விமானநிலைய கட்டணம் நவம்பர் 1 முதல் கூடும்

விமானநிலைய கட்டணம் நவம்பர் 1 முதல் கூடும்

3 mins read

சாங்கி விமா­ன­நி­லை­யத்­தில் இருந்து விமா­னத்­தில் புறப்­பட்­டுச் செல்­லும் பயணி­கள் நவம்­பர் 1ஆம் தேதி முதல் அதிக விமா­னக் கட்­ட­ணத்­தைச் செலுத்த வேண்டி இருக்­கும்.

சாங்கி விமா­ன­நி­லை­யத்­தில் இருந்து புறப்­படும் விமா­னங்­களில் செல்­லும் பயணி­கள் புறப்­பாட்­டுக் கட்­ட­ண­மாக இப்­போது $52.30 செலுத்­து­கி­றார்­கள்.

இதில் $35.40 தொகையைப் பய­ணிகள் சேவை மற்­றும் பாது­காப்­புக் கட்­ட­ண­மாக சாங்கி விமா­ன­நி­லை­யக் குழு­மம் வசூ லிக்கிறது.

விமா­ன­நி­லைய மேம்­பாட்­டுத் தீர்­வை­யாக $10.80 தொகை­யை­யும் விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் தீர்­வை­யாக $6.10 தொகை­யை­யும் அர­சாங்­கம் வசூ­லிக்­கிறது. இந்­தக் கட்­ட­ணம் வரும் நவம்­பர் 1ஆம் தேதி முதல் உய­ரும் என்று நேற்று அறி­விக்­கப்­பட்­டது.

அதன்­படி, மொத்த புறப்­பாட்­டுக் கட்டணம் $6.90 அதி­க­ரித்து $59.20 ஆக இருக்­கும். அதே­போல, இந்­தக் கட்­ட­ணம் 2023 ஏப்­ர­லில் $3 கூடி $62.20 ஆக­வும் 2024 ஏப்­ர­லில் மேலும் $3 கூடி $65.20 ஆக­வும் உய­ரும் என்று அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ண­மாக பாதிக்­கப்­பட்டு இருந்த அனைத்­து­லக விமா­னப் பய­ணத் துறை தொடர்ந்து மீட்சி கண்டு வரு­கிறது. இந்­தச் சூழ­லில் கட்­ட­ணம் உய­ரு­கிறது.

நவம்­பர் 1ஆம் தேதிக்கு முன்­ன­தாக கொடுக்­கப்­பட்டு இருக்­கும் பய­ணச் சீட்டு­க­ளை வைத்துள்ள பய­ணி­கள் அதிக கட்­ட­ணத்­தை­யும் தீர்­வை­க­ளை­யும் செலுத்த வேண்­டிய தேவை இல்லை என்று சிங்­கப்­பூர் சிவில் விமா­னப் போக்கு ­வ­ரத்து ஆணை­ய­மும் சாங்கி விமா­ன­நி­லை­யக் குழு­ம­மும் கூட்­ட­றிக்­கை­யில் தெரி­வித்­தன.

இடை­வ­ழிப் பய­ணி­க­ளுக்­கான புறப்­பாட்­டுக் கட்­ட­ணம் மாறாது. இவர்­கள் ஒவ்­வொரு விமா­னப் பய­ணத்­திற்­கும் விமா­ன­நி­லை­யக் கட்­ட­ண­மாக $9 தொகையைத் தொடர்ந்து செலுத்­து­வர்.

இத­னி­டையே, விமா­னங்­களை நிறுத்தி வைப்­ப­தற்­கும் தரை­யி­றங்­கு­வ­தற்­கும் விமான நிறு­வ­னங்­களும் அதி­கக் கட்டணத்­தைச் செலுத்த வேண்டி இருக்கும் என்று இந்த இரண்டு அமைப்பு­களும் தெரி­வித்­தன.

வசூ­லிக்­கப்­படும் கட்­ட­ணங்­களும் தீர்வை­யும் சாங்கி விமா­ன­நி­லை­யக் குழு­மத்­தின் செயல்­மு­றை­க­ளுக்கு ஆகும் செலவை ஈடு­செய்­யப் பயன்­ப­டுத்­தப்­படும். விமான முனை­யங்­களை மேம்­படுத்தவும் எதிர்­கால மேம்­பாட்­டுத் திட்டங்­களுக்கும் அந்­தத் தொகை செல­வி­டப்­படும்.

சிங்­கப்­பூர் சிவில் விமா­னப் போக்கு­வரத்து ஆணை­யத்­தின் ஒழுங்­கு­முறை செயல்­க­ளுக்­கும் விமா­னப் பயண மைய உரு­வாக்­கத்­திற்­கும் அதில் ஒரு பகுதி செல­வி­டப்­படும் என்று கூட்­ட­றிக்கை தெரி­வித்­தது.

கொவிட்-19க்குப் பிறகு உலக விமா­ன­நி­லைய மையம் என்ற சிங்­கப்­பூ­ரின் நிலையை மறு­ப­டி­யும் பலப்­ப­டுத்­து­வ­தற்கு இந்த ஆணை­யம் பல முயற்­சி­களை எடுத்­து­வ­ரு­கிறது. இதன் கார­ண­மாக செல­வி­னங்­கள் அதி­க­ரிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

உரு­வாகி வரும் சாங்கி விமா­ன­நிலையம் முனை­யம் 5ன் பணி­கள் இரண்டாண்டு இடை­வெ­ளிக்­குப் பிறகு மறு­படி­யும் தொடங்கி இருக்­கின்­றன.

அந்­தப் பிரம்­மாண்ட முனை­யம் 2030 நடுப்­ப­கு­தி­யில் கட்டி முடிக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அப்­போது அது ஆண்­டுக்கு 50 மில்­லி­யன் பய­ணி­களுக்குச் சேவை­யாற்­றும்.

இது முனை­யம் 1 மற்­றும் முனை­யம் 3 இரண்­டும் கையா­ளும் மொத்த பயணி­களின் எண்­ணிக்­கை­யை­விட அதிகம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

சாங்கி விமா­ன­நி­லை­யக் கட்­ட­ணங்­கள் இதற்கு முன் 2018ல் திருத்­தப்­பட்டன. பய­ணி­கள் சேவை, பாது­காப்­புக் கட்­டணம் 2024 வரை ஆண்­டுக்கு $2.50 என்ற விகி­தத்­தில் கூடும் என்று அப்­போது அறி­விக்­கப்­பட்­டது.

அதன்­படி, 2020ல் அந்­தக் கட்­ட­ணம் $35.40லிருந்து சென்ற ஆண்டு $37.90 ஆக­வும் இந்த ஆண்­டின் தொடக்­கத்­தில் $40.40 ஆக­வும் ஆகி­யி­ருக்க வேண்டும். ஆனால், கொவிட்-19 தொற்று கார­ண­மாக 2021 மற்­றும் 2022ஆம் ஆண்டு­களில் அதி­க­ரிப்பு இல்லை.

அந்­தக் கட்­ட­ணம் திட்­ட­மிட்­டபடி நவம்­பர் 1 முதல் $40.40 ஆக அதி­கரிக்கும். பிறகு மீண்­டும் கூடும் என்று இந்த இரண்டு அமைப்­பு­களும் தெரி­வித்து இருக்­கின்­றன.

ஆணை­யம் வசூ­லிக்­கும் விமா­னப் போக்­கு­வ­ரத்துத் தீர்வை 2009ல் அறி­முகப்­ப­டுத்­தப்­பட்­டது. அது முதல் அந்­தத் தீர்வை முதன்­மு­த­லாக இப்­போ­து­தான் உயர்த்­தப்­ப­டு­கிறது. இப்­போது $6.10 ஆக இருக்­கும் அந்தத் தீர்வை நவம்­பர் 1ஆம் தேதி­யிலி­ருந்து $8 ஆகும்.

சாங்கி விமா­ன­நி­லை­யத்­தில் இருந்து புறப்­படும் விமா­னங்­களில் செல்­லும் பயணி­க­ளுக்கு மட்­டும்­தான் இந்­தக் கட்டணம் பொருந்­தும். இது 2023, 2024ஆம் ஆண்­டு­களில் $8 ஆகவே இருந்து வரும்.

கொவிட்-19 தொற்று கார­ண­மாக மூடப்­பட்­டி­ருந்த சாங்கி விமா­ன­நி­லைய முனை­யம் 4ல் செவ்­வாய்க்­கி­ழமை விமா­னச் சேவை தொடங்­கி­யது.

இந்த முனை­யம் ஆண்­டுக்கு 16 மில்லி­யன் பய­ணி­களைக் கையா­ளும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சாங்கியில் இருந்து புறப்பட்டுச் செல்லும் பயணிகள் செலுத்த வேண்டும்