கொவிட்-19 தடுப்பூசியை தேசிய குழந்தைப்பருவ தடுப்பூசிப் பட்டியலில் சேர்க்கும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்றுச் சூழல் தொடர்ந்து மாற்றமடைவதாக உள்ளது என்றும் புதிய தரவுகளின் அடிப்படையில் பரிந்துரைகள் முன்வைக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
முழுமையாக கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட 18 வயதுக்குட்பட்ட 100,000 பேரில் 5.7 பேர், கொரோனா தொற்றியபின் 'எம்எஸ்ஐ-சி' எனப்படும் அரிய, கடுமையான அழற்சி நோய்க்
குறியால் பாதிக்கப்பட்டனர்.
முழுமையாக கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 18 வயதுக்குட்பட்டவர்களிடத்தில் இந்த பாதிப்பு 100,000 பேருக்கு 38 பேர் என்ற விகிதத்தில் இருந்தது.
இயோ சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் யிப் ஹோன் வெங் எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து, அமைச்சர் ஓங் நாடாளுமன்றத்தில் நேற்று இந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டார். 12 முதல் 17 வயதுக்குட்பட்டோருக்கு 'நோவாவேக்ஸ்' தடுப்பூசி போட அனுமதிப்பது குறித்து சுகாதார அறிவியல் ஆணையமும் வல்லுநர் குழுவும் ஆராய்ந்து வருகின்றன என்று அவர் கூறினார்.
இவ்வாண்டு பிப்ரவரி மாதம், 18 வயதும் அதற்கு மேற்பட் டோருக்கும் 'நோவாவேக்ஸ்' தடுப்பூசி போட சுகாதார அறிவியல் ஆணையம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், முதலில் தோன்றிய கொவிட்-19 கிருமியையும் பின்னர் தொடர்ந்த அதன் ஓமிக்ரான் திரிபையும் எதிர்கொள்ளவல்ல இருதிறன் (bivalent) தடுப்பூசிகள் சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் ஓங் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் சிங்கப்பூர் உடன்பாடு செய்துகொண்டுள்ளது என்றும் அதற்கான ஏற்பாடுகள் உறுதிசெய்யப்பட்டபின் கூடுதல் விவரங்கள் பகிர்ந்துகொள்ளப்படும் என்றும் அவர் சொன்னார்.
ஓமிக்ரான் பிஏ.5 திரிபு உள்ளிட்ட கொவிட்-19 கிருமிகளால் ஏற்படும் கடுமையான தொற்றுக்கு எதிராக இப்போதுள்ள தடுப்பூசிகளே அதிகப் பாதுகாப்பு வழங்கு கின்றன என்றும் அவர் வலியுறுத்திக் கூறினார்.
"ஆதலால், இன்னொரு தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி பெற்றுள்ளவர்கள், மேலும் தாமதிக்காமல் அதனைப் போட்டுக்கொள்ளுங்கள்.
"சமூகத்தில் கொவிட்-19 தொற்று இன்னும் பரவி வருவதால் கிருமித் திரிபுக்கேற்ப குறித்த தடுப்பூசிகளுக்காகக் காத்திருக்க வேண்டாம்," என்று பொதுமக்களை அமைச்சர் ஓங் கேட்டுக்கொண்டார்.
தடுப்பூசி அடிப்படையிலான பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளை நீக்குவது குறித்து செங்காங் குழுத்தொகுதி (பாட்டாளிக் கட்சி) உறுப்பினர் ஜேமஸ் லிம் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த திரு ஓங், "இன்னொரு கொரோனா அலையை எதிர்பார்ப்பதால் அவை நடைமுறைப்படுத்தப்பட்டன என்றும் அவை நெருக்கடி நிர்வாகத்தின் ஒரு பகுதி," என்றார்.
மேலும் அவர் குறிப்பிடு கையில், "500க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் ஒன்றுகூடும் நிகழ்வுகள் போன்ற சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தடுப்பூசி அடிப் படையிலான பாதுகாப்பு நிர்வாக நடைமுறை அவசியமாகிறது.
"இருப்பினும் முகக்கவசத்தைக் கட்டாயப்படுத்துவது போன்ற நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்துவதில் முதலாளிகளுக்கும் நிறுவனங்களுக்கும் நீக்குப்போக்கு உள்ளது.
"தடுப்பூசித் தேவைகள் குறித்து அரசாங்கம் மறுஆய்வு செய்யும்போது, தடுப்பூசி அடிப்படையிலான பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் குறித்தும் ஆராயப்படும்," என்றார் திரு ஓங்.
அடுத்த சில மாதங்களுக்குள் இந்த மறுஆய்வு நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடைமுறைகளை பொதுத் துறையினருக்கு முழுமையாக நீக்கு வது பற்றி அரசாங்கம் பரிசீலிக்குமா என்று திரு லிம் கேட்டபோது, முதி யோர் உள்ளார்களா, கூட்டம் கூடு கிறதா என்று வெவ்வேறு சூழ்நிலை கள் எதிர்பார்க்கப்படுவதால் அவ் வாறு செய்வது கடினம் என்றார் அமைச்சர் ஓங்.

