ஆண்டிறுதிக்குள் 4,000 பேரைப் பணியமர்த்த திட்டம்

ஆண்டிறுதிக்குள் 4,000 பேரைப் பணியமர்த்த திட்டம்

2 mins read
abe5c695-ac41-4d4a-9464-51caf949b642
சாங்கி விமான நிலைய நான்காம் முனையம் செப்டம்பர் 13ஆம் தேதி அதிகாரபூர்வமாகத் திறக்கப்படும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

விமானப் போக்குவரத்துத் துறையில் கூடிவரும் தேவையைப் பூர்த்திசெய்ய இலக்கு

ஆண்டிறுதிக் காலகட்டத்தில் சிங்கப்பூருக்குக் கூடுதலான சுற்றுப்பயணிகள் வருவார்கள் என எதிர்­பார்க்­கப்­படுவதால் அதைச் சமா­ளிக்க, விமா­னப் போக்­கு­வரத்துத் துறை ஆண்­டி­று­திக்­குள் மேலும் 3,500 முதல் 4,000 ஊழி­யர்­கள் வரை பணி­ய­மர்த்த வேண்­டும் என்று போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ்.ஈஸ்­வ­ரன் தெரி­வித்­துள்­ளார்.

சாங்கி விமான நிலை­யத்­தின் நான்­காம் முனை­யத்­திற்கு நேற்று வரு­கை­ய­ளித்த அவர் இத­னைத் தெரி­வித்­தார்.

அக்­டோ­பர் முதல், விமா­னச் சேவை எண்­ணிக்கை கொவிட்-19க்கு முன்­பி­ருந்த அள­வில் 80 விழுக்­காட்டை எட்ட சிங்­கப்­பூர் தயா­ராக வேண்­டும் என்று அவர் கூறி­னார். தற்­போது இந்த அளவு 64 விழுக்­கா­டாக உள்­ளது. ஐந்து மாதங்­க­ளுக்கு முன்பு சிங்­கப்­பூர் அதன் எல்­லை­களை மீண்­டும் திறந்­த­தைத் தொடர்ந்து, பய­ணி­கள் எண்­ணிக்கை நிலை­யாக உயர்ந்து, தற்­போது 58 விழுக்­கா­டாக உள்­ளது.

போக்­கு­வ­ரத்து அதி­க­ரித்து வரு­வ­தற்கு ஏற்ப போது­மான மனித­வ­ளம் தேவை என்று கூறிய திரு ஈஸ்­வ­ரன், விமா­னப் போக்கு­வரத்­துத் துறை­யில் கடந்த ஈராண்டு­களில் ஏறக்­கு­றைய 10,000 ஊழி­யர்­கள் குறைக்­கப்­பட்­ட­தா­கச் சொன்­னார். கொவிட்-19க்கு முன்­பி­ருந்த நிலை­யில் பணி­யி­லி­ருந்த 35,000 ஊழி­யர்­களில் இது கிட்­டத்­தட்ட மூன்­றில் ஒரு பங்­கா­கும்.

இவ்­வாண்­டின் முதல் ஆறு மாதங்­களில் இத்­து­றை­யில் 4,000க்கும் அதி­க­மா­னோர் பணி­ய­மர்த்­தப்­பட்­ட­னர். மேலும் 4,000 பேரைப் பணி­ய­மர்த்­து­வ­தன் மூலம் ஊழி­யர் எண்­ணிக்கை ஏறக்­கு­றைய 33,000ஐ எட்­டும்.

"இது எளி­தான பணி­யன்று. பணி­ய­மர்த்­தப்­ப­டு­வோர் தேவை­யான பயிற்­சி­யைப் பெற்­றி­ருப்­பதை நாங்­கள் உறு­தி­செய்ய வேண்­டும். இது ஒரு பெரிய அள­வி­லான நட­வடிக்­கை­யா­கும். அனைத்து பங்கு­தா­ரர்­களும் இதில் கவ­னம் செலுத்தி வரு­கின்­ற­னர்," என்­றார் திரு ஈஸ்வரன்.

இதற்கான ஆயத்தப் பணி­கள் நன்­றாக நடை­பெற்று வரு­வ­தாக அவர் சொன்­னார்.

"ஆண்­டி­று­திக்­குள் ஏறத்­தாழ 70 மில்­லி­யன் பய­ணி­க­ளைக் கையாள முடி­வதை உறு­தி­செய்ய, எங்­க­ளது இலக்கை நோக்கி நாங்­கள் செயல்­பட்டு வரு­கி­றோம்," என்று அவர் குறிப்­பிட்­டார்.

நான்­காம் முனை­யம் செப்­டம்­பர் 13ஆம் தேதி­தான் அதி­கா­ர­பூர்­வ­மா­கத் திறக்­கப்­படும் என்­றா­லும், ஐந்து விமா­னங்­கள் இங்­கி­ருந்து நேற்று புறப்­ப­ட­வி­ருந்­தன.

ஹாங்­காங்­கிற்கு புறப்­பட்ட கேத்தே பசி­ஃபிக் விமா­னமே நான்­காம் முனை­யத்­தில் இருந்து நேற்று புறப்­பட்ட முதல் விமா­ன­மா­கும்.

இதற்­கி­டையே, மலி­வுக் கட்­டண விமான நிறு­வ­ன­மான ஜெட்ஸ்­டார் ஒன்­றாம் முனை­யத்­தில் இருந்து நான்­காம் முனை­யத்­திற்கு மாற மறுப்பு தெரி­வித்து ஒரு மாதத்­திற்கு மேல் ஆகி­யுள்ள வேளை­யில், விமான நிலை­யக் குழு­மம் நிர்­ண­யித்­துள்ள அக்­டோ­பர் 25 காலக்­கெ­டு­வுக்­குள் அது இடம் மாறுமா என்­பது பற்றி தெளி­வா­கத் தெரி­ய­வில்லை.

ஜெட்ஸ்­டார் நிறு­வ­னத்­தின் செயல்­பாட்­டுத் தேவை­க­ளை­யும் அதன் பய­ணி­க­ளின் தேவை­க­ளை­யும் எப்­படி பூர்த்தி செய்­வது என்­பது பற்றி ஜெட்ஸ்­டா­ரும் சாங்கி விமான நிலை­யக் குழு­ம­மும் தொடர்ந்து பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­வ­தாக திரு ஈஸ்­வ­ரன் சொன்­னார்.

அக்­டோ­பர் 25க்குள் ஜெட்ஸ்­டார் இடம் மாறுமா என்று செய்­தி­யா­ளர்­கள் கேட்­ட­தற்கு, "இதை விரை­வாக செய்­வ­தற்­குப் பதி­லாக சிறப்­பாகச் செய்­வதே முக்­கி­யம்," என்று அவர் பதி­ல­ளித்­தார்.

இரு­த­ரப்­புக்கும் வெற்றி கிடைப்­பதன் அடிப்­ப­டை­யில் அவை பேச்சு­வார்த்தை நடத்தி வரு­வ­தாக அவர் சொன்­னார்.