லி லிங் யுங், 37, இங்கிலிஷ் கால்வாயை நீந்திக் கடந்த முதல் சிங்கப்பூர்ப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இங்கிலாந்தின் டோவர் நகருக்கு அருகே உள்ள சாம்ஃபியர் ஹோ எனும் இடத்திலிருந்து, சென்ற ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு 1 மணிக்கு அவர் இந்தச் சாதனை நீச்சலைத் தொடங்கினார்.
கும்மிருட்டில் 19 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் அடுத்த 12 மணி நேரம் 54 நிமிடங்களுக்கு நீந்திய அவர் பிரான்சின் வடக்குப் பகுதியில் உள்ள கிரிஸ் நெஸ் முனையில் கரையேறினர். லி லிங் யுங் நீந்திக் கடந்த தொலைவு 34 கிலோ மீட்டர்கள்.
நீச்சலின்போது அவரது கணவரும் நீச்சல் பயிற்றுவிப்பாளரும் ஒரு படகில் அவரைத் தொடர்ந்தனர்.
கடந்த ஈராண்டாக இந்தச் சாதனையை நிகழ்த்துவதற்காகக் கடும் பயிற்சி மேற்கொண்டதாகக் கூறினார் லி லிங் யுங். பருவ நிலையால் இடையில் நீந்தும் பாதை சற்றே மாறியபோதும் மனம் தளராமல் இலக்கை எட்டிய அனுபவத்தை அவர் பகிர்ந்துகொண்டார்.
சிங்கப்பூர் வரலாற்றாளரான தம் பிங் ஜின், 2005ஆம் ஆண்டு இங்கிலிஷ் கால்வாயை நீந்திக் கடந்த முதல் சிங்கப்பூரர் ஆவார்.

