பிரிட்டிஷ் அரசியாரின் இறுதி ஊர்வலம்; வழி நெடுகிலும் மக்கள் இறுதி அஞ்சலி

பிரிட்டிஷ் அரசியாரின் இறுதி ஊர்வலம்; வழி நெடுகிலும் மக்கள் இறுதி அஞ்சலி

2 mins read
f848fc5a-cd82-4091-8fa3-07931153b1aa
காலமான பிரிட்டனின் இரண்டாம் எலிசபெத் அர­சி­யா­ரின் நல்­லு­ட­ல் பேழையைச் சுமந்து செல்­லும் வாக­னம் நேற்று லண்­டன் நேரப்­படி காலை 10 மணிக்கு பால்­மோரல் அரண்­மனையில் இருந்து புறப்பட்டு பால்­மோரல் அருகே இருக்கும் பல்லாட்டர் என்ற கிராமம் வழியாக எடின்பர்க் சென்றது. படம்: ராய்ட்டர்ஸ் -

பிரிட்­ட­னின் இரண்­டாம் எலி­ச­பெத் அர­சி­யா­ரின் இறு­தி ஊர்வலம் நேற்று தொடங்­கி­யது. முதலில், அர­சி­யார் மர­ண­ம­டைந்த பால்­மோரல் அரண்­மனையில் இருந்து எடின்பர்க் வரை அவ­ரின் நல்­லு­டல் பேழை கொண்டு செல்­லப்­ப­ட்டது.

அர­சி­யா­ரின் நல்­லு­ட­லைச் சுமந்து செல்­லும் வாக­னம் நேற்று லண்­டன் நேரப்­படி காலை 10 மணிக்கு இறு­திப் பய­ணத்­தைத் தொடங்­கி­யது.

ஸ்காட்­லாந்து நகர்­க­ளின் வழி­யாக ஆறு மணி நேரம் பய­ணம் செய்து எடின்­பர்க்­கில் உள்ள ஹோலி ரூட் ஹவுஸ் அரண்­மனைக்குக் கொண்டுசெல்­லப்­பட்டு அங்கு இறுதி மரி­யாதை செலுத்­து­வ­தற்­காக இரண்டு நாள் அர­சி­யா­ரின் நல்­லு­டல் பொது­மக்­க­ளின் பார்­வைக்கு வைக்­கப்­படுகிறது.

பிரிட்­டிஷ் மன்­னர் மூன்­றாம் சார்ல்ஸ் திங்­கட்­கி­ழமை எடின்­பர்க் சென்று அங்கு நடக்­கும் வழி­பாட்டில் கலந்துகொள்­வார்.

பிறகு அர­சி­யா­ரின் நல்­லு­டல் தலை­ந­கர் லண்­ட­னுக்குக் கொண்டு செல்­லப்­படும். அங்கு நான்கு நாள்­கள் நல்­லு­டல் பொது­மக்­க­ள் அஞ்சலி செலுத்த வைக்­கப்­பட்டிருக்­கும். பிறகு செப்­டம்­பர் 19ஆம் தேதி இறுதிச்­ச­டங்கு நடை­பெ­றும் என்று அறி­விக்­கப்­பட்டுள்ளது.

இறு­திச் சடங்கைக் காண ஒரு மில்லியன் மக்­கள் திரள்­வார்­கள் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

உல­கம் முழு­வ­தும் உள்ள மக்­களும் அதைப் பார்ப்­பார்­கள்.

ஏரா­ள­மான நாடு­க­ளின் தலை­வர்­கள் அதில் கலந்­து­கொள்­வார்­கள். இரண்­டாம் எலி­ச­பெத் அர­சி­யார் தனது 96வது வய­தில் இம்­மா­தம் 8ஆம் தேதி மர­ண­ம­டைந்­தார். அவர், உல­கின் பல நாடு­களுக்­கும் அரசமைப்புச் சட்டப்படி அர­சி­யாக இருந்து வந்­தார்.

இந்­நி­லை­யில், ஆஸ்­தி­ரே­லியா, நியூ­சி­லாந்து நாடு­க­ளின் தலை­நகர்­களில் நேற்று நடந்த நிகழ்ச்­சி­களில் அந்த இரண்டு நாடு­க­ளுக்­கும் இனி மூன்­றாம் சார்ல்ஸ் அர­ச­ர் பொறுப்பை ஏற்கிறார் என்று பிர­க­ட­னப்­படுத்­தப்­பட்­டது.

நியூ­சி­லாந்­தில் வெல்­லிங்­டன் நக­ரில் நாடா­ளு­மன்­றத்­தில் அந்த அறி­விப்பு விடுக்­கப்­பட்­டது.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் உள்ள பிரிட்டிஷ் பேர­ர­சின் பிர­தி­நி­தி­யான கவர்­னர் ஜென­ரல் டேவிட் ஹார்லி, கேன்­பரா­வில் 21 குண்­டு­கள் முழங்க நாடா­ளு­மன்­றத்தில் நேற்று அந்­தப் பிர­க­ட­னத்தை வெளி­யிட்­டார்.