வேலைக்காக குவைத் சென்ற தமிழக ஆடவர் சுட்டுக்கொலை

வேலைக்காக குவைத் சென்ற தமிழக ஆடவர் சுட்டுக்கொலை

2 mins read

தமிழ்­நாட்­டில் இருந்து குவைத்­திற்கு வேலைக்­குச் சென்ற ஆட­வர் ஒரு­சில நாள்­க­ளி­லேயே சுட்­டுக்­கொல்­லப்­பட்ட அதிர்ச்­சிச் சம்­ப­வம் நிகழ்ந்­துள்­ளது.

திரு­வா­ரூர் மாவட்­டம் கூத்­தா­நல்­லூர் தாலு­கா­வில் உள்ள லட்­சு­மண்­குடி என்­னும் கிரா­மத்­தைச் சேர்ந்த முத்­துக்­கு­ம­ரன், 30, (படம்) என்­னும் அவர் இம்­மா­தம் 3ஆம் தேதி ஹைத­ரா­பாத் நிறு­வ­னம் ஒன்­றின் மூலம் குவைத்­துக்கு வேலை­தே­டிச் சென்­றார். இவ­ருக்கு வித்யா என்­னும் மனை­வி­யும் இரு மகன்­களும் உள்­ள­னர்.

துபாய் சென்ற இரு நாள்­களில் தமக்கு வேலை பிடிக்­க­வில்லை என்று தமது குடும்­பத்­தி­ன­ரி­டம் தெரி­வித்­தார். 6ஆம் தேதி­வரை தொடர்­பில் இருந்த முத்­துக்­

கு­ம­ரனை மறு­நாள் தொடர்­பு­கொள்ள இய­ல­வில்லை.

ஆனால் அவர் உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக 9ஆம் தேதி (கடந்த வெள்­ளிக்­கி­ழமை) தக­வல் வந்­த­தும் அவ­ரது குடும்­பத்­தி­னர் துடி­து­டித்­துப்போனார்­கள்.

அலு­வ­லக உத­வி­யா­ளர் வேலைக்­கா­கப் பணம் கொடுத்து துபாய் சென்ற முத்­துக்­கு­ம­ர­னுக்கு பாலை­வ­னத்­தில் ஒட்­ட­கம் மேய்க்­கும் வேலை தரப்­பட்­ட­தா­கத் தெரி­கிறது. அந்த வேலை­யைச் செய்ய மறுத்­த­தால் அவ­ருக்­கும் அவ­ரது முத­லா­ளிக்­கும் இடையே வாக்­கு­வா­தம் நிகழ்ந்­தி­ருக்­கிறது.

தொடர்ந்து, குவைத்­தில் உள்ள இந்­தி­யத் தூத­ர­கத்­தைத் தொடர்பு­ கொள்ள முத்­துக்­கு­ம­ரன் முயன்­ற­தால் அவ­ரது முத­லாளி சினம் கொண்­ட­தா­க­வும் அவரை அடித்து உதைத்து சித்­தி­ர­வதை செய்­த­தா­க­வும் தெரி­ய­வந்­தது.

இதற்­கி­டையே, குவைத்­தின் 'ஐமன் மேட் நியூஸ்' என்­னும் செய்­தித்­தா­ளில் தமி­ழ­கத்­தைச் சேர்ந்த 30 வயது ஊழி­யர் ஒரு­வர் சுடப்­பட்டு மாண்­ட­தா­க­வும் இது தொடர்­பாக 24 வயது குவைத் குடி­ம­கன் கைது செய்­யப்­பட்­ட­தா­க­வும் செய்தி வெளி­யா­னது.

மாண்­டது முத்­துக்­கு­ம­ரன் என்­பதை குவைத்­தில் வேலை செய்­யும் அவ­ரது உற­வுக்­கா­ரர் ஒரு­வர் உறு­திப்­ப­டுத்­தி­னார். சம்­ப­வம் தொடர்­பா­கத் தமக்கு முத்­துக்­கு­ம­ர­னின் மனைவி மனு தந்­துள்­ள­தா­க­வும் தேவை­யான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் திரு­வா­ரூர் மாவட்ட ஆட்­சி­யர் காயத்ரி கிருஷ்­ணன் தெரி­வித்­துள்­ளார்.