சோவியத் ஒன்றியத்தின் கடைசி அதிபர் கோர்பசோவ் காலமானார்

சோவியத் ஒன்றியத்தின் கடைசி அதிபர் கோர்பசோவ் காலமானார்

2 mins read
1c896554-d5a0-40af-b0db-0e805b94a12b
ரஷ்யாவின் இப்போதைய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் (வலது) மிக்கைல் கோர்பசோவ். கோப்புப்படம்: இபிஏ -

அமெ­ரிக்­கா­விற்­கும் சோவி­யத் ஒன்­றி­யத்­திற்­கும் இடை­யி­லான பனிப்­போரை முடி­விற்­கு கொண்டு­ வந்த மிக்­கைல் கோர்­ப­சோவ் கால­மா­னார். இவ­ருக்கு வயது 91.

சோவி­யத் ஒன்­றி­யத்­தின் கடைசி அதி­ப­ரா­கத் திகழ்ந்த திரு கோர்­ப­சோவ், இரும்­புத்­திரை நாடு என அறி­யப்­பட்ட சோவி­யத் ஒன்­றி­யத்தை உலக நாடு­க­ளுக்­குத் திறந்­து­விட்­டார்; அமெ­ரிக்­கா­வு­டன் ஆயு­தக் குறைப்பு உடன்­பாடு செய்து­கொண்­டார்; இரண்டாகப் பிரிந்த ஜெர்மனி மீண்­டும் ஒரே நாடாக இணைய வழி­வ­குத்­தார்.

ஆனா­லும், சோவி­யத் ஒன்­றி­யம் பல நாடு­க­ளா­கப் பிரி­வதை இவ­ரால் தடுக்க முடி­ய­வில்லை.

நீண்­ட­கா­ல­மாக நோய்­வாய்ப்­பட்­டி­ருந்த திரு கோர்­ப­சோவ் நேற்று முன்­தி­னம் இரவு கால­மா­னார் என்று ரஷ்­யா­வின் மத்­திய மருத்­து­வ­ம­னை­யின் அறிக்­கை­யைச் சுட்டி, அந்­நாட்­டின் இன்­டர்­ஃபேக்ஸ் செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது.

திரு கோர்­ப­சோ­வின் மறை­விற்கு ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் ஆழ்ந்த இரங்­கல் தெரி­வித்­துள்­ளார்.

"உலக வர­லாற்­றில் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­திய அர­சி­யல்­வா­தி­யா­க­வும் அர­ச­தந்­தி­ரி­யா­க­வும் திரு கோர்­ப­சோவ் திகழ்ந்­தார்," என்று தமது இரங்­கல் செய்­தி­யில் அதி­பர் புட்­டின் குறிப்­பிட்­டுள்­ளார்.

முன்­ன­தாக, சோவி­யத் ஒன்றி­யம் துண்டு துண்­டா­னதே 20ஆம் நூற்­றாண்­டின் ஆக மோச­மான புவி­சார் அர­சி­யல் பேர­ழிவு என்று அதி­பர் புட்­டின் குறிப்­பிட்­டி­ருந்­தது நினை­வு­கூ­ரத்­தக்­கது.

திரு கோர்­ப­சோ­விற்கு 1990ஆம் ஆண்­டில் நோபெல் பரிசு வழங்­கப்­பட்­டது.

ரஷ்­யத் தலை­ந­கர் மாஸ்­கோ­வில் நோவோ­டெ­விச்சி இடு­காட்­டில் தம் மனைவி ரைசா­விற்கு அரு­கி­லேயே திரு கோர்­ப­சோவ் நல்­ல­டக்­கம் செய்­யப்­ப­டு­வார் எனத் தெரி­விக்­கப்­பட்­டது. திரு­வாட்டி ரைசா 1999ஆம் ஆண்­டி­லேயே இறந்­து­விட்­டார்.

1985ஆம் ஆண்டு தமது 54 வய­தில் சோவி­யத் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் தலை­வ­ரா­கப் பொறுப்­பேற்ற திரு கோர்­ப­சோவ், பல அர­சி­யல், பொரு­ளி­யல் சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டார்.

உல­கத் தலை­வர்­கள் இரங்­கல்

திரு கோர்­ப­சோ­வின் மறை­விற்கு உலக நாடு­க­ளின் தலை­வர்­கள் பல­ரும் இரங்­கல் தெரி­வித்­துள்­ளனர்.

திரு கோர்­ப­சோவை அரி­ய­தொரு தலை­வர் எனக் குறிப்­பிட்ட அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன், பனிப்­போர் காலத்­தில் நில­விய பதற்­றங்­க­ளுக்கு இடையே மாறு­பட்ட எதிர்­கா­லம் சாத்­தி­ய­மா­னது என்று கற்­பனை செய்து பார்க்க முடிந்த தனித்­து­வ­மான அர­சி­யல்­வாதி என்­றும் புக­ழா­ரம் சூட்­டி­னார்.

திரு கோர்­ப­சோ­வின் துணிச்­ச­லை­யும் நேர்­மை­யை­யும் வியந்து போற்­றிய பிரிட்­டிஷ் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன், "உக்­ரேன்­மீது புட்­டின் படை­யெ­டுத்­துள்ள இந்­தக் கால­கட்­டத்­தில், சோவி­யத் சமூ­கத்தை உலக நாடு­க­ளுக்­குத் திறந்­து­விட அவர் கொண்­டி­ருந்த களைப்­ப­றி­யாக் கடப்­பாடு நமக்­கெல்­லாம் ஓர் எடுத்­துக்­காட்­டா­கத் திகழ்­கிறது," என்று கூறி­னார்.

நம்­ப­க­மான, மதிப்­பிற்­கு­ரிய தலை­வர் என்­றும் சுதந்­தி­ர­மான ஐரோப்­பா­விற்கு வழி­ய­மைத்­துக் கொடுத்­த­வர் என்­றும் திரு கோர்­பசோ­வைப் பாராட்­டி­னார் ஐரோப்­பிய ஆணை­யத்­தின் தலை­வர் உர்­சுலா வோன் டெர் லெயன். அவர் விட்­டுச்­சென்ற மரபை நாம் ஒரு­போ­தும் மறத்­த­லா­காது என்­றும் திரு­வாட்டி உர்­சுலா சொன்­னார்.