மறைந்த பிரிட்டிஷ் அரசியாருக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி

மறைந்த பிரிட்டிஷ் அரசியாருக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி

1 mins read
80d38ac0-539d-4de6-812a-2ba816b4f06f
அண்மையில் காலமான இரண்டாம் எலிசபெத் அரசியாருக்கு நேற்று மௌன அஞ்சலி செலுத்திய சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள். படம்: Gov.sg -

கடந்த வியா­ழக்­கி­ழமை தமது 96வது வய­தில் கால­மான பிரிட்­ட­னின் இரண்­டாம் எலி­ச­பெத் அர­சி­யா­ருக்கு சிங்­கப்­பூர் நாடாளு­மன்­றத்­தில் நேற்று ஒரு நிமி­டம் மௌன அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது. பார்­வை­யா­ளர்­கள் பகு­தி­யில் இருந்­த­படி சிங்­கப்­பூ­ருக்­கான பிரிட்­டிஷ் தூதர் காரா ஓவ­னும் இந்நிகழ்­வில் இணைந்­து­கொண்­டார்.

அர­சி­யா­ருக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இடையே நெருங்­கிய உறவு இருந்­தது என்­றும் அவ­ரது மறைவு ஒரு சகாப்­தத்­தின் முடிவு என்­றும் நாடா­ளு­மன்ற அவைத் தலை­வர் இந்­தி­ராணி ராஜா புக­ழஞ்­சலி செலுத்­தி­னார்.

சிங்­கப்­பூர் வர­லாற்­றில் எலி­ச­பெத் அரசி­யா­ருக்கு ஒரு தனித்­து­வ­மான பங்கு இருந்­த­தாக அமைச்­சர் இந்­தி­ராணி குறிப்­பிட்­டார்.

தமது வாழ்­நாள் முழு­வ­தும் கடமை, கருணை, ஞானம் போன்ற பண்­பு­க­ளின் சிக­ர­மாக அர­சி­யார் திகழ்ந்­த­தாக குமாரி இந்­தி­ராணி குறிப்­பிட்­டார்.

எலி­ச­பெத் அர­சி­யார் மும்­முறை சிங்­கப்­பூ­ருக்கு வரு­கை­பு­ரிந்­தார். அந்­தப் பய­ணங்­க­ளின்­போது அவ­ருக்­குப் பல சிறப்­புப் பரி­சு­கள் வழங்­கப்­பட்­டன. அவற்­றில், சிங்­கப்­பூ­ரில் தயா­ரிக்­கப்­பட்ட தங்க முலாம் பூசப்­பட்ட ரோலே புகைப்­ப­டக்­க­ருவியையும், தங்­கம் மற்­றும் வைரத்­தி­னா­லான உடுப்­பூசியையும் (புரூச்) அர­சி­யார் பலமுறை பயன்படுத்தியதாக நம்­பப்­ப­டு­கிறது.

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் சார்பில் மன்னர் சார்ல்ஸ், அரச குடும்பத்தினர், பிரிட்டிஷ் மக்கள் ஆகியோருக்கு குமாரி இந்திராணி ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துகொண்டார்.