கவனமாகப் பரிசீலிக்கப்படும்

கவனமாகப் பரிசீலிக்கப்படும்

4 mins read

'ஒன் பாஸ்' விண்ணப்பங்கள்: மனிதவள அமைச்சர் விளக்கம்

புதிய வெளி­நாட்­டுக் கட்­ட­மைப்பு, நிபு­ணத்­துவ வேலை அனு­மதி அட்டை (ஒன் பாஸ்) தகு­தி­யா­ன­வர்­க­ளுக்கு வழங்­கப்­படு­வதை உறு­திப்­ப­டுத்த ஈர­டுக்­குப் பாது­காப்பு அம்­சங்­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்று மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று தெரி­வித்­தார்.

அனைத்து 'ஒன் பாஸ்' விண்­ணப்­பங்­க­ளை­யும் மனி­த­வள அமைச்சு கவ­ன­மா­கப் பரி­சீ­லிக்­கும் என்று அமைச்­சர் டான் கூறி­னார்.

புதிய 'ஒன் பாஸ்' வேலை அனு­மதி அட்டை தொடர்­பாக முதன்­மு­த­லில் கடந்த மாதம் 29ஆம் தேதி அறி­விப்பு வெளி­யா­னது.

இத­னை­ய­டுத்து, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் 16 பேர் அதன் தொடர்­பில் கேள்வி எழுப்­பி­யி­ருந்­த­னர். குறிப்­பாக, அந்த வேலை அனு­மதி அட்­டை­யைத் தவ­றா­கப் பயன்­ப­டுத்­து­வதை அல்­லது மோசடி விண்­ணப்­பங்­க­ளைத் தடுக்­கும் திட்­டங்­கள் குறித்து அவர்­கள் விளக்­கம் கேட்­டி­ருந்­த­னர்.

ஒரே நிறு­வ­னத்­தி­டம் இருந்து $30,000 அல்­லது அதற்­கு­மேல் மாத ஊதி­யம் பெறும் வெளி­நாட்­டுத் திற­னா­ளர்­க­ளுக்கு அல்­லது கலை மற்­றும் கலா­சா­ரம், விளை­யாட்டு, அறி­வி­யல் மற்­றும் தொழில்­நுட்­பம், கல்­வி­யி­யல், ஆராய்ச்சி ஆகிய துறை­களில் தலை­சி­றந்த சாத­னை­யா­ளர்­க­ளுக்கு 'ஒன் பாஸ்' வழங்­கப்­படும்.

அவர்­க­ளின் வாழ்க்கைத்துணைகளும் ஒப்­பு­தல் கடி­தம் பெற்­ற­பின் சிங்­கப்­பூ­ரில் வேலை­செய்ய அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.

"இடம்­பெ­யர்­வது குறித்து முடி­வெ­டுக்­கும்­போது, பொது­வாக அது குடும்­பம் சார்ந்த முடி­வாக இருக்­கும். அத­னால், வாழ்க்­கைத்­து­ணைக்­கும் உறு­திப்­பாடு இல்­லை­யெ­னில், அந்­தத் திற­னா­ளர்­கள் வேறு நாடு­க­ளைத் தெரி­வு­செய்­யக்­கூ­டும்," என்­றார் திரு டான்.

பாது­காப்பு அம்­சங்­கள் குறித்து விளக்­கி­ய­போது, போலிச் சம்­பள உறு­தி­மொழி அளிப்­போ­ரைக் கண்­ட­றி­வ­தற்­காக ஏற்­கெ­னவே இடம்­பெ­றும் பின்­ன­ணிச் சரி­பார்ப்பு நட­வ­டிக்­கை­கள் புதிய 'ஒன் பாஸ்' விண்­ணப்­பங்­க­ளுக்­கும் நீட்­டிக்­கப்­படும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

அத்­து­டன், 'ஒன் பாஸ்' அட்­டைக்கு மாற விரும்­பும் எம்ப்­ளாய்­மண்ட் பாஸ் அட்­டை­தா­ரர்­க­ளின் வரு­மான வரித் தாக்­கல்­கள் குறித்­தும் மனி­த­வள அமைச்சு, சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யத்­து­டன் இணைந்து ஆய்­வு­செய்­யும்.

'ஒன் பாஸ்' அட்டை கேட்டு விண்­ணப்­பிக்­கும் வெளி­நாட்­டி­னர், குறைந்­தது 500 மில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் சந்தை மூல­த­னம் கொண்ட அல்­லது குறைந்­தது ஓராண்­டா­வது, குறைந்­த­பட்­சம் 200 மில்­லி­யன் ஆண்டு வரு­மா­னம் ஈட்­டிய நிறு­வனத்­தில் வேலை செய்­து­வர வேண்­டும் அல்­லது சிங்­கப்­பூ­ரில் அத்­த­கைய நிறு­வனத்­தில் பணி­யாற்ற வேண்­டும்.

'ஒன் பாஸ்' அட்­டை­ வைத்திருப்போர் தங்­களது தொழில்சார் நட­வ­டிக்­கை­கள் குறித்­தும் ஆண்டு வரு­மா­னம் குறித்­தும் ஒவ்வோர் ஆண்டும் மனி­த­வள அமைச்­சுக்­குத் தக­வல் தெரி­விக்க வேண்­டும்.

அவர்­க­ளின் 'ஒன் பாஸ்' புதுப்­பித்­த­லுக்­குத் தகு­தி­யா­ன­வையா என்­பதை மதிப்­பி­டும்­போது, அந்த விவ­ரங்­களை அமைச்சு பயன்­ப­டுத்­திக்­கொள்­ளும் என்று திரு டான் குறிப்­பிட்­டார்.

'ஒன் பாஸ்' விண்­ணப்­ப­தா­ரர்­கள் வேலை­யில் நீடிப்­ப­தற்­கான கால வரம்பு விதிக்­கப்­ப­டாது என்­ற­போ­தும், அதை ஒரு வருகை அல்­லது பயண ஆவ­ண­மா­கப் பயன்­ப­டுத்­தி­கொள்­ள­லாம் எனத் தவ­றா­கக் கரு­த­லா­காது என்­றும் அவர் தெளி­வு­ப­டுத்­தி­னார்.

எவ்­வித சரி­யான கார­ண­மும் இன்றி, நீண்­ட­கா­ல­மாக செய­லற்ற பொரு­ளி­யல் நிலை நீடித்­தால், 'ஒன் பாஸ்' அனு­ம­தியை ரத்து செய்­யும் உரிமை தமது அமைச்­சுக்கு உண்டு என்­றும் அமைச்­சர் டான் கூறி­னார்.

'ஒன் பாஸ்' அட்­டை­தா­ரர்­கள் பல வழி­க­ளி­லும் பங்­க­ளிக்க முடி­யும் என்று அவர் சொன்­னார்.

எடுத்­துக்­காட்­டாக, 'ஒன் பாஸ்' அட்டை பெற்று பணி­யா­ளர்­க­ளாக இருப்­ப­வர்­கள் புதிய தொழிற்­பி­ரிவை சிங்­கப்­பூ­ருக்­குக் கொண்­டு­வ­ர­லாம் என்­றும் தொழில்­முனை­வர்­கள் இங்கு நிறு­வ­னம் தொடங்­க­லாம் என்­றும் சிலர் உள்­ளூர் நிறு­வ­னங்­களுக்­கும் நிபு­ணர்­க­ளுக்­கும் ஆலோ­சனை வழங்­க­லாம் என்­றும் திரு டான் விளக்­கி­னார்.

"திறமை என்று வரும்­போது சிங்­கப்­பூர் தற்­காப்பு ஆட்­டத்­தைக் கையி­ல் எடுக்க முடி­யாது," என்­றார் அவர்.

'அதிகமான சிங்கப்பூரர்களுக்கு வெளிநாட்டு அனுபவம் தேவை'

அனைத்துலக நிறுவனங்களில் தலைமைத்துவப் பொறுப்புகளை ஏற்க அதிகமான சிங்கப்பூரர்களுக்கு வெளிநாட்டு அனுபவம் தேவை என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியிருக்கிறார்.

அதற்கு, அவர்களுக்கு ஆதரவு வழங்க நமது அரசாங்க அமைப்புகள் பல நல்ல திட்டங்களைக் கொண்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

உலகத் திறனாளர்களை ஈர்ப்பதற்கான அரசாங்கத்தின் கொள்கைகளானது, உள்ளூர் திறனாளர் வளத்தைப் பெருக்குவதை விரைவுபடுத்துவதற்குமானது என்று திரு டான் சொன்னார்.

எடுத்துக்காட்டாக, எம்ப்ளாய் மண்ட் பாஸ் விண்ணப்பங்களை மதிப்பிடுவதற்கான 'காம்பஸ்' திட்டத்தைப் பற்றி அவர் குறிப்பிட்டார். அத்திட்டம், ஒரு நிறுவனத்தில் இருக்கும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்பர்களில் எத்தனை பேர் உள்ளூர்வாசிகள் என்பதைக் கருத்தில் கொள்கிறது.

வேலை உருமாற்ற வரைவுத் திட்டங்கள், சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் ஆசிய நிதித்துறைத் தலைவர்கள் திட்டம், இவ்வாண்டு வரவுசெலவுத் திட்ட விவாதத்தின் போது தாம் அறிவித்த சிங்கப்பூர் அனைத்துலக நிர்வாகிகள் திட்டம் போன்றவற்றையும் அமைச்சர் டான் சுட்டிக்காட்டினார்.

தங்களது தொழில் மீள்திறன், நிலைத்தன்மைக்காக அனுபவமிக்க ஊழியர்களிடம் இருந்து, குறைந்த அனுபவமுள்ள ஊழியர்கள் கற்றுக் கொள்ளும் திட்டங்களை நிறுவனங்கள் ஆர்வத்துடன் செயல் படுத்தி வருவதாகவும் அவர் சொன்னார்.