக்க மாது கைது

2 mins read
080f2328-a3c7-4c72-8126-60b2be973063
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் டல்லாஸ் நகரில் இந்திய அமெரிக்க மாதர்களை இனரீதியில் திட்டியதாக மெக்சிகோ அமெரிக்க மாது கைதானார். படம்: ஃபேஸ்புக் காணொளி -

அமெ­ரிக்­கா­வின் டெக்­சாஸ் மாநிலத்­தில் டல்­லாஸ் நக­ரில் கார் பேட்டை ஒன்­றில் புதன்­கி­ழமை இரவு இந்­திய அமெ­ரிக்க மாதர்­கள் நால்வரை மெக்­சிகோ அமெ­ரிக்க மாது ஒரு­வர் தாக்­கி­ய­தா­கத் தெரிய­வந்ததை அடுத்து அந்த மெக்­சிகோ அமெ­ரிக்க மாதை காவல்­துறை கைது செய்து இருக்­கிறது.

எஸ்­ம­ரல்டா யுப்­தோன் என்ற அந்த மாது, தாக்கி காயம் விளை­வித்­தது, பய­மு­றுத்­தும் அள­வுக்கு மிரட்­டல்­களை விடுத்­தது ஆகிய குற்­றச்­சாட்­டின் பேரில் கைதாகி இருக்­கி­றார் என்­றும் அவ­ருக்கு $10,000 பிணை அனு­ம­திக்­கப்­பட்டு இருப்­ப­தா­க­வும் காவல்­துறை அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தது.

இந்­தச் சம்­ப­வத்­தைக் காட்­டும் ஒரு காணொளி இணை­யத்­தில் பர­ப­ரப்­பைக் கிளப்­பி­விட்­டுள்­ளது.

அமெ­ரிக்க இந்­தி­யர்­க­ளைக் குறி­வைத்து இன­வாத கருத்­து­களைத் தெரி­விப்­பதா என்று சமூக ஊட­கத்­தில் பல­ரும் காட்­ட­மாகக் குறை­கூறி வரு­கி­றார்­கள்.

"நாங்­கள் சும்மா இருக்­கை­யில் எங்­க­ளி­டம் வந்து ஏன் பேச்சு கொடுக்­கி­றீர்­கள்?" என்று அந்த மெக்­சிகோ அமெ­ரிக்க மாதைப் பார்த்து இந்­திய அமெ­ரிக்க மாதர்­கள் கேட்­ட­போது, "உங்­களை எனக்கு பிடிக்­க­வில்லை. அதுதான் கார­ணம்.

"இந்­தி­யா­வில் சிறந்த வாழ்க்கை இல்­லா­த­தால்­தான் இங்கே நீங்­கள் வரு­கி­றீர்­கள். நீங்­கள் பேசும் முறை எனக்­குப் பிடிக்­க­வில்லை.

"அமெ­ரிக்­கா­வுக்கு வந்து எல்லா­வற்­றை­யும் இல­வ­ச­மா­கப் பெற விரும்­பு­கி­றீர்­கள். நான் அமெ­ரிக்­கா­வில் பிறந்­தேன். நீங்­கள் அமெ­ரிக்­கா­விலா பிறந்­தீர்­கள்?

"இந்­தி­யா­வில் வாழ்க்கை பிர ­மா­தம் என்­றால் நீங்­கள் எல்­லாம் ஏன் இங்கே வந்­தீர்­கள்? திரும்பி போக வேண்­டி­ய­து­தானே?" என்று அந்த மெக்­சிகோ அமெ­ரிக்க மாது திட்­டி­ய­தை அந்­த 5.30 நிமி­ட காணொளி காட்­டி­யது.

அப்­போது "நாங்­கள் உங்­களை ஒன்­றுமே சொல்­ல­வில்லை. நீங்­கள்­தான் எங்­க­ளி­டம் வந்து வம்பு செய்­கி­றீர்­கள்," என்று இந்­திய அமெ­ரிக்க மாதர்­கள் தெரி­வித்­த­னர்.

அந்­தச் சம்­ப­வத்தைத் தன் கைப் பேசி­யில் பட­மெ­டுக்க அந்த நால்­வரில் ஒரு மாது முயன்­றார்.

அப்­போது படம் எடுப்­பதை நிறுத்­தும்­படி எச்­ச­ரித்த அந்த மெக்­சிகோ அமெ­ரிக்க மாது, இல்லை என்­றால் துப்­பாக்­கியை எடுத்து சுட்டுவிடு­வேன் என்று மிரட்டி கைப்பே­சியைப் பிடுங்க முயன்று இந்­திய மாதர்­களைத் தாக்­கி­னார். அந்த நான்கு மாதர்­களில் ஒரு­வ­ரான ராணி பானர்ஜி என்­ப­வர் காணொளியை ஃபேஸ்புக்­கில் பதி­வேற்­றி­னார்.

இத­னி­டையே, இந்­தச் சம்­ப­வம் பற்றி கருத்­து­ரைத்த காவல்­துறை, இன வெறுப்புக் குற்­ற­மாகக் கருதி விசா­ரணை நடப்பதாகக் கூறியது.