வேலைவாய்ப்பு அதிகரிப்பு

வேலைவாய்ப்பு அதிகரிப்பு

3 mins read

மனிதவள அமைச்சின் வேலை நிலவர அறிக்கை

சிங்­கப்­பூ­ரில் கடந்த ஜூன் மாதம் 126,100 வேலை­யி­டங்­களே காலி­யாக இருந்­தன. தொடர்ந்து ஏழு மாதங்­க­ளாக காலி­யாக இருக்­கும் பணி­யி­டங்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்த நிலை­யில் முதல்­மு­றை­யாக இந்த ஆண்­டின் இரண்­டாம் காலாண்­டில் இந்த எண்­ணிக்கை குறைந்­துள்­ளது.

வேலை­யின்மை விகி­தம் குறைந்­தா­லும் வேலை தேடு­வோ­ருக்கு வாய்ப்­பு­கள் அதி­க­மா­கவே இருந்­தன.

ஆக அதி­க­மாக, இந்த ஆண்­டின் முதல் காலாண்­டில் 128,100 வேலை­கள் நிரப்­பப்­ப­டா­மல் இருந்­தன. அதற்கு முந்­தைய காலாண்­டில் 117,100 வேலை­யி­டங்­களே காலி­யாக இருந்­தன.

இந்த ஆண்­டின் இரண்­டாம் காலாண்­டில் வேலை­தே­டு­வோ­ருக்­கும் காலி­யி­டங்­க­ளுக்­கும் இடை­யி­லான விகி­தம் 2.53 ஆகப் பதி­வா­னது. அதா­வது வேலை இல்­லாத ஒரு­வ­ருக்கு இரண்­டுக்­கும் மேற்­பட்ட காலி­யி­டங்­கள் காத்­தி­ருந்­தன. இந்த ஆண்டு மார்ச் மாதத்­தில் அந்த எண்­ணிக்கை 2.42 மட்­டுமே. வேலை­யற்­றோர் எண்­ணிக்கை குறைந்­தி­ருப்­பதை இது காட்­டு­கிறது.

இந்த ஆண்­டின் இரண்­டாம் காலாண்­டில் மொத்த வேலை­வாய்ப்பு 66,500க்கு உயர்ந்­த­தாக மனி­த­வள அமைச்சு அதன் வேலைச் சந்தை அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளது. அதற்கு முந்­தைய காலாண்­டில் பதி­வான 42,000 எனும் எண்­ணிக்­கை­யை­விட இது கணி­ச­மான அளவு அதி­கம். உல­க­ளா­விய நிதி நெருக்­கடி நில­விய 2008ஆம் ஆண்­டின் இரண்­டாம் காலாண்­டுக்­குப் பிறகு பதி­வான ஆக அதிக எண்­ணிக்கை இது.

தற்­போது மொத்த வேலை­வாய்ப்பு எண்­ணிக்கை, கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லுக்கு முன்­னர் 2019ஆம் ஆண்டு டிசம்­பர் மாதத்­தின் எண்­ணிக்­கை­யில் 99.5 விழுக்­காட்டை எட்­டி­யி­ருப்­ப­தாக மனி­த­வள அமைச்­சின் அறிக்கை குறிப்­பிட்­டது.

இந்த ஆண்­டின் இரண்­டாம் காலாண்­டில் வேலை­வாய்ப்பு பெற்­ற­வர்­களில் அதி­க­மா­னோர் வெளி­நாட்­டி­னர்.

ஏப்­ரல் மாதம் எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­ட­தை ­அடுத்து கட்­டு­மா­னம், உற்­பத்தி ஆகிய துறை­கள் சார்ந்த நிறு­வ­னங்­கள் மீண்­டும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்­கத் தொடங்­கி­யது இதற்­குக் கார­ணம்.

இந்த ஆண்டின் முற்பாதியில் 'ஒர்க் பெர்­மிட்', 'ஒர்க் பாஸ்' எனும் வேலை அனு­ம­திச்­சீட்­டு­கள் 80,900 பேருக்­கும் 'எஸ் பாஸ்', 'எம்ப்­ளாய்­மெண்ட் பாஸ்' எனும் வேலை அனு­மதி ஏறக்­கு­றைய 14,000 பேருக்­கும் வழங்­கப்­பட்­டன.

இருப்­பி­னும் வெளி­நாட்டு ஊழி­யர் எண்­ணிக்கை கிரு­மிப்­ப­ர­வ­லுக்கு முன்­பி­ருந்த நிலை­யு­டன் ஒப்­பி­டு­கை­யில் 10 விழுக்­காடு குறைவு என்று அமைச்சு தெரி­வித்­தது.

கடந்த ஜூன் மாத நில­வ­ரப்­படி, புதிய வேலை­களில் சேர்ந்த சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­கள் ஆகி­யோ­ரின் எண்­ணிக்கை, கொவிட்-19 நோய்ப்­ப­ர­வ­லுக்கு முன்­பி­ருந்­த­தை­விட 4.2 விழுக்­காடு உயர்ந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இவர்­களில் அதி­க­மா­னோ­ருக்கு நிதி, காப்­பீட்­டுச் சேவை, தக­வல், தொடர்பு, தொழில்­மு­றைச் சேவை­கள் ஆகிய துறை­களில் வேலை கிடைத்­தது.

இந்த ஆண்டு ஜூலை மாதம், சிங்­கப்­பூ­ரின் ஒட்­டு­மொத்த வேலை­யின்மை விகி­தம் மேலும் குறைந்து 2.1 விழுக்­காடு ஆனது.

இவ்­வே­ளை­யில், ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்­டோர் எண்­ணிக்கை 990க்குக் குறைந்­தது. அதா­வது, 10,000 ஊழி­யர்­களில் ஐந்து பேர் ஆட்­கு­றைப்­பால் பாதிக்­கப்­பட்­ட­னர்.

குறிப்­பாக உற்­பத்­தித் துறை­யில் ஆட்­கு­றைப்பு எண்­ணிக்கை மிக­வும் குறைந்து காணப்­பட்­டது. உலோ­கப் பொருள்­கள், இயந்­தி­ரங்­கள், கரு­வி­கள் போன்­ற­வற்றை உற்­பத்தி செய்­யும் நிறு­வ­னங்­களும் மின்­னி­லக்­கப் பொருள்­களை உற்­பத்தி செய்­யும் நிறு­வ­னங்­களும் அதி­கம் ஆட்­கு­றைப்பு செய்­ய­வில்லை.

வர்த்­தக நிறு­வ­னங்­க­ளின் நிதி மற்­றும் செயல்­மு­றை­யில் ஏற்­பட்ட மாற்­றமே ஆட்­கு­றைப்பு நட­வ­டிக்­கை­கள் குறைந்­த­தற்­குக் கார­ணம் என்று மனி­த­வள அமைச்சு சொன்­னது.

அதே­வே­ளை­யில் இந்த ஆண்­டின் இரண்­டாம் காலாண்­டில் ஆட்­கு­றைப்­புக்­கான பொது­வான கார­ணங்­கள், விலை­வாசி உயர்­வும் குறை­வான வர்த்­த­க­மும் என்று அமைச்சு கூறி­யது.

ஆட்­சேர்க்கை விகி­தம் இரண்­டாம் காலாண்­டில் 2.6 விழுக்­காட்­டிற்கு உயர்ந்­தது. இது 2014ஆம் ஆண்டு பதி­வான எண்­ணிக்­கைக்கு ஈடா­னது.

வேலை­யி­லி­ருந்து வில­கி­யோர் எண்­ணிக்கை தொடர்ந்து நான்­கா­வது காலாண்­டாக 1.7 விழுக்­கா­டாக நிலை­யாக இருந்­தது.

நீண்­ட­கால வேலை­யின்மை விகி­தம், அதா­வது 25 வாரங்­கள் அல்­லது அதற்­கு­மேல் பணி­யில் இல்­லா­தோர் விகி­தம், இந்த ஆண்டு ஜூன் மாதத்­தில் 0.7 விழுக்­கா­டா­கப் பதி­வா­னது.

தங்­கு­மி­டம், விமா­னப் போக்கு ­வ­ரத்து ஆகிய துறை­களில் ஆட்­சேர்ப்பு விகி­தம் உயர்ந்­த­தாக அமைச்சு கூறி­யது.

அனைத்­து­ல­கப் பய­ணி­க­ளின் வரு­கை­யால் சுற்­றுப்­ப­ய­ணத் துறை, விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை ஆகி­யவை தொடர்ந்து வளர்ச்சி காணும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.