இவ்வாண்டின் தீமிதித் திருவிழாவில் நேர்த்திக்கடன்கள் செலுத்த விரும்பும் பக்தர்கள் அதற்காக வரும் வெள்ளிக்கிழமை (16 செப்டம்பர்) முதல் இணையத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயில் தீமிதித் திருவிழா அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி நடைபெறுகிறது.
தீமித் திருவிழா அன்று பூக்குழி இறங்கும் பக்தர்களும் அதற்கு முன்பாக பால்குடம், அங்கப்பிரதட்சனம், கும்பிடுதண்டம் போன்ற நேர்த்திக்கடன்களைச் செலுத்த விரும்பும் பக்தர்களும் இணையம் வழி முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று இந்து
அறக்கட்டளை வாரியம் தகவல் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
இணைய முகவரி: https://heb.org.sg/fw2022

