மனைவிக்குப் பயந்து ஒரு மாதமாக மரத்தில் வசிக்கும் ஆடவர்

2 mins read
cc545310-6b15-46d9-8c55-3b3f6a4f9bdd
தன் மருமகளிடம், தன் மகன் அடிவாங்காத நாளே இல்லை என்கிறார் பனைமரத்தின்மீது வசிக்கும் ராம் பிரவேஷின் (இடப்படம்) தந்தை விஷுன்ராம். படங்கள்: இந்திய ஊடகம் -
multi-img1 of 2

குடும்­பத்­தில் கண­வன்-மனை­வி இடையே அவ்­வப்­போது கருத்து வேறு­பா­டு­களும் சண்­டை­களும் ஏற்­ப­டு­வது இயல்­பு­தான்.

ஆனால், மனை­விக்­குப் பயந்து ஏறக்­கு­றைய ஒரு மாத­மாக பனை­மரத்­தின் மேலே ஆட­வர் ஒரு­வர் வசித்­து­வ­ரு­வது பெரும் வியப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்­தி­யா­வின் உத்­த­ரப் பிர­தேச மாநி­லம், மவு மாவட்­டம், கோப்­ப­கஞ்ச் பகு­தி­யைச் சேர்ந்த ராம் பிர­வேஷ், 42, என்ற அந்த ஆட­வர், அம்­ம­ரத்­தைக் கிட்­டத்­தட்ட ஒரு வீடு­போ­லவே ஆக்­கிக்­கொண்­ட­தாகச் சொல்லி வருத்­தப்­பட்­டார் அவ­ரின் தந்தை விஷுன்­ராம்.

தம் மகன் ராம் பிர­வே­ஷுக்­கும் அவ­ரு­டைய மனை­விக்­கும் அன்­றா­டம் சண்டை நடக்­கும் என்­றும் மனை­வி­யி­டம் அவர் அடி­வாங்­காத நாளில்லை என்­றும் திரு விஷுன்­ராம் கூறி­னார்.

குடும்­பத்­தி­னர் உணவு, தண்­ணீர் கொண்­டு­வந்து கொடுத்­தால் ராம் பிர­வேஷ் அதைக் கயிற்­றில் கட்டி மேலே இழுத்­துக்­கொள்­வாராம். அன்­றா­டக் கடன்­க­ளைக் கழிக்க இரவு நேரத்­தில் கீழே இறங்கி­வ­ரும் அவர், அதை முடித்­த­பின் மீண்­டும் மரத்­தின்­மீது ஏறிக்­கொள்­வ­தாக கிரா­ம­வா­சி­கள் தெரி­வித்­த­னர்.

கிட்டத்தட்ட 80 அடி உயரமுள்ள அம்­ம­ரம் ஊரின் நடுவே அமைந்­தி­ருப்­ப­தால் அதன் மேலி­ருந்து பார்த்­தால் எல்லா வீடு­க­ளின் முற்­றங்­களும் நன்­றா­கத் தெரி­யு­மாம். அத­னால், ராம் பிர­வேஷ் மரத்­தின் மேலி­ருப்­பது தங்­க­ளது அந்­த­ரங்­கத்­திற்கு இடை­யூ­றாக உள்­ளது என்று அவ்­வூர்ப் பெண்­கள் புலம்பு­கின்­ற­னர்.

இத­னால், ராம் பிர­வேஷை எப்­படி­யா­வது கீழி­றக்க தாங்­கள் முயன்­றால் தங்­கள்­மீது அவர் செங்­கற்­களை வீசி எறி­வ­தாக உள்­ளூர்­வாசி­கள் கூறினர்.

இது­கு­றித்து காவல்­து­றைக்­குத் தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது. அவ்­வி­டத்­திற்கு வந்த காவல்­து­றை­யினர் நிலை­மை­யைக் காணொ­ளி­யா­கப் பதி­வு­செய்ததுடன் கூடிய விரை­வில் நட­வடிக்கை எடுப்­ப­தாகவும் உறு­தி­யளித்­துள்­ள­னர்.

மரத்­தின்­மீது வசிக்­கும் தன் மகனைக் காண அக்­கம்­பக்க ஊர்­களில் இருந்து நாள்­தோ­றும் பலர் வந்­து­செல்­வ­தாக திரு விஷுன்ராம் சொன்­னார்.