பாகிஸ்தான்: வெள்ளத்தின் பிடியில் 650,000 கர்ப்பிணிகள்

பாகிஸ்தான்: வெள்ளத்தின் பிடியில் 650,000 கர்ப்பிணிகள்

2 mins read
feaa08a2-0dda-4d86-b0f5-9ea715c3a0d7
சுவாட் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் இப்படிக் கயிற்றில் தொட்டில் கட்டி ஆற்றைக் கடக்கும் பாகிஸ்தானின் பஹ்ரேன் நகரவாசிகள். படம்: ஏஎஃப்பி -

பாகிஸ்­தா­னில் வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்­டுள்ள பகு­தி­களில் குறைந்­தது 650,000 கர்ப்­பி­ணி­கள் சிக்­கி­யி­ருப்­ப­தாக ஐக்­கிய நாட்டு மக்­கள்­தொகை நிதிய (யுஎன்­எ­ஃப்­பிஏ) அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

அவர்­க­ளுள் 73,000 பேருக்கு அடுத்த மாதம் குழந்தை பிறக்­க­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தால் அவர்­கள் அனை­வ­ருக்­கும் உட­ன­டி­யாக மகப்­பேற்று மருத்­துவ உதவி தேவைப்­ப­டு­வ­தாக அந்த அமைப்பு கூறு­கிறது.

பாகிஸ்­தா­னில் மழை, வெள்­ளத்­தால் கிட்­டத்­தட்ட 33 மில்­லி­யன் பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்; கிட்­டத்­தட்ட ஒரு மில்­லி­யன் வீடு­கள் சேத­ம­டைந்­துள்­ளன.

இத­னால் பல பெண்­களும் குழந்­தை­களும் பாலின அடிப்­ப­டை­யி­லான வன்­முறைக்கு ஆளா­கும் அபா­ய­மி­ருப்­ப­தா­க­வும் பாலின, இனப்­பெ­ருக்க சுகா­தார அமைப்­பான யுஎன்­எ­ஃப்­பிஏ எச்­ச­ரித்­துள்­ளது.

"மிகுந்த சவா­லான சூழ்­நி­லை­யி­லும்­கூட, கர்ப்­பி­ணி­க­ளுக்­கும் புதிய தாய்ர்­மார்­க­ளுக்­கும் உயிர்­காப்பு சேவை­கள் தொடர்ந்து கிடைப்­பதை உறு­தி­செய்­வ­தற்­குப் பங்­கா­ளி­க­ளு­டன் இணைந்து பணி­யாற்றி வரு­கி­றோம்," என்று ஐநா மக்­கள்­தொகை நிதிய அமைப்­பின் பாகிஸ்­தான் பிர­தி­நிதி டாக்­டர் பக்­தி­யோர் கதி­ரோவ் கூறி­னார்.

சிந்து மாநி­லத்­தில் 1,000க்கும் மேற்­பட்ட சுகா­தார நிலை­யங்­களும் பலு­சிஸ்­தா­னில் 198 சுகா­தார நிலை­யங்­களும் சேத­ம­டைந்து­விட்­ட­தாக ஐநா மக்­கள்­தொகை நிதி­யம் தெரி­வித்­தது. அத்­து­டன், சாலை­களும் பாலங்­களும் சேத­ம­டைந்­துள்­ள­தால் பெண்­கள் சுகா­தார நிலை­யங்­க­ளுக்­குச் செல்­வதி­லும் பெரும் சிர­மம் ஏற்­பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்து, அவ­ச­ர­கால உத­வி­யாக சிந்து, பலு­சிஸ்­தான், கைபர் பக்­துன்­குவா, பஞ்­சாப் ஆகிய மாநி­லங்­க­ளுக்கு அதி­க­ள­வில் மகப்­பேற்று மருத்­துவ உத­விச் சாத­னங்­களை ஐநா மக்­கள்­தொகை நிதி­யம் வழங்­கி­யி­ருக்­கிறது.

பெரும் சுகா­தார நெருக்­கடி அபா­யம்

இத­னி­டையே, பாகிஸ்­தா­னில் மூன்­றில் ஒரு பங்கு நிலப்­ப­ரப்பு வெள்­ளத்­தில் மூழ்­கி­யுள்­ள­தால் அங்கு பெரும் சுகா­தார நெருக்­கடி ஏற்­படும் அபா­யம் நில­வு­கிறது.

"அழுக்­கான நீர் சூழ்ந்­துள்­ள­தா­லும் சுகா­தா­ர­மற்ற சூழ­லா­லும் சுகா­தார தோல் நோய்­கள்­தான் முக்­கி­யப் பிரச்­சினை," என்று சிந்து மாநி­லத்­தைச் சேர்ந்த டாக்­டர் சஜ்ஜத் மேமன் கூறி­னார்.

சிரங்கு மற்­றும் பூஞ்­சைத்­தொற்று பாதிப்பு அதி­க­ரித்து வரு­வ­தாக அப்­துல் அஸிஸ் என்ற இன்­னொரு மருத்­து­வர் குறிப்­பிட்­டார்.

இந்­நி­லை­யில், பாகிஸ்­தா­னில் வெள்­ளம் சூழ்ந்­துள்ள பகு­தி­களில் மலே­ரியா, டெங்கிக் காய்ச்­சல் போன்ற நோய்­கள் பர­வும் அபா­ய­மும் நில­வு­வ­தாக உலக சுகா­தார நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே, வெள்­ளத்­தில் உயி­ரி­ழந்­தோர் எண்­ணிக்கை 1,162ஆக உயர்ந்­து­விட்­டது. அவர்­களில் குறைந்­தது 380 பேர் குழந்­தை­கள் என்று பிர­த­மர் ஷெபாஸ் ஷரிஃப் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.