பிரதமர் லீ: முதிர்ச்சியடைந்த பேட்டைகளும் உருமாறும்

பிரதமர் லீ: முதிர்ச்சியடைந்த பேட்டைகளும் உருமாறும்

2 mins read
c60203ba-2543-443c-bbb4-355e9b6e0118
டெக் கீயில் நேற்றிரவு நடந்த தேசிய தினக் கொண்டாட்ட இரவு விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, குழந்தைகளுடன் கலந்துறவாடி மகிழ்ந்த பிரதமர் லீ சியன் லூங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூரை உரு­மாற்­று­வ­தற்­கான திட்­டங்­கள் புதிய நக­ரங்­களை மட்டு­மல்­லாது முதிர்ச்சி அடைந்த பேட்­டை­க­ளை­யும் உள்­ள­டக்­கும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­துள்­ளார்.

தமது டெக் கீ தொகு­தி­யில் நேற்று இடம்­பெற்ற தேசிய தினக் கொண்­டாட்ட இரவு விருந்­தில் பங்­கேற்­றுப் பேசி­ய­போது பிர­த­மர் இத­னைத் தெரி­வித்­தார்.

உரு­மாற்­றத் திட்­டங்­க­ளைப் பொறுத்­த­மட்­டில், முதிர்ச்­சி­ய­டைந்த பேட்­டை­கள் விட்­டு­வி­டப்­ப­டாது என்­ப­தற்கு டெக் கீ வட்­டா­ரம் ஓர் எடுத்­துக்­காட்­டா­கத் திகழ்­கிறது என்று திரு லீ குறிப்­பிட்­டார்.

இம்­மா­தம் 22ஆம் தேதி தேசிய தினப் பேரணி உரையை ஆற்­றி­ய­போது, ஜூரோங் லேக் வட்­டா­ரம், தி கிரேட்­டர் சௌதர்ன் வாட்­டர்­ஃபி­ரன்ட், பாய லேபார் போன்ற புதிய நகர மேம்­பாட்­டுத் திட்­டங்­கள் குறித்து அவர் பேசி­யி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், "ஒவ்­வொரு புதிய நக­ர­மும் முந்­திய நக­ரத்­தை­விட மேலும் வாழத் தகுந்­த­தா­க­வும் பசு­மை­யா­ன­தா­க­வும் நீடித்து நிலைத்­தன்மை மிக்­க­தா­க­வும் இருக்­கும்," என்று அப்­போது அவர் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

2030களில் இருந்து பாய லேபார் ஆகா­யப்­ப­டைத்­த­ளத்­தின் இட­மாற்­றம் செய்­யப்­ப­டும்­போது, அந்­தப் பகு­தி­யில் கிட்­டத்­தட்ட 150,000 புதிய தனி­யார் வீடு­க­ளை­யும் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­க­ளை­யும் கட்ட முடி­யும் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இது, தோரா­ய­மாக பொங்­கோல் மற்­றும் செங்­காங் வட்­டா­ரத்­தின் அள­விற்கு ஈடா­னது.

அத்­து­டன், இடத்தை அதி­கப்­படுத்தி, மேலும் பல வச­தி­களை ஏற்­ப­டுத்­தும் வகை­யில், அந்த ஆகா­யப்­ப­டத்­தைச் சுற்­றி­யுள்ள ஹவ்­காங், மரின் பரேட், பொங்­கோல் போன்ற பகு­தி­களில் சில கட்­ட­டங்­க­ளின் உய­ரக் கட்­டுப்­பாடு­களும் நீக்­கப்­ப­ட­லாம்.

நேற்­றைய டெக் கீ தேசிய தினக் கொண்­டாட்ட இரவு விருந்து நிகழ்ச்­சி­யின்­போது, அவ்­வட்­டா­ரத்தை மேலும் மேம்­ப­டுத்­து­வது தொடர்­பான திட்­டங்­க­ளை­யும் பிர­த­மர் பகிர்ந்­து­கொண்­டார்.

அங் மோ கியோ அவென்யூ 1ல் குறிப்­பிட்ட சில புளோக்­கு­களில் இடம்­பெ­றும் மேம்­பாட்­டுப் பணி­கள் 2023 மூன்­றாம் காலாண்­டிற்­குள் நிறை­வு­பெ­றும். அவ்­வட்­டா­ரத்­தில் புதிய பிசி­எஃப் ஸ்பார்க்­கல்­டாட்ஸ் மையத்­தைக் கடந்த மாதம் தாம் திறந்­து­வைத்­த­தை­யும் திரு லீ சுட்­டி­னார்.

"இதன்­மூ­லம் இளம் குடும்­பங்­கள் எளி­தில் அணுகி, கட்­டுப்­ப­டி­யா­ன­ கட்­ட­ணத்­தில் குழந்­தைப் பரா­ம­ரிப்பு சேவை­யைப் பெற முடி­யும்," என்­றார் அவர்.

குடி­யி­ருப்­பா­ளர்­கள் எளி­தில் அணு­கக்­கூ­டிய வகை­யில் அங் மோ கியோ நகர மையத்தை மறு­வடி­வ­மைப்பு செய்து, மேம்­ப­டுத்து­வதற்­குத் திட்­டங்­கள் இருப்­ப­தா­க­வும் பிர­த­மர் குறிப்­பிட்­டார்.

அங் மோ கியோ ஹப்­பிற்கு வெளி­யி­லுள்ள பகு­தி­யை­யும் உள்­ள­டக்­கிய அந்த மேம்­பாட்­டுப் பணி­களின் முதற்­கட்­ட­மா­னது அடுத்த ஆண்டு இரண்­டாம் காலாண்­டிற்­குள் நிறை­வு­றும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தா­க­வும் திரு லீ கூறி­னார்.