போதைப்பொருள் உட்கொண்டதை ஜோசஃப் ஸ்கூலிங், அமெண்டா லிம் ஒப்புக்கொண்டனர்

போதைப்பொருள் உட்கொண்டதை ஜோசஃப் ஸ்கூலிங், அமெண்டா லிம் ஒப்புக்கொண்டனர்

1 mins read
e0c7fe6b-add7-47b9-b573-e2f6e7db3dcf
-

முன்­னாள் ஒலிம்­பிக் வெற்­றி­யா­ளர் ஜோசஃப் ஸ்கூ­லிங்­கும் தேசிய நீச்சல் வீராங்­கனை அமெண்டா லிம்­மும் (படங்கள்) போதைப்­பொருள் உட்­கொண்­டது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

இது­கு­றித்து ஸ்போர்ட் சிங்­கப்­பூர் அமைப்பு நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில், கஞ்சா உட்­கொண்­டது தொடர்­பான குற்­றங்­கள் குறித்து இவ்­வி­ரு­வ­ரி­ட­மும் மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு விசா­ரணை நடத்­தி­ய­தா­கத் தெரி­வித்­தது. இந்த விசா­ர­ணை­யின் முடி­வில், போதைப்­பொ­ருள் பயன்­பாட்­டுச் சட்­டத்­தின்­கீழ் போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு லிம்­முக்கு கடு­மை­யான எச்­ச­ரிகை விதித்­தது. ஸ்கூ­லிங் தற்­போது தேசிய சேவை­யாற்றி வரு­வ­தால், அவர் மீது தகுந்த நட­வ­டிக்கை எடுக்க தற்­காப்பு அமைச்­சி­டம் அவர் ஒப்­ப­டைக்­கப்­பட்­டார். தற்­காப்பு அமைச்சு வெளி­யிட்ட மற்­றோர் அறிக்­கை­யில், போதைப்­பொ­ருள் புழக்­கத்தை சிங்­கப்­பூர் ஆயு­தப் படை அறவே சகித்­துக்­கொள்­ளாது என்று கூறி­யது. தேசிய சேவை­யா­ளர்­கள் போதைப்­பொ­ருள் உட்­கொண்­டது உறு­தி­செய்­யப்­பட்­டால் அவர்­கள் மீது குற்­றஞ்­சாட்­டப்­பட்டு ஆயு­தப் படை­யின் தடுப்பு முகாம்­களில் தடுத்து வைக்­கப்­ப­டு­வர்.

கடந்த மே மாதம் வெளி­நாட்­டில் இருந்­த­போது தாம் கஞ்சா உட்­கொண்­டதை ஸ்கூ­லிங் ஒப்­புக்­கொண்­டார். அப்­போது இவர் தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­களுக்­காக பயிற்சி பெற்று அதில் பங்­கு­பெற முழு­நேர தேசிய சேவை­யி­லி­ருந்து சிறி­து­கா­லம் விடுப்பு எடுத்­துக்­கொண்ட கால­கட்­டம் அது. இந்­நி­லை­யில், போதைப்­பொருள் உட்­கொண்­ட­தற்­காக ஸ்கூ­லிங் மன்­னிப்பு கேட்­டுக்­கொண்­டு உள்­ளார்.

"எனது செயல்­கள் என்­னைச் சுற்­றி­யுள்­ள­வர்­கள், குறிப்­பாக என் குடும்­பத்­தார், இளம் ரசி­கர்­க­ளுக்­குத் துன்­பத்தை அளித்­துள்­ளது. இதற்­காக நான் மன்­னிப்பு கேட்டுக்­கொள்­கி­றேன். என் வாழ்­வின் சவால்­மிக்க கால­கட்­டத்­தில் மனத்­த­ள­வில் பல­வீ­ன­ம­டைந்து இந்­தத் தவற்­றைச் செய்­து­விட்­டேன்," என்று வருத்­தம் தெரி­வித்­தார் ஸ்கூ­லிங்.