மின்ஸ்கூட்டர் விற்பனை நிலையத்தில் தீ: மூச்சுத்திணறி பெண் உட்பட 8 பேர் மரணம்

மின்ஸ்கூட்டர் விற்பனை நிலையத்தில் தீ: மூச்சுத்திணறி பெண் உட்பட 8 பேர் மரணம்

2 mins read
28fff176-37a9-4bd0-a38e-a25c5904fd57
விற்பனை நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மின்சார ஸ்கூட்டர்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின. பழுதடைந்த மின்னேற்றியின் காரணமாக தீப்பிடித்திருக் கலாம் என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. முழுமையான காரணம் இன்னும் வெளி வரவில்லை. படம்: இந்திய ஊடகம் -

இந்­தி­யா­வில் மின்­சார ஸ்கூட்­டர் விற்­பனை நிலை­யத்­தில் ஏற்­பட்ட தீவி­பத்­தில் எட்­டுப் பேர் உயி­ரி­ழந்­த­னர்; 11 பேர் படு­கா­ய­முற்­ற­னர்.

நாட்­டி­லேயே மின்­சார வாக­னம் தொடர்­பாக நிகழ்ந்­துள்ள ஆகப்­பெ­ரிய உயி­ரி­ழப்பை ஏற்­ப­டுத்திய சம்­ப­வம் இது என்று ஊட­கங்­கள் குறிப்­பி­டு­கின்­றன.

மேலும், இவ்­வாண்­டில் மின்­சார ஸ்கூட்­டர் தொடர்­பாக நிகழ்ந்த தீச்­சம்­ப­வங்­களில் இது­வும் ஒன்று.

தெலுங்­கானா மாநி­லம் செகந்­தி­ரா­பாத் ரயில் நிலையம் அருகில் உள்ள விற்­பனை நிலை­யத்­தில் திங்­க­ளன்று இரவு திடீ­ரென தீ மூண்­டது.

'ரூபி லாட்ஜ்' என்­னும் ஹோட்­ட­லின் அடித்­த­ளத்­தில் உள்ள அந்த விற்­பனை நிலை­யத்­தில் அப்­போது இரு­ப­துக்­கும் மேற்­பட்ட மின்­சார ஸ்கூட்­டர்­கள் இருந்­த­தா­க­வும் காவல்­துறை அதி­கா­ரி­கள் நேற்­றுக் காலை கூறி­னர். தீய­ணைப்பு வாக­னங்­கள் விரைந்து சென்று தீயை கட்­டுக்­குள் கொண்­டு­வந்­தன.

இருப்­பி­னும், ஹோட்­ட­லில் தங்­கி­யி­ருந்த எட்­டுப் பேர் புகை­மூட்­டத்­தில் மூச்­சுத்­தி­ணறி இறந்­து­விட்­ட­னர். அங்­கி­ருந்த மேலும் 11 பேர் காயங்­க­ளு­டன் ஹைத­ரா­பாத் காந்தி அரசு மருத்துவமனையில் அனு­ம­திக்­கப்­பட்டுள்­ள­னர். இவர்­களில் சில­ரின் நிலை கவ­லைக்­கி­ட­மாக உள்­ள­தா­கக் கூறப்­பட்­டது. விற்­பனை நிலை­யத்­தில் இருந்த மின்­சார ஸ்கூட்­டர்­கள் அனைத்தும் எரிந்து நாச­மா­யின.

இறந்தோரில் ஒருவர் பெண். மேலும், சென்னையைச் சேர்ந்த சீதாராம், பாலாஜி என்னும் இருவரும் உயிரிழந்தோரில் அடங்குவர்.

பழு­த­டைந்த மின்­னேற்­றி­யின் கார­ண­மாக தீ மூண்­டி­ருக்­கக்­

கூ­டும் என்று ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்து உள்­ளது. இருப்­பி­னும் முழு­மை­யான கார­ணத்­தைக் கண்­ட­றிய புலன்­வி­சா­ரணை தொட­ரு­கிறது.

மின்­சார ஸ்கூட்­டர்­கள் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த இடத்­திலிருந்து தீ கிளம்­பி­ய­தாக செகந்­தி­ரா­பாத் நகர காவல்­துறை அதி­காரி சன்­தனா தீப்தி என்­ப­வர் ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­தி­டம் கூறி­னார்.

மித­மிஞ்­சிய மின்­னேற்­றத்­தால் மின்­னேற்றி சூடாகி தீப்­பி­டித்­ததா அல்­லது வேறெங்­கா­வது தீப்­பி­டித்து வாக­னங்­க­ளுக்­குப் பர­வி­யதா என்­பது பற்றி விசா­ரிக்­கப்­பட்டு வரு­

வ­தாக அவர் சொன்­னார்.

நான்கு மாடி­க­ளைக் கொண்ட ஹோட்­டல் முழு­வ­தும் புகை பர­வி­ய­தால் அங்­கி­ருந்­தோரை வெளி­யேற்ற காவல்­து­றை­யி­ன­ரும் தீய­ணைப்­பா­ளர்­களும் பாரந்­தூக்­கி

க­ளின் உத­வி­யு­டன் மீட்­புப் பணி­களில் ஈடு­பட்­ட­னர்.

ஹோட்­டல் சன்­னல்­க­ளி­லி­ருந்து அதி­க­மான கரும்­புகை வெளி­யே­றும் படங்­கள் ஊட­கங்­க­ளின் இணை­யத்­த­ளங்­களில் காணப்­பட்­டன. சம்பவம் நிகழ்ந்தபோது ஹோட்டலில் 40க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்தனர். உயிர்பிழைக்க சிலர் சன்­னல்­கள் வழியே வெளியே குதித்­த­னர்.

ஹோட்­ட­லின் முதல் மற்­றும் இரண்­டா­வது மாடி­களில் இருந்­தோரே அதி­கம் பாதிக்­கப்­பட்­ட­தா­க­வும் மர­ண­ம­டைந்­தோ­ரில் பெரும்­பா­லா­னோர் அந்த இரு மாடி­களில் தங்கி இருந்­த­வர்­கள் என்­றம்

ஹைத­ரா­பாத் நக­ரத் தலைமை காவல்­துறை அதி­காரி சி.வி. ஆனந்த் ஏஎன்ஐ செய்தி நிறு­வ­னத்­தி­டம் கூறி­னார்.

உயிரிழந்தோரின் குடும்ப

ங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் தரப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் மின் ஸ்கூட்டர் தீச்சம்பவம் நிகழ்ந் தது. அச்சம்பவத்தில் ஆடவர் ஒரு வரும் அவரது மகளும் உயிரிழந் தனர்.