இலங்கை விவகாரம்: சீனாவின் குற்றச்சாட்டிற்கு இந்தியா பதிலடி

இலங்கை விவகாரம்: சீனாவின் குற்றச்சாட்டிற்கு இந்தியா பதிலடி

2 mins read

தேவையற்ற நெருக்குதல் கூடாது எனச் சாடல்

இலங்­கைக்கு இப்­போது தேவைப்­படு­வது உத­வி­தானே தவிர, தேவை­யற்ற நெருக்­கு­தல்­கள் அல்ல என்று கூறி, சீனத் தூத­ரின் கருத்­துக்கு இந்­தியா பதி­லடி கொடுத்­துள்­ளது.

"இலங்­கைக்­கான சீனத் தூத­ரின் கருத்­து­களை அறிந்­தோம். அவ­ரது இந்த அடிப்­படை அர­ச­தந்­திர நெறி­முறை மீற­லா­னது, அவ­ரது தனிப்­பட்ட பண்­பாக இருக்­க­லாம் அல்­லது சீனாவின் தேசிய அணு­கு­மு­றை­யின் வெளிப்­பா­டா­க­வும் இருக்­க­லாம்," என்று இலங்­கைக்­கான இந்­தி­யத் தூத­ரகம் தனது டுவிட்­டர் பக்­கத்­தில் தெரி­வித்­துள்­ளது.

இந்­தியா மீதான சீனத் தூதர் ஸி ஸென்­ஹோங்­கின் பார்வை, அவ­ரது சொந்த நாடு நடந்­து­கொள்­ளும் விதத்­தின் வெளிப்­பா­டா­க­வும் இருக்­க­லாம் என்று இந்­தி­யத் தூத­ர­கம் கூறி­யி­ருக்­கிறது.

"ஆனால், இந்­தியா அவ்­வாறு நடந்­து­கொள்­ளாது என்று உறு­தி­ அளிக்­கி­றோம்," என்று அந்த டுவிட்­டர் பதி­வில் கூறப்­பட்­டு உள்­ளது.

அறி­வி­யல் ஆய்­வுக் கப்­ப­லின் வரு­கைக்கு சீனத் தூதர் புவி­சார் அர­சி­யல் சூழ­லைக் கார­ண­மா­கக் கூறு­வது போலி நடிப்பு என்­றும் அது சாடி­யது.

ஒளி­வு­ம­றை­வும் கடன் அடிப்­ப­டை­யி­லான செயல்­திட்­டங்­களும் குறிப்­பாக சிறிய நாடு­க­ளுக்கு இப்­போது ஒரு பெரும் சவா­லாக உள்­ளன என்­றும் அண்­மைய செயல்­பா­டு­களை எச்­ச­ரிக்­கை­யாகக்கொள்ள வேண்­டும் என்­றும் இந்­தி­யத் தூத­ர­கம் தெரி­வித்­தது.

"இலங்­கைக்கு இப்­போது தேவை உத­வி­தான், தேவை­யில்­லாத நெருக்­கு­தல்­கள் அல்ல," என்­றும் அது வலி­யு­றுத்­தி­யது.

பாது­காப்­புக் கார­ணங்­க­ளுக்­காக என்று கூறிக்­கொண்டு, ஆனால் அதற்கு எந்தச் சான்­று­களும் இலங்­கை­யின் சுதந்­தி­ரத்­தி­லும் இறை­யாண்­மை­யி­லும் வெளி­நாட்­டுத் தலை­யீடு இருப்­ப­தாகக் கடந்த வெள்­ளிக்­கி­ழமை சீனா, இந்­தி­யாவை மறை­மு­க­மாகச் சாடி­யி­ருந்­தது.

இலங்­கைத் துறை­மு­க­மான அம்­பாந்­தோட்­டைக்­குச் சீன ஆய்வுக் கப்­பல் வரு­வதை எதிர்த்து இலங்­கைக்கு இந்­தியா நெருக்­கடி கொடுத்­தது என்ற சீனா­வின் மறை­மு­க­மான சாடலை இந்­தியா நிரா­க­ரித்­தது.

அதே நேரத்­தில், தனது பாது­காப்பு குறித்த அக்­க­றை­க­ளின் அடிப்­ப­டை­யி­லேயே தான் முடி­வு எ­டுப்­ப­தா­க­வும் இந்­தியா உறு­தி­படத் தெரி­வித்­தது.

"இந்­தியா மீதான சீனா­வின் மறை­மு­க­மான சாடலை நிரா­கரிக்­கி­றோம். இலங்கை, இறை­யாண்மை கொண்ட ஒரு நாடு. அதன் சொந்த முடி­வு­களை அதுவே எடுக்­கிறது," என்று அண்­மை­யில் புது­டெல்­லி­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசும்­போது இந்­திய வெளி­யு­றவு அமைச்­சின் பேச்­சா­ளர் அரிந்­தம் பக்சி கூறி­ இ­ருந்­தார்.

இம்­மா­தம் 16ஆம் தேதி இலங்­கை­யின் அம்­பாந்­தோட்­டைத் துறை­மு­கத்­தைச் சென்­ற­டைந்­த அதி­ந­வீன தொழில்­நுட்ப அம்­சங்­கள் கொண்ட சீனா­வின் 'யுவான் வாங் 5' கப்­பல், பின்­னர் 22ஆம் தேதி அங்­கி­ருந்து கிளம்­பி­யது.

இந்­நி­லை­யில், இலங்­கைக்­குச் செல்­லும் வழி­யில் சீனக் கப்­ப­லில் உள்ள கண்­கா­ணிப்பு அமைப்­பு­கள் இந்­தி­யா­வின் தற்­காப்பு அம்­சங்­க­ளைக் குறி­வைக்க முய­ல­லாம் என்று இந்­தியா கவலை தெரி­வித்­தி­ருந்­தது.